Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லரசு நாடுகளின் கொள்ளை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வல்லரசு நாடுகளின் கொள்ளை!!
2015-08-20 12:55:04
6816.jpg
இலத்தீன் அமெரிக்கக் கண் டத்திலுள்ள ஒரு நாடு பெரு. அருகிலிருக்கும் ஏராளமான குட்டித்தீவுகளிலும் பாறைத்தீவுகளிலும் பல்லாண்டு காலமாக கடற்பறவைகள் தங்கி வாழ்ந்து வருகின்றன. மனித நடமாட்டம் இல்லாததால் அவற்றின் எச்ச ங்கள் அப்பகுதிகளில் மலை போல் குவிந்து கிடந்தன. இந்த இயற்கை இடுபொருளை மோப் ;பம் பிடித்த வணிகக் கப்பல்கள், இதைக் கொள்ளையடிக்க அலை யலையாய் புறப்பட்டு வந்தன.
இங்கிலாந்துடன் இதர ஐரோப் ;பிய நாடுகளும் அப்போது புதி தாக முளைத்திருந்த அமெரிக்கா வும் சேர்ந்து இங்கிருக்கும் 94 தனித்தீவுகளையும், பாறைத் தீவுகளையும் சுற்றி வளைத்தன. ஒரே சமயத்தில் ஒரு தீவின் எச்ச உரங்களை ஏற்றிச் செல்ல பலநாடுகளைச் சேர்ந்த 99 கப்பல்கள் முற்றுகையிட்டிரு ந்தன என்பதை வைத்தே, இதன் தீவிரத்தை நாம் உணர முடி யும். இந்தப் போட்டியில் 66 தீவுகளை அப்போதே அமெரி க்கா கைப்பற்றிக் கொண்டது. இன்றும்கூட இதில் 9 தீவுகள் அமெரிக்காவின் உடமையா கவே இருக்கின்றன.
1860-களில் அனைத்து ஐரோப் பிய நாடுகளின் பறவை எச்ச இறக்குமதியைக் காட்டிலும் அமெரிக்காவின் இறக்குமதி அதிகம். இங்கிலாந்து, 1847-ம் ஆண்டில் இறக்குமதி செய்த எச்சத்தின் அளவு 2 இலட்சத்து 20 ஆயிரம் தொன்கள். இறக்குமதி யான பறவைகளின் எச்சத்தை வயல்களில் இடுமாறு உழவர் களைக் கட்டாயப்படுத்தின இந்த நாடுகள்.
பெரு நாட்டின் கடற்பிரதேசத் தீவுகளில் மலை போல் குவிக்கப் பட்டிருந்த எச்சக்குவியலை, கப் பலில் ஏற்ற பணியாட்கள் பற்றாக் குறை ஏற்பட்டது. அப்போது உலக அளவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டிருந்த காலகட்டம். இதனால், சீனாவிலிருந்து தொழிலா ளர்கள் என்கிற பெயரில் அழைத்து வரப்பட்டவர்கள் இங்கே குவிக் கப்பட்டு, வேலை என்கிற பெயரில் கடுமையாகத் துன்புறுத் தப்பட்டனர். ஒரு மூன்றாம் உலக நாட்டுக்குச் சொந்தமான இயற்கை வளத்தை, வேறொரு மூன்றாம் உலக நாட்டின் மானுட உழைப் பைக் கொண்டு பணக்கார நாடுகள் கொள்ளையடித்து, தங்கள் மண் ணுக்கு வளம் சேர்த்தன.
கடற்பறவைகளின் எச்சம் ஒன் றும் அமுதசுரபி அல்லவே. சில ஆண்டுகளிலேயே அவை தீர்ந் தன. பிறகு, அந்தக் கப்பல்கள் உலகம் முழுவதும் பறவை எச்சத் தீவுகளைத் தேடியலைந்து தோற் றன. பிறகு, இவற்றின் கவனம் நைட்ரேட் வயல்களின் மீது திரும் ;பியது. இவ்வயல்கள் பெருநாட் டிலும், பொலிவியா நாட்டிலும் நிறைய இருந்தன. இதற்கிடையே எச்ச உரங்களின் விற்பனை மூலம், பெரு நாட்டில் உருவாகியிருந்த புதிய முதலாளிகளும் இவ்வயல்க ளின் மீது கவனம் செலுத்தினர். 
நைட்ரேட்டின் தேவை வெறும் உரத்துக்கானது மட்டுமல்ல. அப் போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டி ருந்த டி.என்.டி வெடிமருந்துக்காக வும் அது தேவைப்பட்டது. இதனால் நைட்ரேட் சுரண்டல் அதிகரித்தது.
விழித்துக்கொண்ட பெரு மற் றும் பொலிவியா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் நைட்ரேட் வயல்களின் மீதான அந்நிய ஆதிக் கத்தை எதிர்க்கத் தொடங்கிய முயற்சி, ஒரு போர் தோன்ற வழிவ குத்தது. இந்தப் போர் ‘பசுபிக் போர்’ என்று நாகரிகமாக அழைக்கப்பட் டாலும், சூழல் வரலாற்றில் ‘நைட்ரேட் போர்’ என்றே குறிப்பிடப்படுகிறது.
 பொலிவியா, பெரு ஆகிய இரு நாடுகளின் மீது திடீரென போர் தொடுத்தது, சிலி. உண்மையில் இப்போரை பின்னின்று நடத்தியது, பிரிட்டனின் முதலாளிகள்தான். இப்போரில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் ஈடுபடுத்தப்பட்டன. ஆதிக்க சக்திகளின் ஆதரவுடன் போரில் வென்ற சிலி, நைட்ரேட் வயல்களைக் கைப்பற்றியது. இந்த வயல்கள், மறைமுகமாக பிரிட்டனின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன.
இது, ஐரோப்பாவின் மற்றொரு நாடான ஜேர்மனிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. முதல் உலகப் போரு க்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்நாட்டுக்கு வெடிமருந்துக்காக நைட்ரேட் பெருமளவில் தேவைப் பட்டது. எனவே, ஜேர்மனி மாற்று வழிகளை ஆய்வு செய்யுமாறு தனது அறிவியலாளர்களைத் தூண் டியது. இறுதியில் ஃப்ரிட்ஸ் ஹாப்பர் எனும் அறிவியலாளர் வளிமண்ட லத்திலிருந்து நைட்ரஜனைப் பிரி த்து அதை நிலைப்படுத்தி, நைட் ரேட்டுக்களாக மாற்றும் நுட்பத் தையும், கருவியையும் கண்டுபி டிக்க, நைட்ரேட் வயல்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட செய ற்கை நைட்ரேட்தான் உலகப்போர் முடிந்ததும் விளைநிலங்களுக்கு வந்து சேர்ந்தது. தற்போது ஆண்டு க்கு 10 கோடி தொன் அளவு நைட்ரேட் நம் மண்ணில் கொட் டப்படுகிறது. ஒரு காலத்தில் மூன் றாம் உலக நாடுகளின் வளங்க ளைக் கொள்ளையடித்து தம் நிலங் களுக்கு ஊட்டத்தையும், தம் மக்க ளுக்கு உடல் வலிமையையும் தேடிக்கொண்ட பணக்கார நாடு கள், இன்று பணத்துக்காக மூன் றாம் உலக நாடுகளின் மண்ணைக் கெடுத்து, அந்த மக்களின் உடல் நலத்தைச் சீரழிக்கின்றன.
‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி. அது செயற்கை நைட்ரேட்டைக் கண்டு பிடித்த ஃப்ரிட்ஸ் ஹாப்பருக்கு முழுவதும் பொருந்திப்போனது. இந்தக் கண்டு ப்பிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசுகூட கிடைத்தது. இவர் சைக் ளோன்-பி (ணுலமடழn-டீ) எனும் மற்றொரு நச்சுக்காற்றையும் கண்டுபிடித்திருந்தார். இந்த நச்சு தான் இன்றைக்குக் களைக்கொல் லியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு யூதரான ஹாப்பரின் இந்தக் கண்டுப்பிடிப்பு, இறுதியில் யூத இனத்தையே அழிக்கப் பயன்ப டுத்தப்பட்டது வரலாற்றுக் கொடுமை. ஹிட்லரின் வதை முகாம்களில் இந்த நச்சுக்காற்றைச் செலுத்தித் தான் கூட்டம் கூட்டமாக யூதர்க ளைக் கொன்றழித்தனர். ஆக, இன்றைக்கு ‘களைக்கொல்லி’ களாக அறியப்படுபவையும் மனிதர்களைக் கொல்வதற்காகக் கண்டறியப்பட்டவைதான்.
ஹாப்பரின் மனைவியும் ஓர் அறிவியலாளர்தான். அப் பெண் மணி, கணவரின் கண்டுபிடிப்பு களுக்கு கடும்எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கியால் தன்னையே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மகனும் தற்கொலை செய்து கொள்ள எஞ்சிய குடும்ப உறுப் பினர்கள் வதை முகாமில் கொல் லப்பட்டனர். இறுதியில் நாடு கடத்தப்பட்ட ஹாப்பர், அகதியாக அலைந்து திரிந்து மரண முற் றபோது இவரது கண்டுபிடிப்பால் பணத்தைக் குவித்திருந்த எந்த வொரு கார்ப்பரேட்டும் இவரு க்காகக் கவலைப்படவில்லை.
அறிவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் கண்டுபிடிப்புகள்... மக்களுக்கா னதாக இருக்க வேண்டும் என்ப தையே இது உணர்த்துகிறது. ஆனால், வேளாண்மைக்கான நவீன அறிவியலானது இன்றும் கார்ப்பரேட்டுக்களுடனேயே கைகோர்த்துப் பிணைந்து கிடக் கிறது. 
புவியியல், மண்ணியல், வேளாண் மையியல், வேதி யியல், உயிரி யல், தாவரவியல், பூச்சியியல் போன்ற பல துறைக ளைச் சேர்ந்த அறிவியலாள ர்கள் பெரும்பாலும் இன்று வரையிலும் கூட மண்ணை முழுமையாகப் புரிந்து கொள்ள வில்லை என்பது தான் உண்மை.
அதேவேளை, எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறாத, சர்வதேசக் கருத் தரங்குகளில் கட்டுரைகள் வாசிக் காத எளிய உழவர்கள் பல நூற் றாண்டுகளாகவே மண்ணை எப்படியெல்லாம் புரிந்து வைத் திருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது வியப்பு விண்ணை முட்டுகிறது. அதை அறிந்து கொள்ள உலகின் நான்கு திசை களுக்கும் ஒரு பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். 
         நன்றி :   ஜூனியர் விகடன்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.