Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் காதல் சோக கவிதை

Featured Replies

என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!

அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

உன்னை மறுக்கும் நேரத்தில்....
என்னை மறக்கிறேன் ....
உன்னை நினைக்கும் நேரத்தில் ...
என்னை மறக்கிறேன் .....!!!

என்னை மறக்கிறேன்...
உன்னை நினைக்கிறன் ....
என்னை நினைக்கும் நேரத்தில் ....
உன்னையே நினைத்து என்னை ....
மறக்கிறேன் ....!!!

உன்னை மறக்க நினைக்கும் ....
நேரத்தில் என்னை இழக்கிறேன்....
என்னை மறக்க ஒரு நொடிபோதும் ...
உன்னை மறக்க ஜென்மம் போதாது ...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை
 

என்னை கண்டவுடன் ...
தலை குனிந்து போவதை ...
காட்டிலும் ஒருமுறை ...
முறைத்தேனும் பாருயிரே...!!!

தோழிகளுடன் பேசுகிறாய் ...
கண்டவுடன் மௌனமாகிறாய் ....
என் முகத்தைப் பார்…
என்னை திட்டியாவது
என்னுடன் பேசிப் பார்…!!!

என்னை அடித்தாவது
என்னை தொட்டுப்பார்…
அப்படியாவது என் காதல்
உனக்குத் தெரியட்டும்....
காதலுக்கு காத்திருத்தல் தேவை ...
எதுவரை .......?

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

அலைகளை பார்த்தேன் ...
காதலின் தத்துவம் வந்தது ....
காதலில் விழுவது பெரிதல்ல ...
விழுந்தால் உடனே எழவும் ...
கற்று தந்தது ....!!!

அவள் 
உதறிவிட்டு சென்றாள்....
என்று சொல்லமாட்டேன் ....
காதலை தந்துவிட்டு -கையை 
உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

யாருக்கு 
வேண்டுமானாலும் ...
துணைவியாகலாம்....
எந்த நபரும் உன்னால் 
வசீகரிக்கபடலாம் .....
காதல் உனக்கும் எனக்கும் ....
மட்டும்தான் ....!!!
முதல் காதல் வாழ்வுமுடியும் ....
வரை தொடரும் ...!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

  • தொடங்கியவர்

தாய்க்கு தெரியும் ....
குழந்தையை பெற்றெடுத்த வலி ....!!

தந்தைக்கு புரியும் ....
குழந்தையை தோளில் சுமந்த வலி ....!!

நண்பனுக்கு தெரியும் ....
பள்ளி பருவம் முடிந்த கால வலி ....!!

உனக்கு தெரியும் ....
உன் காதலை நான் சுமக்கும் வலி .....!!

காதலுக்கு தெரியும் ....
உன்னால் நான் படும் வலி ......!!

மற்றவை எல்லாவற்றிலும் 
வலி மட்டுமே இருக்கும் .....
காதலில் வலியுடன் தளும்பும் இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

  • தொடங்கியவர்

கண்ணில் விழுந்து
இதயத்திற்கு வந்தாய் ....
இதயத்தில் இருந்து....
எப்படி சென்றாய் ...?

நான் இறப்பதற்கு முன் ....
உன் காதலை தந்துவிடு ....
இல்லையேல் இறந்தபின்னும் ....
உன் நினைவில் வாழுவேன் ....
வேண்டாம் உயிரே ....
உயிரோடு படும் வேதனையை ....
உனக்கு தர மாட்டேன் ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

  • தொடங்கியவர்

உண்மையான அன்பை
எவ்வளவு வேண்டுமானாலும்
காயப் படுத்து ...!!
அது உன்னை
மறுபடியும் நேசிக்கும் ...♥
ஏமாற்றி விடாதே .. ♥
அது மறுபடியும்
யாரையுமே நேசிக்காது ...♥

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

  • தொடங்கியவர்

மரத்தடியில் இருந்து பேசிய ....
வார்த்தைகள் -இலை உதிர் காலம் ....
வந்ததுபோல் உதிர்ந்தே போனதே ....!!!

மரநிழலில்......
நிற்கும்போது நீ எனக்கு .....
கூறும் ஆறுதல் வார்த்தைகள்..... 
நினைவு வருகிறது ....!!!

பட்டமரம் தழைப்பதில்லை  ....
கெட்ட மனம் நேசிப்பதில்லை ....
பட்டமரம் விறகாகும் ....
கெட்ட மனம் விரக்தியாகும் ....!!!

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

  • தொடங்கியவர்

அழுகை பிடிக்கும் எனக்கு ...
வேதனைகள் நீ தந்ததால்....!!!

வலிகள் பிடிக்கும் எனக்கு 
காயங்கள் உன்னால் வந்ததால் ....!!!

தோற்க பிடிக்கும் எனக்கு 
வெற்றிகள் உன்னை சேரும் என்றால் ....!!!

எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு 
நான் உன்னோடு வாழ்வதென்றால் ....!!!

இதென்ன... 
மரணம் கூட பிடிக்கும் எனக்கு 
உனக்காக என் உயிர் பிரிவதென்றால்..!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை

கண் சிமிட்டும் தூரத்தில் அம்மா.....
கை பிடித்தபடி அருகில் தங்கை......
குழுமியிருக்கும் ஆயிரம் உறவுகள்.....
ஆனாலும் இதயம் முழுதும் வலி.....
உன்னை தேடும் இதயத்தில் வலி ....!!!

ஆயிரம் நண்பர்கள் இணையத்தில்......
ஆயிரம் மின் அரட்டை நொடியில்......
ஓசை கேட்காத பல நூறு குரல்கள்......
பார்க்க முடியாத பல நூறு சினேகங்கள்......
இருந்தும் எதையும் மனம் விரும்பவில்லை ...
உன்னிடம் வரும் ஒரு வார்த்தைக்காய் ....
உன்னையே தேடும் இதயத்தில் வலி ....!!!

அழ வேண்டும் என்று இனம் புரியா ஆவல்.....
முடியாமல் தவிக்கிறேன் விரும்பாதா.... 
திருமண நிச்சயத்தை தவிக்கிறேன் உயிரே ....
யாருக்கு புரியும் என் "காதல் வலி '' ......
இதயத்தை இழந்தவர்களை தவிர ...???

+
கே இனியவன் 
காதல் சோக கவிதை

  • 1 month later...
  • தொடங்கியவர்
நீ கவலை படாதே ....
எனக்கு கவலை வாழ்கை ....
உனக்கும் சேர்த்து 
கவலைப்படுகிறேன்....
இன்பத்துக்கு மட்டுமல்ல ....
காதல் .....!!!

நம் இருவரின் காதல் ....
முகத்தால் வந்திருந்தால்....
முகத்தை சுழித்துவிட்டு ....
போயிருப்பேன் -அகத்தால்....
வந்து தொலைந்து ....
விட்டதே ....!!!

&
.............காதல் சோக கவிதை.................
..............கவி நாட்டியரசர்..................
.........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!

மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • 1 month later...
  • தொடங்கியவர்

நீ 
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ 
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!

கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதலின் 
கடும் தண்டனை ....
மௌனமாயிருந்து ....
கொல்வதே....!!!

உன்னைப்போல் ....
அன்பை என்மீது ...
யாரும் வைத்ததில்லை ...
உன்னை தவிர என்னால் ..
யாரிலும் அன்பு வைக்க ...
போவதில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று 
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

வேண்டாமடி ...
என்னை காதலித்து விடாதே ....
நான் படும் அவஸ்தையை ....
நீயும் படாதே ....!!!

இதயத்தின் காயங்கள் 
உள்ளேயே இருப்பதால் ....
வெளியே தோன்றும் ....
அழகில் மயங்கி விடாதே ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

உனக்கு .... 
முதல் நான் ... 
இறந்தாலோ .... 
எனக்கு.... 
முதல் - நீ 
இறந்தாலோ .... 
நம் .... 
கல்லறையின் ... 
வாசகம் - " மீண்டும் 
காதலிப்போம் " .... 
அடுத்த ஜென்மத்தில் ...!!! 

+ 
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

நான் 
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நீ 
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்.... 
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்


 

  • தொடங்கியவர்

நீ 
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!

ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால் 
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!! 

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • 2 months later...
  • தொடங்கியவர்

 நீ 
சிந்திவிடக்கூடாத 
கண்ணீர் -நான் 
சிந்திக்கிறேன் 
கண்ணீர் வருகிறது 

என் வாழ்க்கையில் 
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து 
உன்னை நான் தெருவில் 
பார்த்தது 

என் தூக்கத்தை 
கனவு கலைக்கிறது 
என் நினைவை 
நீ கலைக்கிறாய் 

கஸல் ;134

வயலில் புற்கலாக‌
வளர்கின்றன‍
நான் பசுவாக‌ நின்று
மேய்கிறேன்

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்

கஸல் ;135

  • தொடங்கியவர்

மனம் உன் பார்வையால்
உடைந்து சிதறி விட்ட்து 
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்.....
கடந்து என்மீது பட்டதால்....
இந்தவலி.....!!!

கஸல் ;136

உள்ளத்தில் காதல்.....!
வேண்டாம் ‍போதும்.....
அவஸ்தை......
தயவு செய்து இன்னும்......
கொஞ்சம் காயப்படுத்து.....
உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

 ஒவ்வொரு இமை....
சிமிட்டலும் உன்னை....
நான் இழப்பதாகவே....
வருந்துகிறேன்...
கண்சிமிட்டும் ...
நேரம் வராதே....!!!

காதல் என்பது....
உடல் முழுவதும்....
உள்ளமாக‌ மாறும்...
இயற்கை நிகழ்வு.....!!!

கஸல்;137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.