Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மசாஜ் செலவு ரூ.1.72 லட்சம்: கர்நாடக கவர்னரின் ஆடம்பர வாழ்க்கை!

Featured Replies

மசாஜ் செலவு ரூ.1.72 லட்சம்: கர்நாடக கவர்னரின் ஆடம்பர வாழ்க்கை!

 

KARNATAKA%20govt.jpgபெங்களூரு: கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலாவின் மசாஜ் செலவு மாதந்தோறும் ரூ.1.72 லட்சம் என்று செய்திகள் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் கவர்னராக குஜராத்தைச் சேர்ந்த வஜுபாய் வாலா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கவர்னர் மாளிகையில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்? அவர்களின் பணிகள் என்னென்ன? எவ்வளவு ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது?' என்று  ஹலசூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இது தொடர்பாக, கவர்னரின் செயலர் கல்பனா தகவல் கொடுக்க மறுத்ததால், நரசிம்மமூர்த்தி கர்நாடகா தகவல் கமிஷனிடம் புகார் செய்தார். கல்பனாவுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்த கமிஷன், உடனடியாக தகவலளிக்கவும்  உத்தரவிட்டது.

அபராதத்தை செலுத்திய பின்  கல்பனா கொடுத்த பதிலில், " கவர்னர் மாளிகையில், 161 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு மாதந்தோறும் 30 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கவர்னருக்கு மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு, மாதந்தோறும் தலா 14,550 ரூபாய் வீதம், மொத்தம், 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது. மசாஜ் செய்வதற்கான எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

கவர்னரின் உடல்நலத்தை கவனிக்க ஒரு டாக்டர், மூன்று நர்ஸ்கள், ஒரு பார்மாசிஸ்ட் ஆகியோர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கவர்னர் மாளிகை சமையல் அறையில் உள்ள ஊழியர்களுக்காக, மாதந்தோறும், 2.94 லட்சம் ரூபாயும், ஏழு சலவை தொழிலாளர்களுக்கு, 1.01 லட்சம் ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது. முந்தைய காலத்தில் பாத்திரங்களை பயன்படுத்தும்போது, 'ஈயம்' பூசுவது வழக்கம். அந்த பணியை கவர்னர் மாளிகையில் செய்வதற்கு, எட்டு ஊழியர்களுக்கு, மாதந்தோறும், 1.16 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கவர்னர் மாளிகை நுழைவாயிலில் இருந்து பத்திரிகைகள், கடிதங்கள் ஆகியவற்றை சேகரித்து, கவர்னர் அலுவலகத்தில் சேர்க்கும் ஊழியருக்கு, மாதந்தோறும், 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து  நரசிம்மமூர்த்தி கூறுகையில், கர்நாடக கவர்னர் மாளிகையில் அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. பல வகைகளில் இந்த செலவுகளைக்  கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55440

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.