Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது! - விக்னேஸ்வரன் உறுதி!!

Featured Replies

 

சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது! - விக்னேஸ்வரன் உறுதி!!

<p>சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது! - விக்னேஸ்வரன் உறுதி!!</p>



சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 34வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை தீரமானமாக நிறைவேற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனே முன்மொழிந்த போது, 'இந்தப் பிரேரணை எதற்காக?, சர்வதேச ஒழுங்கை மீறி செயற்பட்டால் வெற்றி கிடைக்குமா? என எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி எழுப்பினார். 

இக்கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் 'சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல் அவர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டிருக்கும். அதற்காக எமது மக்களின்ல் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது. 

அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளரை நாம் அண்மையில் சந்தித்த போது, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை கோருமாறே அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எங்கள் மக்கள் இந்த உள்ளக விசாரணைகளில் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளனர். இதுவே எங்கள் நிலைப்பாடும். இந்நிலையிலேயே நாங்கள் இந்தப் பிரேரணையை முன்மொழிந்திருக்கிறோம். அதனை பிழையென எவரும் கூறமுடியாது' எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை தீரமானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளருடனான சந்திப்பின் போது, போர்க்குற்றங்கள் 
தொடர்பாக உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்படவுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டதன் பின்பே, இந்தத் தீர்மானத்தை அவசர அவசரமாக சபையில் கொண்டு வர நேர்ந்ததாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிபிசிக்கு கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச பொறிமுறையிலான விசாரணை ஒன்றின் மூலமே நீதி கிடைக்கும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது என்றும், அதனை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் குறித்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கருத்துக்களை அறியாமல் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என்று வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா முதலில் சபையில் கூறினார். ஆனால் எதிர்க்கட்சியில் இருக்கும் ஐந்து உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பின்னர் தவராசா சபையில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து எதிர்க்கட்சியினருடைய நிலைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டு சபையில் சமூகமளித்திருந்த ஏனையோரின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=b00981a8-9f70-493e-b5ce-cb9a83d1d44f

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.