Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடுகளுடன் பரணகம அறிக்கை - சுமந்திரன்

Featured Replies

MA-Sumanthiran_1.jpg

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பர­ண­கம ஆணைக் குழுவின் அறிக்­கையில் பல்வேறு வகையிலான முரண்பட்ட விட யங்களும் தகவல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரிவித்தார்.

யுத்தத்தின் முடிவில் கொல்­லப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 40 ஆயிரம் பேரின் அழி­வு­களை இரா­ணு­வ­ ரீ­தி­யாக நியா­யப்­ப­டுத்­தியுள்ள அறிக்கை சனல்–4 ஆவணப்படம் மற்றும் பிர­பா­க­ரனின் மகன் பாலச்­சந்­தி­ரனின் படு­கொ­லை போன்றவற்றுக்கு சர்­வ­தேச விசா­ரணை வேண்­டு­மென சிபார்சு செய்­தி­ருப்­பது முரண்­பட்ட தன்மையை காட்­டு­கி­றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளி­யி­டப்­ப­டாமல் இருந்த அறிக்­கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது அரசாங்கம் என்பதே உண்மையாகும். மாறாக அந்த அறிக்கைகளை பின்பற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்று அர்த்தமல்ல. அவ்வறிக்கைகள் பகிரங்கப்படுத்தியாகிவிடடது. அத்துடன் அவ்வத்தியாயம் நிறைவு பெற்றுவிட்டது எனவும் அவர் கூறினார்.

நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட பர­ண­கம, உட­லா­கம அறிக்கை சம்­பந்­த­மாக விளக்கம் அளிக்கும் போதே சுமந்திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

பொது­மக்­க­ளுக்கும் போராடும் தரப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் உள்ள வித்­தி­யா­சத்தைப் பேண வேண்­டு­மென்­பதே பொதுவான பாகு­பாடு என்பதாகும். பொது மக்­களைக் கொல்­ல­மு­டி­யாது. ஆயுதம் ஏந்தி போரா­டு­கின்­ற­வர்­க­ளையே கொல்­ல­மு­டியும் என்­பதை இந்த பாகு­பாடு என்ற விடயம் சுட்டிக் காட்­டு­கி­றது.

இரண்­டா­வது விடயம் எவ்­வ­ளவு ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன என்பதை ஆராய்கின்றது. கூடு­த­லாக பயன்­ப­டுத்­தப்­பட்­டனவா? என்று ஆராய்வதை குறிக்கும். மூன்­றா­வது விடயம் ஏற்­பட்ட அழி­வுகள் சம்பந்தப்பட்டதாகும். சுற்­றி­வர இடம்பெற்ற பாதிப்­புக்­களா கண்­மூ­டித்­த­ன­மாக தாக்­கி­யதால் ஏற்­பட்ட பேர­ழி­வு­களா? என்­பது பற்­றியே போர்­குற்ற விசா­ர­ணையில் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்பட்டுள்ளது.

இம்­மூன்று விடயங்கள் சம்­பந்­த­மாக ஏலவே டெஸ்மன் டி சில்­வாவின் ஆலோ­ச­னையை இலங்கை அர­சாங்கம் பெற்­றி­ருந்­தது. அந்த செயற்பாட்டில் டெஸ்மன் டி சில்வா இலங்­கைக்கு சார்­பாக, ஓர் அறிக்­கையை வழங்­கி­யி­ருந்தார். அவ்­வ­றிக்­கையில் அவர் 40 ஆயிரம் பொது­மக்­களை இரா­ணுவம் படு­கொலை செய்­த­மைக்­கு­ரிய காரணம் 3 லட்சம் மக்­களின் உயி­ரைப் ­பா­து­காப்­ப­தற்­கா­க­வே­யென்று நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

3 லட்சம் பொது மக்­களை விடு­விக்கும் சமரில் 40 ஆயிரம் பேர் கொல்­லப்­பட்­டமை நியா­யத்­தன்மை வாய்ந்­தது என்று தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். அது­மட்­டு­மன்றி விடு­த­லைப்­பு­லிகள் சாதா­ரண மக்கள் அணியும் ஆடை­களை அணிந்து கொண்டு போரிட்டால் அவர்­களை அடை­யாளம் காண்­பது கஷ்டம் என்ற நியா­யங்­களைக் குறிப்­பட்டு இவை­யெல்லாம் இரா­ணு­வத்தை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்­ட­தே­யென குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த ஆலோ­சனை அறிக்­கையை சில்வா இர­க­சி­ய­மா­கவே கைய­ளித்­தி­ருந்தார். அதன் பின்பே அவர் இலங்கை அர­சாங்­கத்தால் ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­க­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இவ்­வி­டயம் எமக்குத் தெரி­ய­வந்த போது, நாம் அதை எதிர்த்தோம். ஆலோ­சனை அறிக்­கையை அர­சுக்குச் சார்­பாக வழங்­கி­விட்டு தான் ஒரு சுயா­தீ­ன­மா­னவர் எனக் கூறிக் கொண்டு ஆணைக்­கு­ழு­வுக்கு வரு­வது அவரின் ஒழுக்­க­வி­ய­லுக்கும் நீதிக்கும் புறம்­பா­னது. அர­சாங்­கமும் இவ்­வாறு செய்­வது தவ­றா­னது என நான் பாரா­ளு­மன்றில் உரை­யாற்றும் போது குறிப்­பிட்­டி­ருந்தேன். இந்த டெஸ்மன் டி சில்வா இங்­கி­லாந்து நீதி அமைப்பில் இருப்­பதால் இங்­கி­லாந்து வழக்­க­றிஞர் சங்கம் இவ­ருக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனக் கோரிக்கை விடுத்­தி­ருந்தேன். தற்­பொ­ழுது அவ­ருக்­கெ­தி­ரான விசா­ர­ணைகள் இங்­கி­லாந்தில் நடை­பெற்று வரு­கின்­றன.

இவ்வாறான பின்னணியிலேயே பர­ண­கம அறிக்கை, வெளி­வந்­துள்­ளது. பர­ண­கம அறிக்­கையில் டெஸ்மன் டி சில்வா கொடுத்த விட­யங்கள் எவ்­வித மாற்­றமும் இல்­லாமல் பதி­யப்­பட்­டி­ருக்­கி­றன. ஏனைய விட­யங்கள் சம்­பந்­த­மாக, குறிப்­பாக சனல் 4 வீடியோ, பிர­பா­க­ரனின் மகன் பாலச்­சந்­தி­ரனின் படு­கொலை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் இசைப்­பி­ரியா, ரமேஸ் படுகொலை வெள்ளைக் கொடி விவ­காரம் போன்ற அனைத்திற்கும் போதிய ஆதா­ரங்கள் உள்ளனர். இவை விசா­ரிக்­கப்­பட வேண்டும். அவை சுயா­தீன நீதி­மன்றால் விசா­ரிக்­கப்­பட வேண்­டு­மென குறிப்­பிட்­டது மட்­டு­மல்­லாமல் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்பட வேண்­டு­மென்றால் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை நிய­மித்து விசா­ரணை செய்­யப்­பட வேண்­டு­மென பர­ண­கம தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்த சூழ் நிலையில், கலப்பு நீதி­மன்­ற­மொன்­றுதான் பொருத்­த­மா­னது என பர­ண­கம தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.பர­ண­கம அறிக்கை முரண்­பா­டான அறிக்­கை­யாக காணப்­ப­டு­வ­தற்கு இதுவே கார­ண­மாகும். எனவே தான் அவ­சரம் அவ­ச­ர­மாக பர­ண­கம, உட­லா­கம அறிக்­கை­களை அர­சாங்கம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்­துள்ளமை தெளிவாகின்றது. கலப்பு நீதி­மன்­ற­மொன்­றுக்கு உடன்­பட்­டுள்ள இலங்கை அர­சாங்கம் மஹிந்­த­வினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழுவே வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் அனு­ச­ர­ணை­யோடு, விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென சிபார்சு செய்­தி­ருக்­கி­ற­போது நாமும் அதையே செய்ய நினைக்­கிறோம் என்று கூறு­வ­தற்கே மேற்­படி அறிக்கை அவ­சரம் அவ­ச­ர­மாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பர­ண­கம, தன்னால் பெறப்­பட்ட சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில் பதி­வு­களை மேற்­கொண்­டுள்ளார் என்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. எனவே இதற்­கான சட்­சி­யங்கள் உள்ளன. எனவே உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெனக் குறிப்­பிட்­டுள்ளார். இதில் குறிப்­பி­டக்­கூ­டிய முக்­கி­ய­மான விடயம் கலப்பு நீதி­மன்றம் சம்­பந்­த­மாக சர்­வ­தேச விசா­ர­ணை­யிலும் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை வழி­மொ­ழிந்த தீர்­மா­னத்­திலும் ஐ.நா. சிபார்­சுகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. அமெரிக்க பிரேரணையின் 1ஆம் பந்­தி­யிலும் 6ஆம் பந்­தி­யிலும் கூறப்­பட்­ட­வாறு வெளி­நாட்டு மற்றும் பொது நல­வாய நீதி­ப­திகள் அடங்­கிய கலப்பு நீதி­மன்றம் ஒன்றின் மூலம் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென தெளி­வாகக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

வெளி­நாட்டு நீதி­ப­திகளைக் கொண்டே விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்ற விடயம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அறிக்­கையில் மாத்­தி­ர­மல்ல முன்னாள் ஜனா­தி­பதி நிய­மித்த ஆணைக்­கு­ழுவின் சிபார்­சி­லும உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. சர்­வ­தேச விசா­ரணை என்­பதை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் முக்­கி­ய­மான விட­ய­மொன்று பர­ண­கம அறிக்­கையை தடுக்க வேண்டும் என்­ப­தாகும். இதை இலங்­கையும் ஏற்றுக் கொண்­டுள்­ளது. ஆனால் தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்பே பர­ண­கம விசா­ரணை முடி­வ­டைந்து விட்­டது. எனவே பர­ண­கம, உட­லா­கம அறிக்­கைகளை பாரா­ளு­மன்றில் வெளி­யிட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்­க­ளே­ த­விர அவ்­வ­றிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக அது வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இதே­வேளை உட­லா­கம அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டு­மென்­பதும் ஒரு சிபார்­சாக இருந்­துள்­ளது.

வெளி­யி­டப்­ப­டாமல் இருந்த அறிக்­கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது அரசாங்கம் என்பதே உண்மையாகும். மாறாக அந்த அறிக்கைகளை பின்பற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது என்று அர்த்தமல்ல. அவ்வறிக்கைகள் பகிரங்கப்படுத்தியாகிவிடடது. அத்துடன் அவ்வத்தியாயம் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது ஐ.நா. சபையின் அறிக்கையே தவிர இந்த அறிக்கைகள் அல்ல.

அதாவது சர்வதேச விசாரணை சம்பந்தமான விடயங்களும் அவற்றோடு ஒட்டிய விடயங்களுமே இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாக உள்ளன. நடைபெறவுள்ள சர்வதேச விசாரணைக்கும் பரணகம உடலாகம விசாரணைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்காது என்றே கொள்ளலாம். ஆனால் பரணகம அறிக்கையை நிறுத்த வேண்டும். எனினும் அதில் வெளிவந்த உண்மைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோல் உடலாகம அறிக்கையில் வெளிவந்த விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/10/22/முரண்பாடுகளுடன்-பரணகம-அறிக்கை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.