Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

- வித்தகக் கவிஞர் ப. விஜய்

இந்தியா வித்தியாசமான நாடு!

உள்நாட்டுத் தொழிலாளர்களைப்

பிச்சைக் காரர்களாக்கும்!

வெளிநாட்டு முதலாளிகளைப்

பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!

வெளிநாட்டு தொழிலாளர்களை

பிச்சைக் காரர்களாக்கும்!

உள்நாட்டு முதலாளிகளைப்

பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!

சவப்பெட்டிகளை தயாரித்து

சமாதானம் பேசும்!

சமாதானம் பேசிக் கொண்டே

ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று

செஞ்சோலை சிறுமிகளின்

உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்

குண்டு வீசிப் பறந்தது

விமானம் அல்ல

சிங்கள ராணுவத்தின்

மானம்!

ஒரு ராணுவம்

எதிரி ராணுவத்தை தாக்கும்!

என்றும் வேவு பார்க்கும்.

ஆனால் அறுபது சிறுமிகளை

அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது

ஈழத்துச் சிறுமிகளுக்கு

பூக்கோலமும் போடத் தெரியும்

போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்

பல்லாங்குழியும் ஆடத் தெரியும்

பகைவர் தலைகளுக்கு

பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு

தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்

எதிரிகளின்

தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்

சிலபேர் சிலிர்க்கலாம்

இது ஒப்பாரி அல்ல

இழந்த வீராங்கனைகளுக்கொரு

வீரத்தாலாட்டு!

நம் தமிழ் இளைஞர்கள்

வீறு கொண்டவர்கள்

செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை

நமீதா வீட்டில் விழுந்திருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை

இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்

இங்குள்ள தமிழருக்கும்

ஈழத் தமிழருக்கும்

எத்துனை வித்தியாசம்?

நாம்

குண்டுதுளைக்காத கூண்டில்

தயங்கியபடி நிற்கிறோம்

தேசக் கொடியேற்ற

அவர்கள்

குண்டு துளைப்பதற்காகவே

தயாராக நிற்கிறார்கள்

தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்

விளையாடுவதற்காக

பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்

விடுதலை ஆவதற்காக

உண்மை துப்பாக்கிகள்

நமக்கு

குளிர்பானத்தில் விஷமிருக்கிறது

அவர்களுக்கு

விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை

நாம் வாசிக்கிறோம்

அவர்கள்தான்

எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை

நாம் படிக்கிறோம்

அவர்கள்தான்

நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்

இங்குள்ள தமிழருக்கும்

ஈழத் தமிழருக்கும்

எத்துனை வித்தியாசம்?

தமிழனை

உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!

தமிழனுக்கு

உணர்ச்சி இருக்கிறது என்று

உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை

இந்த உண்ணாவிரதம் செய்கிறது!

உணர்ச்சி வரும் - ஒரு நாள்

புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன், தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை)

நம் தமிழ் இளைஞர்கள்

வீறு கொண்டவர்கள்

செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை

நமீதா வீட்டில் விழுந்திருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை

இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

காரமான வரிகள் நிச்சயமாக உறைக்கும் உணர்ச்சிகள் உள்ளவர்களுக்கு

நல்லதொரு கவிதையை இணைத்திருக்கிறீர்கள் இளங்கோ நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதையை இணைத்திருக்கிறீர்கள் இளங்கோ நன்றிகள்.

வடித்த பா.விஜய்க்கும்..அதைப்

படிக்கத்தந்த இளங்கோவிற்கும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உறவுகளே, நமக்காக அங்கு பலர் உரிமைக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரச்சனைகளுக்கு நாங்கள் குரல் கொடுக்கத் தயங்குகின்றோம். பக்கத்தில் இருக்கும் சிங்களவன் அல்ல நமக்குச் சகோதரன். கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்கள்தான் நமக்குச் சகோதரர்கள். காவேரிப் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை போன்ற அவர்களது வாழ்வியல் பிரச்சனைகளில் எங்களின் மனித நேய அக்கறைகளை வெளிக்காட்ட வேண்டும்.

நன்றி இளங்கோ நல்ல கவிதை அதிலும் நமிதா வீட்ட்டில் எண்ற வரி உறைக்க வைக்கும் வரி

எம்மால் இந்திய அரசின் உள்நாட்டு பிரச்சினையில் என்னத்தை செய்யமுடியும்.தமிழக அரசு மென்போக்கையல்லவா காட்டுகிரது பொருளாதாரதடை போன்ற அழுத்தங்களை பிரயோகித்தால் அச்சுதானந்தன் மடங்குவார் அதை விட்டு அப்படி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்கிறது அனைத்து அரசியல் வாதிகளும் சும்மா 1 நாள் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி மக்களை பேக்காட்டுகிரார்கள் இப்படி இருக்கையில் எம்மால் என்ன உதவியை செய்யமுடியும்

எமக்கென ஒரு நாடிருந்தால் நிச்சயம் உதவி செய்திருக்கும் தமிழீழம் எமக்கென நாடில்லாதபோது எம்மால் என்ன உதவியை செய்யமுடியும் சொல்லுங்க பாப்பம்

கவிதை இணைப்புக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.