Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்கு பெக்கர் போன்று ரணிலுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்துள்ளார்

Featured Replies

மஹிந்­த­வுக்கு பெக்­கர் ­போன்று ரணி­லுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்­துள்ளார்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொண்­டு­வந்­துள்ள இடைக்­கால பொரு­ளா­தாரத் திட்­ட­மா­னது நாட்டின் அரச துறையை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தி நாட்டை நாசப்­ப­டுத்தும் ஜே.ஆர். மற்றும் பிரே­ம­தா­சவின் கலப்பு திட்­ட­மா­கு­மென சாடி­யுள்ள ஜே.வி.பி. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விற்கு ஜேம்ஸ் பெக்கர் கிடைத்­த­தைப்போல் பிர­தமர் ரணி­லுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.mahinda--ranil-wickramasinghe-George-Sor

சீபா உடன்­ப­டிக்கையை மேற்­கொண்டு நாட்டின் பொரு­ளா­த­ரத்தை முழு­மை­யாக சீர­ழிக்க முயற்­சிக்கும் புதிய ஆட்­சி­யா­ளர்கள் சர்­வ­தேச கறுப்­புப்­பணம் அனைத்­தையும் இலங்­கையில் குவிக்­கவே நட­வ­டிக்­கை­ எடுத்து வரு­வ­தா­கவும் அக்­கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

ஜே.வி.பி.யின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு அக்­கட்­சியின் தலை­மை­ய­க­மான பெல­வத்­தையில் நேற்று நடை­பெற்­றது. இதன் போது கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்;

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்ட இடைக்­கால பொரு­ளா­தார திட்­ட­மா­னது இந் நாட்டின் அரச பொரு­ளா­தாரத் துறையை முழு­மை­யாக சீர­ழிக்கும் ஒரு திட்டம் என்றே நாம் கூறு­கின்றோம். அதேபோல் இந்த திட்­ட­மா­னது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மூன்றாம் தலை­முறை பொரு­ளா­தார திட்­ட­மா­கவே அமைந்­துள்­ளது. 1977ஆம் ஆண்டு அப்­போ­தைய தலைவர் ஜே.ஆர்.ஜெய­வர்­த்த­ன­வினால் முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார திட்­ட­மா­னது நாட்டின் பொரு­ளா­தாரத் துறை­யையும், நாட்டின் உற்­பத்தி வீதத்­தையும் முழு­மை­யாக சீர­ழித்­தது. அதேபோல் பிரே­ம­தா­ச­வினால் முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார திட்­டத்தில் நாட்டின் அர­ச­ சொத்­துக்கள் அனைத்தும் தமது தேவைக்­கா­கவும் வேண்­டப்­பட்ட நபர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்­துள்ள இடைக்­கால பொரு­ளா­தாரத் திட்­ட­மா­னது மேற்­கு­றித்த இரண்டு தலை­வர்­களின் பொரு­ளா­தாரத் திட்­டங்­க­ளி­னது கல­வை­யா­கவே உள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இடைக்­கால பொரு­ளா­தார திட்­ட­மா­னது நாட்டின் அரச துறையை முழு­மை­யாக ஒன்­றி­ணைத்து அவற்றை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது. அரச சேவை­களை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தும் பாரிய வேலைத்­திட்­டத்தை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. இதனால் நாட்டில் பாரிய பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­படுவதற்கான வாய்ப்­பு­க்களே அதி­க­ரிக்கும் ஆபத்து உள்­ளது. நாட்டின் அரச துறை­யையும் அத­னுடன் கூடிய பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளையும் தனியார் மயப்­ப­டுத்த முயற்­சித்த கால­கட்­டத்தில் எமது ஏற்­று­மதி வீதம் பாரிய வீழ்ச்­சியை கண்­டது. உலகச் சந்­தையில் 200 இல் ஒரு சத­வீ­த­மாக இருந்த இலங்­கையின் பங்­குகள் இப்­போது 2000 இல் ஒரு சத­வீ­த­மாக மாறி­யுள்­ளன. இதற்கு எமது பொரு­ளா­தார நகர்­வு­களே பிர­தான கார­ண­மா­கின்­றது. ஆகவே அர­சாங்கம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டால் சர்­வ­தேச வர்த்­தகச் சந்­தை­யிலும், பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளிலும் எமது நாடு பாரிய பின்­ன­டை­வையே எதிர்­கொள்ள நேரிடும்.

சீபா உடன்­ப­டிக்கை
இலங்கை அர­சாங்கம் மீண்டும் சீபா உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. இந்த சீபா உடன்­ப­டிக்கை தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்­பட்ட சிக்­கல்கள் தொடர்பில் அறிந்தும் மீண்டும் அவ்­வா­றான ஒரு பொரு­ளா­தார சிக்­கலை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. 2000 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் இந்த உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்ட பின்னர் இலங்­கையின் தேசிய பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் பாரிய தாக்கம் ஏற்­பட்­டது. எமது தேசிய பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் இந்­தி­யாவின் நேரடித் தலை­யீ­டுகள் ஏற்­பட ஆரம்­பித்­தது. அதனால் எமது நாட்டின் சாதா­ரண வியா­பா­ரி­களும் விவ­சா­யி­க­ளுமே அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டனர். அதே நிலைமை மீண்டும் இப்­போது தலை­தூ­க்கி­யுள்­ளது. ஆகவே இந்த சீபா உடன்­ப­டிக்­கையை உட­ன­டி­யாக தடை செய்ய வேண்டும்.

ரணி­லுக்கு ஜோர்ஜ் சொரோக்
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தமது பொரு­ளா­தார நண்­ப­னாக எவ்­வாறு சர்­வ­தேச சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்­கரை பயன்­ப­டுத்தி இலங்­கையில் தேசிய வியா­பார நட­வ­டிக்­கை­களின் ஊடாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சூறை­யாட முயற்­சித்­த­ாரோ அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­பொ­ழுது சர்­வ­தேச ரீதியில் சட்­ட­வி­ரோத முறையில் செயற்­படும் வியா­பா­ரி­யான ஜோர்ஜ் சொரோக் என்­ப­வரை இலங்­கைக்கு அழைத்­து­வர திட்­ட­மிட்­டுள்ளார்.

இவர் மேற்­கத்­தேய நாடு­களில் மட்­டு­மல்­லாது ஆசிய–பசுபிக் நாடு­களில் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டவர். அந்­நா­டு­களின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யா­கவும் விமர்­சிக்­கப்­படும் ஒரு­வ­ராவார். அவ்­வா­றா­ன­வரை இலங்­கையின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் இணைத்­துக்­கொண்டு சர்­வ­தேச ரீதியில் பாவ­னையில் இருக்கும் அனைத்து கறுப்­புப்­ப­ணத்­தையும் நாட்­டுக்குள் கொண்­டு­வந்து குவிக்கவே முயற்சிக்கின்றார் இதற்கு இடமளிக்கமாட்டோம்.

http://www.virakesari.lk/articles/2015/11/10/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%C2%AD%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%C2%AD%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.