Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்புக் குறித்து திங்களன்று முடிவு! - விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி வாக்குறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்புக் குறித்து திங்களன்று முடிவு! - விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி வாக்குறுதி
[Thursday 2015-11-12 19:00]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னினப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னினப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான தனது முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை தெரிவிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்துள்ளார்.

  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், ரி.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், பி.டெனீஸ்வரன் ஆகியோருக்கும் இடையில் இன்று காலை 11.00 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதியுடன் அவரது ஆலோசகர் கருணாரட்ணவும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்தார். வடமாகாணசபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், மத்திய அரசாங்கத்தினால் எதிர்கொள்ளப்படும் தடைகள் என்பவற்றை விளக்கும் விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதிலுள்ள விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்த முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கியமாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர், அதேபோல தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இருந்த போதிலும் இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இருந்தபோதிலும், இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த முதலமைச்சர், ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கைதிகளின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழ்க் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதால் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் மட்டுமல்ல எனத் தெரிவித்த முதலமைச்சர், கைதிகளுடைய குடும்பத்தினரும் இதனால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தினந்தோறும் தன்னைச் சந்திக்கும் கைதிகளின் உறவினர்கள், இது தொடர்பில் எழுப்பும் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க வேண்டியிருப்பதாகவும் முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து கைதிகளின் முழுமையான கோவைகளையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு சட்டமா அதிபரைப் பணித்த ஜனாதிபதி, எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்துக்கு தான் பதிலளிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததார்.

இதனையடுத்து வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றத்துக்காக எனக்கூறி காடழிக்கப்படுவது போன்ற விடயங்கள் முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள இராணுவத்தை படிப்படியாக விலக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். முதற்கட்டமாகாண குடியிருப்பு கலாசார மண்டபம் மற்றும் பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சிப்பாடசாலை என்பவற்றிலுள்ள இராணுவத்தை விலக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடினோம். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு ஒன்றரை மணிநேரம் வரை இடம்பெற்றது. வடக்கு மாகாணத்திலுள்ள அன்றாட, உடனடிப்பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இராணுவம் தொடர்ந்தும் பொது இடங்களில் நிலைகொண்டுள்ளமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொது இடங்கள் பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். படிப்படியாக இராணுவத்தை பொது இடங்களிலிருந்து அகற்றுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சிப்பாடசாலை மற்றும் குடியிருப்பு கலாசார மண்டபம் என்பவற்றிலிருந்து உடனடியாக இராணுவத்தை விலக்க சம்மதம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு கூட்டுறவு பாடசாலை பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. 2009ற்கு பின்னர் இராணுவத்தால் கையேற்கப்பட்ட இந்த கட்டிடமானது முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையமாக இயங்கி வருகின்றது. அதேபோன்று குடியிருப்பு கலாசார மண்டபம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இராணுவ முகாமாக இயங்கி வருகின்றது. மக்கள் செறிந்து வாழுகின்ற நகரப்பகுதியில் கோவில், சிறுவர் பூங்கா, பாடசாலைக்கு மத்தியில் இந்த முகாம் இயங்கி வருகிறது. இவற்றிலிருந்து இராணுவத்தை விலக்கி இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=144646&category=TamilNews&language=tamil

இந்த விக்கியர், எங்கடை ஆக்களை உள்ளுக்குள்ளை இருந்து வெளியில் எடுப்பதற்குள் ... இவரை "பின்வாசலால் உள்நுளைக்கப்பட்ட" சுமந்திரன் தூக்கி வெளியே போட்டுடுவார்! ... தேவையா விக்கியருக்கு உந்த வேலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.