Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூழல் சமநிலை தொடர்பில் விழிப்பாக இருங்கள்: சி.வி.

Featured Replies

article_1446462159-cv.jpg


முல்லைத்தீவில் இடம்பெறும் காடு அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சூழல் சமநிலை பாதிக்கப்படுவது தொடர்பில் விழிப்பாக இருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாவற்குளி நீரேரிக்கு அண்மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மரம் நடுகை மாதத்தின் தொடக்க விழாவின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 

மனிதர்களின் தான்தோன்றித்தனமான போக்குகளால் இயற்கையின் சமநிலை பாதிப்படைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்த போதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்தகாலத் தவறுகளைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. 

மரங்களின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்ற நீர் ஆவியாகி மேலே செல்வதாலேயே மழைவீழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கின்றது. தெற்கிலுள்ள சிங்கராஜா காடுகள் போன்றவற்றில் காணப்படுகின்ற பெருமரங்களின் காரணமாகவே அங்கு மழைவீழ்ச்சி கூடுதலாகக் காணப்படுவதுடன், நீர்ச்சக்கர சுழற்சி முறையும் பேணப்படுகின்றது.

அளவுக்கதிகமான இரசாயன உரப்பாவனையால் நிலத்தடி குடிநீரில் நைட்ரேட்ஸ் அளவுக்கதிகமாகி நீர் குடிப்பதற்கு ஒவ்வாததாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எமக்குண்டு. கனிப்பொருட்களின் சுழற்சிக்கு தாவரங்கள் எவ்வளவு முக்கியமென்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இரசாயன உரப்பாவனையைக் கட்டுப்படுத்தி இயற்கைப் பசளைகளை உருவாக்குவதற்கும் விறகுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மரங்களை உருவாக்க வேண்டியது எமது பாரிய பொறுப்பு. 

எமது வன்னிக் காட்டில் இருக்கும் காடுகள் பற்றிய கூகுள் படம் ஒன்றை அண்மையில் பார்க்க நேர்ந்தது. மன்னாரில் நானாட்டானில் இருந்து முல்லைத்தீவு வரையில் ஒரு கோடு கீறினோமானால் அந்தக் கோட்டின் நடுவில் பல இடங்களில் காட்டினுள் களவாக காட்டு மரங்கள் வெட்டப்பட்டு நிலமானது வெளியாக்கப்பட்டுள்ளதைக் கூகுள் படம் பளச்சென்று காட்டியது. யார் இதைச் செய்கின்றார்கள்? விலையுயர்ந்த காட்டு மரங்கள் எவ்வாறு கடத்திச் செல்லப்படுகின்றன? வன இலாகா அதிகாரிகளும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளும் என்ன செய்கின்றார்கள்? ஏது செய்கின்றார்கள்? என்பதை நாம் அறிய முடியாமல் இருக்கின்றது. 

மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் திணைக்களங்கள், அரசியல் செல்வாக்குடன் தான் இந்தக் காட்டை அழிக்கும் கைங்கரியம் கைகூடி வருகின்றது. இந்த இடங்களில் எல்லாம் யாரைக் குடியமர்த்தப் போகின்றார்கள் என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

காட்டின் நடுவே மொட்டையாக்கப்படும் இடங்கள் மீளவும் மரங்கள் வளர்த்துப் பாதுகாக்கப்பட வேண்டும். எமது வன இலாகா அலுவலர்கள் இனியாவது விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.

http://www.tamilmirror.lk/158136/ச-ழல-சமந-ல-த-டர-ப-ல-வ-ழ-ப-ப-க-இர-ங-கள-ச-வ-#sthash.kW5DzK7B.dpuf

 

  • தொடங்கியவர்

வன்னியில் அரச செல்வாக்குடன் காடழிப்பு கைகூடிவருகிறது; வடமாகாண முதலமைச்சர் 

வன்னிக் காட்டில் அரசியல் செல்வாக்குடன் காடழிக்கும் கைங்கரியம் கைகூடி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற மரம் நடுகை மாத நிகழ்வுகளின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 http://www.thinakkural.lk/article.php?local/a2ljgwmpql40313be021418518457xkrovd6177a9aa6adea5a720b09bxcel#sthash.JSbvelFg.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.