Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்திய மீனவ படகு உரிமையாளர்களில் பலர் அரசியல்வாதிகள்'

Featured Replies

இலங்கை கடற்பரப்புக்குள் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் மீன்பிடி படகுகளும் வலைகளும் அரசு உடமையாக்கப்படும் என இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.


இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர்  மஹிந்த அமரவீர
இலங்கை மீன் பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர

கிழக்கு மாகாணத்திற்கான 3 நாள் வீஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர் இன்று ஞயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் ஊடுருவல்களை தடுப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி அப்பாவி மீனவர்களை தண்டிப்பதை விட படகுகளின் உரிமையாளர்களே தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
''இந்திய மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களில் பலரும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள். மீனவர்களை மையப்படுத்தி அங்கு நடைபெறும் போராட்டங்களின் பின்னனியில் அவர்கள் தான் இருக்கின்றார்கள்'' என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ''இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவல் செய்வதால் உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக வட மாகாண கடலில் இவர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால் அம் மாகாண மீனவர்களுக்கே பொருளாதார ரீதியாக பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது'' என்றும் குறிப்பிட்டார்
இலங்கையிலுள்ள சிறைகளில் தற்போது 86 இந்திய மீனவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இம் மீனவர்களை எதிர்வரும் வியாழக்கிழமை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இன்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை தனது உரையில் உறுதிப்படுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151025_battiminister

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.