Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் கைதிகள் விடுக்கு காத்திருக்கும் தமிழர் தாயகம் - - GTBC.FM பத்திரிகை கண்ணோட்டம்

Featured Replies

தமிழ் கைதிகள் விடுக்கு காத்திருக்கும் தமிழர் தாயகம் - - GTBC.FM பத்திரிகை கண்ணோட்டம்

 

தமிழ் நாளிதழ்களின் பிரதான தலைப்பு செய்தியாக கைதிகள் விவகாரம்:-

தமிழ் கைதிகள் விடுக்கு காத்திருக்கும் தமிழர் தாயகம் - - GTBC.FM பத்திரிகை கண்ணோட்டம்:-
 
இன்றைய தமிழ் நாளிதழ்கள் பலவற்றில் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் பிரதான தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இலங்கை அரசு என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு தமிழர் தாயகத்தில் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது இவ்வாறு GTBC.FM பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது. 
 
குளோபல் தமிழ் குழுமத்தின் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் தமிழ் நாளிதழ்களின் பிரதான தலைப்புச் செய்திகள் பகுதிகளில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
இவ்வாரம் இறுதி முடிவு  என்ற தலைப்பில் வீரசேகரி நாளிதழ் தனது  பிரதான தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக மாவை குறிப்பிட்டிருப்பதாகவும் வீரகேசரி நாளிதழின் பிரதான தலைப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தொடர்கிறது ஏமாற்றம் என்ற தலைப்பில் தனது பிரதான தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது தினக்குரல் நாளிதழ். 
 
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நவம்பர் மாத்திலிருந்து பிணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறிய போதும் அதற்கான வாய்ப்பு குறைந்து வருவதால் தாம் பெரும் ஏமாற்றம் கொண்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்திருப்பதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
விடுதலை இன்றேல் சாவுதான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் பிரதான தலைப்புச் செய்தி. தமிழ் அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமது உடல் உறுப்புக்களை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறும் தமிழ் அரசியல் கைதிகள் உருக்காக கூறியுள்ளனர். நீண்ட காலமாக விசாரணையுமின்றி நீதியுமன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் வேறு என்ன செய்வது? 
 
பயங்கரவாத தடைச்சட்டம் என்ற கொடிய சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இளமைக்காலத்தை, வாழ்க்கையை சொந்தங்களை, குடும்பங்களை இழந்து இத்தனை ஆண்டுகள் சிறையில் ஒடுக்கப்பட்டவர்களை தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எதுவுவரை இவ்வாறு சிறை வைக்கப் போகிறது? 
 
கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முன்வரும் இலங்கை அரசாங்கம் அந்த சட்டத்திற்கு பலியானவர்களை, பாதிக்கப்பட்டவர்களை, அப்பாவி இளைஞர்களை விடுவிக்க தயங்குவது ஏன்? சொல் ஒன்றும் செயல் ஒன்றுமான வெளிப்பாடா இது? 
 
தமிழ் அரசியல் கைதிகள் குறித்த உறுதியான நிலைப்பாடு தேவை ஜனாதிபதியை கோரும் அடைக்கலநாதன் என்ற தலைப்பில் தனது பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ். 
 
அரசியல் கைதிகளின் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்றும் 250க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக எவ்வித காரணமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அத்துடன் போராட்டத்தில் பங்கேற்ற போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்மட்டத்தினர் செல்வாக்குடன் அரசின் செல்லப் பிள்ளைகளாக வலம்வர நீர் கொடுத்தார்கள், உணவு கொடுத்தார்கள் என்று தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியிருப்பதாக அந்த செய்தி தொடர்கிறது. 
 
தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா என்ற ஏக்கத்துடன் எதிர்பார்ப்புடன் தமிழர் தாயகம், தமிழ் இனம் காத்திருக்கிறது. நல்லிணக்கம், நல்லாட்சி என்றெல்லம் சொல்லிக்கொள்ளும் அரசு கொடிய சட்டத்தில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவிகள் விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப் போகிறது என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.