Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

டெல்லி டெஸ்ட் போட்டி: தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்கா போராட்டம்

 

 
ஹசிம் ஆம்லா படம்: பிடிஐ
ஹசிம் ஆம்லா படம்: பிடிஐ

டெல்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது. 4-வது நாள் ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 334 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 121 ரன்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்திருந்தது. கோலி 83 ரன்களுடனும், ரஹானே 52 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

நேற்று காலையில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்து 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கைல் அபாட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி விராட் கோலி ஆட்டமிழந்தார். 165 பந்துகளை சந்தித்த அவர், 88 ரன்களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

ரஹானே சாதனை

கோலி அவுட் ஆனதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ரஹானே ஈடுபட்டார். 3-வது நாள் ஆட்டத்தில் 152 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்த ரஹானே நேற்று வேகமாக ஆடி 54 பந்துகளில் 48 ரன்களைக் குவித்தார். இம்ரான் தகிர், மோர்னே மோர்கல், டேன் பியட் ஆகியோரின் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ரஹானே 206 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் ஒரே போட்டியில் 2 சதங்களை அடித்த 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரஹானே படைத்துள்ளார். இதற்கு முன்னர் விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (3 முறை) ராகுல் திராவிட் (2 முறை), விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். ரஹானேவுக்கு துணையாக ஆடிய விருதிமான் சகா 23 ரன்களை எடுத்தார்.

ரஹானே சதம் எடுத்ததும் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்களையும், கைல் அபாட், இம்ரான் தகிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தடுப்பாட்டம்

வெற்றி பெற 481 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை ஆடவந்தது. இந்த ஸ்கோரை எடுப்பது கடினம் என்பதை உணர்ந்ததால் முடிந்தவரை அவுட் ஆகாமல் இருந்து போட்டியை டிரா செய்யும் முயற்சியில் அந்த அணியின் வீரர்கள் ஈடுபட்டனர்.

ஸ்கோர் 5 ரன்களை எட்டுவதற்குள் அஸ்வினின் பந்துவீச்சில் எல்கர் (4 ரன்கள்) அவுட் ஆனபோதும் அடுத்துவந்த வீரர்கள் தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். ஒருபக்கம் கொடாக்கண்டர்களாக விக்கெட்களை பறிகொடுக்காமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆட, மறுபக்கம் விடாக்கண்டர்களாக இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்த போராடினர்.

ஒரு பக்கம் ஸ்டம்புக்கு முன் மலைபோல் நின்று ஆம்லா தடுப்பாட்டத்தில் ஆட, மறுபக்கம் அவருக்கு துணையாக பவுமாவும் நிலைத்து ஆடினார். ரன்களை எடுக்காவிட்டாலும் இந்த ஜோடியை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராடவேண்டி வந்தது. நீண்டநேர முயற்சிக்கு பிறகு அஸ்வினின் பந்தில் போல்ட் ஆகி பவுமா அவுட் ஆனார். ஆம்லா - பவுமா ஜோடி 38.4 ஓவர்கள் விளையாடி வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இதில் பவுமா 117 பந்துகளை எதிர்கொண்டு 34 ரன்களை எடுத்தார்.

டிவில்லியர்ஸ் நிதான ஆட்டம்

பவுமா அவுட் ஆனதைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் ஆட வந்ததும் ரன் மழை பொழியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 50, 100 மற்றும் 150 ரன்களை அசுரவேகத்தில் அடித்து சாதனை படைத்த டிவில்லியர்ஸும் நேற்று ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். 91 பந்துகளை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ், ஒரு பவுண்டரியைக் கூட அடிக்காமல் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். எதிர்ப்புறத்தில் அவரைவிட அதிகமாக ரசிகர்களை சோதித்த ஆம்லா 207 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 72 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று அந்த அணி வெற்றி பெற இன்னும் 409 ரன்களை எடுக்க வேண்டும். அது கடினம் என்பதால் விக்கெட்களை பறிகொடுக்காமல் தோல்வியில் இருந்து தப்பும் முயற்சியிலேயே அந்த அணியின் வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் தடுப்பாட்டத்தை மீறி இந்தியாவை வெற்றிபெற வைப்பது பந்துவீச்சாளர்கள் கையில் இருக்கிறது.

முரளி விஜய்க்கு அபராதம்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்க்கு போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் மோர்னே மோர்கல் வீசிய பந்தில் விலாஸிடம் கேட்ச் கொடுத்து விஜய் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது தனது பேட்டில் பந்து படவில்லை என்று நடுவர் குமார் தர்மசேனாவிடம் விஜய் தெரிவித்தார்.

அவரது இந்த நடவடிக்கைக்காக போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7957450.ece

  • Replies 54
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான  டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

 

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. 

india.jpg

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

 

இந்நிலையில் மொஹாலியில் இடம்பெற்ற 1 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

பெங்களுரில் இடம்பெற்ற 2 ஆவது போட்டி  மழையால் கைவிடப்பட்ட நிலையில் நாக்புரில் இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 3 ஆம் திகதி டில்லியில் ஆரம்பமானது.

 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

அதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக  ரஹானே 127 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் அபோர்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களைப்பெற்று 213 ஓட்டங்களால் பின்னிலை வகித்தது.

 

இதையடுத்து 213 ஓட்டங்கள் முன்னிலை வகிக்க இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு 480  ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணி வீரர்கள் போட்டியை சமன்செய்வதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்து வீண் போக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப்பெற்று 337 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதையடுத்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ரஹானே தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகனாக அஸ்வின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/800

  • தொடங்கியவர்

டிவில்லியர்ஸின் விடாமுயற்சி வீண்: டெல்லி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

 

  • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி கோப்பையுடன். | படம்: பிடிஐ.
    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி கோப்பையுடன். | படம்: பிடிஐ.
  • இந்திய வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி. | படம்: பிடிஐ.
    இந்திய வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி. | படம்: பிடிஐ.

டெல்லியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியது இந்தியா.

தென் ஆப்பிரிக்க அணி ஒரு அசாத்தியமான டிராவுக்காக வரலாறு காணாத தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 143.1 ஓவர்கள் விளையாடி 143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொத்தம் 859 பந்துகளை தென் ஆப்பிரிக்க அணி இந்த இன்னிங்சில் சந்தித்ததில் பவுமா (117 பந்துகள்), ஆம்லா (244 பந்துகள்), டிவில்லியர்ஸ் (297 பந்துகள்), டுபிளெஸ்ஸிஸ் (97 பந்துகள்), டேன் விலாஸ் (50 பந்துகள்) அகியோர் சேர்ந்து 805 பந்துகளை எதிர்கொண்டு 125 ரன்களை சேர்த்தனர். இத்தகைய ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு இதற்கு முன்னால் கண்டிருக்குமா என்பது ஐயமே. கடைசி 5 விக்கெட்டுகள் 7 ரன்களில் விழுந்தது.

உமேஷ் யாதவ், கைல் அபாட்டுக்கு வீசிய ரிவர்ஸ் ஸ்விங் விளையாட முடியாத ஒரு பந்து. ஒன்றுமே செய்ய முடியவில்லை, பந்து லெக் ஸ்டம்பை உடைத்தது.

கடைசியாக, மோர்னி மோர்கெலை அபாரமான பந்து ஒன்றில் பவுல்டு செய்தார் அஸ்வின், இதுவே வெற்றி விக்கெட்டாக அமைந்தது. அஸ்வின் 49.1 ஓவர்களில் 26 மெய்டன்களுடன் 61 ரன்களுகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 21 ஓவர்களில் 16 மெய்டன்களுடன் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்த 143.1 ஓவர்களில் 89 ஓவர்கள் மெய்டன் ஓவர்களாகும்.

5-ம் நாளான இன்று காலை 23 ரன்களில் களமிறங்கிய ஆம்லா மேலும் 2 ரன்கள் சேர்த்து 25 ரன்களில் ஜடேஜாவின் பந்தை தவறான லைனில் தடுப்பாட்டம் ஆட பந்து லேசாக திரும்பி மட்டையைக் கடந்து ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது.

தனது 10 ரன்களுக்கு 97 பந்துகள் விளையாடி தடுப்பாட்டத்தின் உச்சத்தை டிவில்லியர்ஸுடன் இணைந்து காட்டிய டுபிளெஸ்ஸிஸ் ஜடேஜாவின் பந்து ஒன்று திரும்பும் என்று எதிர்பார்தார், ஆனால் அது நேராகி கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார்.

டுமினி 12 பந்துகள் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் நேராக எல்.பி.ஆனார். இது அஸ்வின் இந்தத் தொடரில் கைப்பற்றிய 30-வது விக்கெட்டாகும்.

டிவில்லியர்ஸ் ஆச்சரியப்படும்படியான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், ஆனால் அவருக்கு அஸ்வின் ஒருபந்தை நன்றாகத் திருப்பி எழும்பச் செய்ய பந்து அவரது கிளவ்வில் பட்டு லெக் ஸ்லிப்பில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. அவரை உணவு இடைவேளைக்கு முன்னதாக உமேஷ் யாதவ் தனது எகிறு பந்துகளினால் தடுமாறச் செய்தார். இருமுறை உமேஷ் யாதவ் பந்தில் டிவில்லியர்ஸ் கையிலிருந்து மட்டை நழுவியது. உணவு இடைவேளைக்கு பின்னரும் தனது எகிறு பந்துகளினால் உமேஷ் டிவில்லியர்ஸை படுத்தி எடுத்தார். இருமுறை கிளவ்வில் வாங்கினார். ஆனாலும் அவரது உறுதிப்பாடு கவனிக்கத் தக்கது.

முன்னதாக டேன் விலாஸுக்கு உமேஷ் யாதவ் அருமையாக ஆஃப் கட்டரை வீச அவரால் மட்டையை சமயத்தில் கொண்டு வர முடியவில்லை இதனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

பியட் 11 பந்துகள் விளையாடி 1 ரன் எடுத்து சஹாவின் அதி அற்புத கேட்சுக்கு யாதவ்விடம் அவுட் ஆனார். இந்தப் பிட்சில் சஹாவின் விக்கெட் கீப்பிங் அபரிமிதமனதாக இருந்தது. இந்தப் பந்தும் இன்கட்டர். மார்புயர பந்தான அது மட்டையில் பட்டு பின்னால் செல்ல, சஹா டைவ் அடித்து ஸ்லிப்புக்கு முன்னால் ஒரு கையில் பிடித்தார். கடைசியாக மோர்னி மோர்கெல் அஸ்வின் பந்தில் பவுல்டு ஆக, தென் ஆப்பிரிக்காவை 3-0 என்று வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியது.

தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடினாலும், இந்திய பவுலர்கள் கடைசி வரை உற்சாகம் குன்றாமல் வாய்ப்புகளை உருவாக்கி அது கைகூட காத்திருந்தனர், கோலியின் களவியூகம் தென் ஆப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்தது. ஒரு போதும் விராட் கோலி நெருக்கமான களவியூகத்தைக் கைவிடவில்லை.

ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸ் சத நாயகன் ரஹானே தேர்வு செய்யப்பட அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7958386.ece

  • தொடங்கியவர்

சச்சின் சாதனையை 31 டெஸ்டுகளில் சமன் செய்த அஸ்வின்!

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 31 டெஸ்ட் போட்டிகளிலேயே சமன் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியையும் இந்தியா வென்றது. இத்தொடரில் அஸ்வின் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி, தொடர் நாயகன் விருதை பெற்றார். 31வது டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள அஸ்வின் தட்டிச்செல்லும் 5வது தொடர் நாயகன் விருது இதுவாகும். இதன் மூலம், சச்சின், சேவாக், மெக்ராத் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

 
Vikatan EMagazines Foto.
  • தொடங்கியவர்

இந்திய - தெ.ஆ. டெஸ்ட்: கேப்டன்களின் குரல்

 
 
இந்திய வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி. | படம்: பிடிஐ.
இந்திய வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி. | படம்: பிடிஐ.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக அஜிங்க்ய ரஹானேவும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விராட் கோலி:

அனைத்து வெற்றிகளுமே சிறப்புவாய்ந்தவை தான். ஆனால் இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனேனில் இதை பெறுவதற்கு நாங்கள் கடினமாக உழைத்தோம். தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிராவை நோக்கிய ஆடிய நிலையில் நாங்கள் கடுமையாக போராடினோம். அவர்களின் தற்காப்பு ஆட்டமும், பந்தை எதிர்கொண்ட விதமும் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுமையை இழக்கவில்லை. இந்த ஆட்டம் அணியின் ஒட்டுமொத்த வலிமையை காட்டியது. தனியாக நான் எதையும் செய்யவில்லை. அணியில் உள்ள 11 வீரர்களுமே வெற்றிக்கு உரித்தானவர்கள்.

ஹஸிம் ஆம்லா:

நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று ஆடுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மோசமாக செயல்பட்டோம். இந்திய வீரர்கள் பேட்டிங், பந்து வீச்சில் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.

டி 20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை அருமையாக விளையாடி வென்றோம். ஆனால் டெஸ்ட் தொடர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக அமைந்துவிட்டது. நாங்கள் போதிய ரன்களை சேர்க்கவில்லை. இதுபோன்ற ஆடுகளங்களில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பேட்டிங்கில் போதுமான ரன் சேர்த்து நாங்கள் அவர்களுக்கு உதவ தவறிவிட்டோம்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%86-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/article7960992.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.