Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“உலகின் வலுவான அமெரிக்காவுடன் போரிட்டு மீண்டெழுந்துள்ள வியாட்நாம் மக்களிடம் நாம் கற்க வேண்டும்”

Featured Replies

"நான் அரசியல்வாதியல்ல உயர்நீதிமன்ற நீதியரசர்" - சி.வி.விக்னேஸ்வரன்:-

“உலகின் வலுவான அமெரிக்காவுடன் போரிட்டு மீண்டெழுந்துள்ள வியாட்நாம் மக்களிடம்  நாம்  கற்க வேண்டும்”


உலகின் வலுவான நாடான அமெரிக்காவுடன் போரிட்டு மீண்டெழுந்துள்ள வியாட்நாம் மக்களிடம் இருந்து நாம் பலதை கற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது வாசஸ்தலத்தில் திங்கள் கிழமை காலை வியாட்நாம் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கைக்கு சில அரசியல் காரணத்தால் கடந்த காலத்தில் வர முடியாது போனதாகவும் இங்கு வந்தால் பிரச்சனைகள் ஏற்படும் என தமக்கு கூறப்பட்டதாகவும் அதனாலையே கடந்த காலத்தில் வர முடியாது போனதாக வியாட்நாம் தூதுவர் தெரிவித்தார்.

உலகில் வலுவான நாடான அமெரிக்காவுடன் போரிட்டு அமெரிக்காவை தோற்கடித்த உங்களிடம்  இருந்து பலதை நாம் கற்க வேண்டும் என கூறினேன்.

அவ்வாறான பேருக்கு பின்னர் எவ்வாறு மீண்டு எழுந்தார்கள் என்பது பற்றி கேட்டேன் அதற்கு அவர் ஒரு தீர்மானத்தை உடனுக்கு உடன் எடுக்க வேண்டிய குணாதிசம் இருக்க வேண்டும் தாம் தமது குறிக்கோள்களை இலக்குகளை முன்னமே நிதானிந்து அந்த இலக்கை நோக்கி முன்னோருவோம் என கூறினார்.

அவரிடம் இருந்து நான் பலதை கற்று கொண்டேன் இப்பேற்பட்ட எண்ணங்கள் தான் அவர்களை முன்னேற்றி வருகின்றது என்பதை அறிந்து கொண்டேன். இதனை எமது மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசுக்கு  தம்முடன் சேர்ந்து முன்னேற வேண்டிய மனோ நிலை இல்லை போல் தோன்றுகின்றது என்பதை அவர் என்னிடம் வருத்தத்துடன் குறிப்பிட்டார். என முதலமைச்சர் தெரிவித்தார்.
 

"நான் அரசியல்வாதியல்ல உயர்நீதிமன்ற   நீதியரசர்"  - வியாட்நாம் தூதுவர் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் அறிமுகம்:-


தான் அரசியல்வாதியல்ல உயர்நீதிமன்ற   நீதியரசர் என தன்னை வியாட்நாம் தூதுவர் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் அறிமுகம் செய்து செய்து கொண்டார்.

யாழில் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று காலை முதலமைச்சர் சி.வி,விக்னேஸ்வரன் வியாட்நாம் தூதுவர் மடான் பான் கியூ து வை சந்தித்து கலந்துரையாடினார்.

அச் சந்திப்பின் போது வடமாகாண முதலமைச்சர் தன்னை அறிமுகம் செய்யும் போதே அவ்வாறு அறிமுகம் செய்து கொண்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125539/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.