Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் மனங்களை வெல்லமுடியுமா?

Featured Replies

தமிழர்களின் மனங்களை வெல்வது

`

வடக்கில் ஏ9 பாதையும் கிழக்கில் ஏ15 பாதையும் இப் போது திறக்கப்படும் சாத்தியம் எதுவும் தென்படவில்லை.

அதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாடும் தமிழ்மக்களும், இராணுவ மோதல் களினால் தங்கள் சொந்த இடங்களை விட்டு பல தடவைகள் அங்கும் இங்குமாக அலைந்து அகதி முகாம்களிலும் உறவினர் கள் , தெரிந்தவர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்து வாழும் வாகரைப் பிரதேச தமிழ் மக்களும் அல்லற்பட்டு அவதியுறவேண்டுமா?

போதிய உணவுப் பொருள்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஏனைய பொருள்கள் வைத்திய வசதிகள் மற்றும் மருந்து வகை கள் கிடைக்காமல் தொடர்ந்து பேரவலத்தை அனுபவித்துக் கொண்டு தமிழர்கள் அவலப்படவேண்டியதுதானா?

யாழ்ப்பாணத்திலும் வாகரையிலும் உண்டாக்கப்பட்டிருப் பது பெரும் மனிதப் பேரவலம். உலகறிந்த மனிதாபிமானப் பிரச்சினை. ஆயினும் அதனை நீக்குவதற்கு, போக்குவதற்கு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இணக்கம் ஏற் படும் என்பதற்கான அறிகுறி கீற்றளவேனும் மக்கள் கண்ணுக் குப் புலப்படுவதாக இல்லை.

யாழ்ப்பாண மக்களின் பேரவலம் முகிழ்த்து இன்றுடன் நான்கு மாதங்கள் கடந்தாகிறது. வாகரை மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கும் விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காகி அகதிகளாக மாறி இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

இந்த இரண்டு பிரதேசங்களிலும் பாதைகள் மூடப்பட்டும் அடிக்கடி தடுக்கப்பட்டும் அவற்றின் விளைவாக தமிழ் மக்கள் எண்ணற்ற அவஸ்தைகளையும் அவலங்களையும் எதிர்கொள் வதற்கு இராணுவ மோதல்களே காரணம்.

மனிதநேயமும் மனிதாபிமானமும் இருந்திருப்பின் அரசாங் கம் இரண்டு பாதை விவகாரங்களையும் இவ்வளவு பெரிதாக்கி, தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்கி நாசப்படுத்தி இருக்காது.

விடுதலைப் புலிகள் விட்டுக்கொடுக்காமல், தமது சொந்த மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தாமல் செயற்படுகிறார் கள் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டு பாதைகளைத் திறப்பதற்கு அவர்களே தடையாக உள்ளனர் எனத் தட்டிக்கழித்து வருகிறது.

சமாதானத்தின் அடையாளமாக அதன் அர்த்தத்தைச் செயல் வடிவில் காட்டும் அத்தாட்சியாக இருந்த ஏ9 பாதையை மூடி விட்டு, நடைமுறைக்கு ஒவ்வாத ஒருமுறைப் பயணக் கதையைச் சொல்லிக் கொண்டே காலத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய காலம்வாங்கும் தந்திரத்துக்கு உள்ளே, பெரிய சூத்திரம்ஒன்று அரசின் கையில் உள்ளது என்பதனை சமகாலப் போக்குகளை அறிந்துகொண்ட எவரும் புரிந்துகொள்வர்.

இதற்கிடையில்

ஏ9 வீதியூடாக ஒரே தடவையில் ஆயிரக்கணக்கான தொன் உணவுப் பொருள்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருள் களையும் 400 லொறிகளில் அனுப்புவதற்குத் தான் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமா? வெளிநாட்டு ராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்தித்தபோது, யாழ்ப்பாண மக்களின் மனிதாபிமானப் பிரச் சினை குறித்து அவர்கள் பிரஸ்தாபித்த வேளை, அங்கு போதிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டி ருப்பதாக அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்து நம்ப வைத்தி ருக்கின்றனர். அதற்காக ஒரு பொம்மை அதிகாரி உருவாக்கப் பட்டதாகவும் தகவல்.

ஏற்கனவே இப்பத்தியில் பல தடவைகள் எடுத்துக்காட்டப் பட்டது போன்று ஏ9 பாதை திறந்திருக்க வேண்டும் என்று அரசு புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 2.10 ஆவது சரத்து கூறுகிறது.

இராணுவப் பயன்பாடற்ற பொருள்களை எடுத்துச் செல் வதற்கும் பிரயாணிகள் பயணம் செய்வதற்கும் கண்டி யாழ். வீதியை(ஏ9) இரு தரப்பினரும் திறந்துவிடவேண்டும். இது தொடர்பான ஒழுங்குகள் நோர்வே அரசின் உதவியுடன் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வருகின்ற நாளில் இருந்து 30 நாள் களுக்குள் செய்து முடிக்கப்படவேண்டும்.

ஆனால், நான்கு வருடங்களுக்குக் கூடுதலாக ஒப்பந்தத் தின் பிரகாரம் திறந்து கிடந்த ஏ9 வீதியை இராணுவ ஆலோ சனையின் பெயரில் அரசாங்கம் கடந்த நான்கு முழு மாதங்க ளாக மூடிவைத்திருக்கிறது.

மக்களுக்குரிய பலவித அத்தியாவசிய, அவசர சேவைகளுக்கு வழி சமைத்த அந்தப் பாதை இப்போது இராணுவப் பூட்டுப் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குடாநாட்டில் ஏற் பட்டுள்ள அவலம், வழமை நிலை இழந்த வாழ்க்கை என்பன இப்போது சர்வதேசமும் அறிந்ததுதான்!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஏ9 பாதைய மூடி வைத்தி ருப்பது நியாயமா என்று அரசாங்கத்தை எந்த வெளிநாடும் கேள்வி கேட்கவில்லை. பாதையைத் திறக்கவேண்டும் என்று வெளியில் பேச்சுக்கு போசக்கைக்கு வலியுறுத்துகின்றவே அன்றி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டீர்களே அது சரியா, நியாயமா என்று தட்டிக்கேட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

போர்நிறுத்த ஒப்பந்தம் அரசு புலிகள் உடன்படிக்கையில் பிரதான பாகம். அந்தப் பிரதான பாகத்தைக் கண்காணிக்க நிய மிக்கப்பட்டது போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு. அந்தக் குழு வின் தலைவர் பயங்கரவாதத் தடைச்சட்டம், போர்நிறுத்த மீறல் என்று கூறி விளக்கம் கேட்டதற்கு, அரசாங்கம் அவ்வாறு கேட்க முடியாது என்று எச்சரித்திருக்கிறது. கண்காணிப்புக் குழு பாவம், இப்போது மூக்குடைபட்ட நிலையில்.

இதற்கு மேல், அரசு இணங்கிக் கொண்ட எந்த விடயத்தை மீறினாலும் எவரும் கேட்கப்போவதில்லை. கண்காணிப்புக் குழுத் தலைவரின் கதிக்கு ஆளாக எவர்தான் விரும்புவர்?

தமிழர்கள் வேறு. விடுதலைப் புலிகள் வேறு. தமிழர்கள் எல் லோரும் விடுதலைப் புலிகள் அல்லர் என்று ஜனாதிபதி உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் விலாசத்துடன் கூறிவருகிறார். அதற்கு உண்மை வடிவம் கொடுக்க வேண்டுமானால் கொழும் புத் தலைவர்கள் எல்லோரும் நீண்டகாலமாக வழமையாகவும் அடிக்கடியும் கூறுவது போன்று தமிழ் மக்களின் மனங்களை வென்றாக வேண்டும். இல்லையா?

ஏ9 பாதையை மூடி வைத்துக்கொண்டு ஒரு தடவை மட்டும் அந்த வீதியால் பொருள்களைக் கொண்டுவருவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களின் மனங்களை வெல்ல முடியுமா?

தமிழ் மக்கள் அவர்களின் வாழ்வியலை சகல வகைகளாலும் நசுக்குவதனால், அவர்களின் மனங்களை வெல்ல முடியும் என்ற கோட்பாட்டைக் கைக்கொள்ளச் சித்தமாவதையே, அரசின் போக் குக் காட்டுகிறது யார் என்ன செய்ய இயலும் என்ற மமதையு டன்!

அதேபோன்று, வாகரை மக்களுக்கான உணவுப் பொருள் களுடன் வாகன அணி செல்லும்போது, விடுதலைப் புலிகள் சந் தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிக் கொண்டு அந்தப் பகுதி வாழ் தமிழர்களின் மனங்களை வெல்லமுடியுமா?

http://www.uthayan.com/editor.html

post-2794-1165741304_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.