Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் ஆயுதக்கொள்வனவில் மில்லியன் கணக்கான டொலர் ஊழல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் ஆயுதக்கொள்வனவில் மில்லியன் கணக்கான டொலர் ஊழல்

[ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 13:36 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரசின் அண்மைய மிகப்பெரிய ஆயுதக்கொள்வனவில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

தற்போது அரச வான்படைக்கு பல மில்லியன் ரூபாய் அல்லது டொலரில் நான்கு மிக்-27 ரக விமானங்கள், வேறு ஏழு விமானங்கள் வாங்கியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிறிலங்கா வான்படை சார்பில் சிறிலங்கா அரசுக்கும் உக்ரெய்ன் நாட்டுக்கும் சொந்தமான உக்ரின்மார்ஷ் என்ற நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற கொள்வனவு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக நடைபெறும்.

வழக்கமாக இத்தகைய பெரும் கொள்வனவுகளைச் செய்வதற்கு முன்னதாக பல தரப்பில் இருந்தும் விலை விசாரிக்கப்படும். மிகக்குறைவாக அதே சமயத்தில் தரமாகவும் விலை குறிப்பிடும் ஒப்பந்தங்களே ஏற்றுக்கொள்ளப்படும். இது உலக அளவில் உள்ள நடைமுறை.

ஆனால் இடையில் கடந்த மாதம் யூலை, 26 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட Bellimissa Holdings Limited என்ற வெளி நிறுவனம் செய்யப்பட்டுள்ளது.

நான்கு மிக்-27 ரக விமானங்களுக்கான விலையும் ஏனைய கட்டணங்களும் நேரடியாக இந்த நிறுவனத்துக்கே வழங்கப்படும் என அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சேவைகளையும் கவனித்துக்கொள்வதற்கும் கொள்வனவு செய்வதற்குமான பொறுப்புக்களை முழுக்க முழுக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான Lanka Logistics and Technologies Limited என்ற நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் நாள் ஏற்றுக்கொள்வதற்கு ஒருநாள் முதல்நாள்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் பெரிய கேள்விக்குறி என்னவெனில் ஆறு ஆண்டு காலத்துக்கு முன்னர் ஏழு இதே மிக்-27 ரக விமானங்களை வான்படை பல மடங்கு குறைந்த விலையில் வாங்கியுள்ளது.

2000 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் 1.75 மில்லியன் யுஎஸ் டொலருக்கு இந்த விமானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தடவையாக 2000 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 24 ஆம் நாள் 1.6 மில்லியன் யுஎஸ் டொலருக்கு இதே விமானம் வாங்கப்பட்டுள்ளது. அண்மையில் 2,462,000 யுஎஸ் டொலருக்கு இந்த விமானம் வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்விமானங்கள் எல்லாம் 1980-க்கும் 1983-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். இதில் மற்றுமொரு அதிர்ச்சி தரும் தகவல் பயிற்சி விமானங்களின் விலை.

ஒப்பந்தப்படி மிக்-23 யுபி பயிற்சி விமானத்தின் விலை 1.1 மில்லியன் யுஎஸ் டொலர். 2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் இதே பயிற்சி விமானம் 900,000 யுஎஸ் டொலருக்கு வாங்கப்பட்டுள்ளது.

இவ்ஒப்பந்தத்துக்கான தரகுப் பணியில் ஈடுபட்டிருக்கும் பிரித்தானிய நிறுவனத்தில் உக்ரேனிய அரசியல்வாதிகள் சிலரின் செல்வாக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

இராணுவ விவகாரங்களில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் வெளிப்படையாகச் செயற்பட வேண்டியதன் பெரும் அவசியத்தை இந்த விவகாரம் காட்டுகிறது.

மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் கொள்ளை போகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். இந்த விமான கொள்வனவு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் பெயர் குறிப்பிட விரும்பாத சிறிலங்கா வான்படை அதிகாரிகளும் கண்டிப்பாக இருக்கிறார்கள் என கொழும்பில் இருந்து வெளிவரும் கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.