Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்சந்த்!

Featured Replies

வெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்சந்த்!

 

ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்தின் 110வது பிறந்த  தினமான இன்று, இந்திய விளையாட்டுத்தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் தயான் சந்த் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம்

இந்திய ராணுவத்தின் தனது 16வது வயதில் இணைந்த தயான்சந்த், நிலவொளியில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர். இதனால்தான் தயான் சிங் என்ற இயற்பெயருடன் 'சந்த்' என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.' சந்த் 'என்றால் ஹிந்தி மொழியில் நிலவு என்று அர்த்தம். 'சந்த் பாய்' என்று சக வீரர்கள் அழைக்க, இவர் பெயரான தயான் சிங்கில் இருந்து, சிங் மறைந்து தயான் சந்த் என்று ஆகி விட்டது.

daya.jpg

1928ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தயான்சந்த் மொத்தம் 14 கோல்களை அடித்தார்."இந்திய ஹாக்கி மந்திரவாதி ஆம்ஸ்டர்டாமில் மேஜிக் செய்கிறார். தவறாமல் பார்க்க வாருங்கள்...!" என்று ஆம்ஸ்டர்டாம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்க அணியை 24-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் தயான் சந்த் 8 கோல்கள் அடித்தார். இவரது சகோதரர் ரூப்சிங் 10 கோல்களை அடித்தார். இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 35 கோல்களை அடித்தது. இதில் 25 கோல்கள் தயான், ரூப்சிங் சகோதரர்கள் அடித்தது.

1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. போட்டியை காண ஹிட்லரும் வந்திருந்தார். ஜெர்மனி அணியை, ஹிட்லர் முன்னிலையில் இந்திய அணி 8 கோல்கள் அடித்து வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் தயானிடம் வந்த ஹிட்லர், ''ஜெர்மனிக்கு வந்து விடுங்கள்.. இந்திய ராணுவத்தில் மேஜராக இருக்கும் உங்களுக்கு ஜெர்மனி ராணுவத்தில் அதை விட உயர்ந்த பதவி தருகிறேன்!" என்றார்.  ஆனால் "இந்திய அணியை தவிர எந்த அணிக்கும் விளையாடும் எண்ணம் இல்லை !' என்று நேரடியாக ஹிட்லரிடம் மறுப்பு தெரிவித்தார் தயான்.

chan.jpg

ஒரு ஆட்டத்தில் தயான், பல முறை கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. நடுவரிடம் சென்று, "கோல் கம்பம் சர்வதேச விதிகளின்படி அமைக்கப்படவில்லை. எனவே அளந்து பார்க்க வேண்டும்" என்றார். தயானின் கூற்றுபடி கோல்கம்பத்தின் அளவில் மாறுதல் இருந்தது.

1935ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஹாக்கி போட்டியை காண,  'ரன் மெஷின்' டான் பிராட்மேன் வந்திருந்தார். தயானின் ஆட்டத்தை பார்த்து, கிரிக்கெட்டில் ரன் அடிப்பது போலல்லவா தயான் கோல் அடிக்கிறார் என்று வியப்படைந்தார்.

நெதர்லாந்தில் ஒரு முறை, தயானின் ஹாக்கி மட்டை உடைத்து உள்ளே ஏதாவது காந்தம் இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில்,  தயானுக்கு 4 கைகளுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கைகளிலும் அவர் ஹாக்கி மட்டையை பிடித்திருப்பார். பொது இடம் ஒன்றில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்தான்.

இத்தகைய பெருமை வாய்ந்த தயானுக்கு, பாரத ரத்னா விருது வழங்காமல், மற்றொருவருக்கு வழங்கப்படுவதும் சாத்தியமாவது இந்தியாவில் மட்டும்தான்.

http://www.vikatan.com/news/article.php?aid=51648

  • தொடங்கியவர்

இந்திய விளையாட்டில் தயான் சந்த் எனும் சகாப்தம்!

 

யான் சந்த் எனும் மாயஜால மாந்த்ரீகனின் பிறந்த நாளைதான் (29 ஆகஸ்ட் 1905)இந்தியாவில் தேசிய விளையாடுத் தினமாக கொண்டாடுகிறோம். கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அலகாபாத்தில் எளிய  ராஜ்புத் வம்சத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிரான அணியை  இளைஞன் உற்சாகபடுத்த ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ இறங்கி வேண்டுமானால் ஆடேன் என்று நக்கலாகச் சொல்ல அந்தப் போட்டியில் அவன் அடித்த கோல்கள் நான்கு.

மிகப்பெரிய மின்விளக்குகள் இல்லாத காலத்தில் நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. அதனாலேயே அவர் சந்த் என அழைக்கப்பட்டார் என்பார்கள். நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக இந்திய அணி ஒன்று தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். அந்த காலக்கட்டத்தில் எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது.அந்தக் கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. 

அப்பொழுது இரண்டு பெண்கள் இவருக்கு ரசிகையாகி தொடர்ந்து வந்திருக்கிறார்கள். டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்.

dayachand_1.jpg


1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் ஒலிம்பிக் போட்டி நடந்தது.  இந்திய அணி இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்குப் பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தைப் பெற்றது. தயான்  சந்த் அடித்தது இரண்டு கோல்கள். ஒரு சுவாரசியமான விஷயம் போகிற பொழுது வழியனுப்ப வெறும் மூன்றே பேர்தான் தான் இருந்தார்கள். வருகிற பொழுது பம்பாய் நகரே வரவேற்க வந்தது.

 

 

                                          ' கண்டோர் நடுங்கும் காலன்' ஹிட்லர் தயானின் தீவிர ரசிகர்

அடுத்த ஒலிம்பிக்கிலும் அப்படியே கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி.  அமெரிக்காவோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்கள். இதில் சந்த் ஒரு எட்டு கோல்கள், அவரின் தம்பி ஒரு பத்துக் கோல்கள் அடித்தார்கள்.

பெர்லின் ஒலிம்பிக் ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது. ஒழுங்கான ஆடைகள் இல்லாமல், மூன்றாம் கம்பார்ட்மென்ட்களில் வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியை பயிற்சி போட்டியில் எதிர்கொண்டார்கள். 4-1 என்று அணி தோற்றது. என்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

பெர்லின் நகரில் இறுதிப்போட்டி. ஹிட்லர் அமர்ந்து இருந்தார். ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவைத் தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது. முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்து இருந்தது. தயான் சந்த் ஸ்பைக் ஷூவை கழற்றி எறிந்தார். வெறுங்காலோடு களம் புகுந்தார். ஆர்ப்பரிப்பு ,வியர்வை எல்லாமும் வழிய அவர் அங்கே மாயஜாலம் செய்தார். மூன்று கோல்களை அவர் அடிக்க, இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்றது.

தயான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார். வறுமை வாட்டிகொண்டு இருந்த பொழுது வேட்டை,மீன் பிடித்தல் ஆகியனவே அவருக்கு இருந்த பொழுது போக்கு

அவர் மரணமடைந்த பொழுது யாரும் கண்டுகொள்ள இல்லாமல் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு அடுத்த வருடம் அஞ்சல் தலையை மறக்காமல் வெளியிட்டோம். அவரின் பிள்ளை ஆக்லாந்து நகருக்கு வெகுகாலம் கழிந்து போன பொழுது, ஐம்பாதாண்டுகள் கடந்தும் தியான் சந்த் பிரமிக்க வைத்த இடங்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. வியன்னாவில் நான்கு கரங்கள் ஒவ்வொன்றிலும் ஹாக்கி ஸ்டிக் ஏந்தி ஒரு சிலை சிரிக்கிறது. அது தயான் சந்த் எனும் சகாப்தம்.

http://www.vikatan.com/news/article.php?aid=51623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.