Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனிதத்தை பிய்த்தெறிந்த சாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதத்தை பிய்த்தெறிந்த சாதி

மகாராட்டிரா மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கயர்லாஞ்சியில் வாழ்ந்த ஒரே தலித் குடும்பத்தினைச் சேர்ந்த 4 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதியினரை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக அக்குடும்பத் தலைவரான பய்யாலால் போட்மாங்கே வீட்டில் இல்லாத போது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் 2006, செப்டம்பர் 29-ஆம் நாள்.. மாலை 5 மணிக்கு பய்யாலாலின் மனைவி சுரேகா, 19 வயது மகள் பிரியங்கா, 23 வயது மகன் ரோஷன், பார்வையற்ற 21 வயது மகன் சுதிர் ஆகிய நால்வரையும், வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்துள்ளனர். நால்வரின் ஆடைகளையும் உருவி, உடம்பில் துணியேயின்றி ஊரின் மய்யப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அடித்தது போதாது என்று ரோஷனை அவரது தங்கையான பிரியங்காவுடன் உடலுறவு கொள்ளும்படி மிரட்டினர். மறுத்த ரோஷனையும் சுதிரையும் மிகக் கடுமையாக தாக்கியதோடு.. அவர்கள் பிறப்பு உறுப்பு மீது அடித்து உதைத்தும்.. இறுதியாக பிறப்பு உறுப்பையே வெட்டி எறிந்தனர். இது ஒரு புறம் நடந்த அதே வேளையில் தாய் சுரேகாவையும் மகள் பிரியங்காவையும் அனேகமாக கிராமத்தின் அனைத்து ஆதிக்க சாதி ஆண்களும் வன்புணர்ச்சி செய்தனர். பின்னர் மாடு விரட்ட பயன்படும் ‘தொரட்டி’ குச்சியையும், மூங்கில் குச்சியையும் சுரேகா, பிரியங்கா இருவரின் பிறப்பு உறுப்பிற்குள் குத்தியுள்ளனர்.

அடிபட்டு மயங்கிக் கிடந்த ரோஷனையும் சுதிரையும் பல முறை மேலே தூக்கியெறிந்து தரையில் விழச் செய்தனர்.

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இரண்டு மணி நேரம் நடந்த இந்த வெறியாட்டத்திற்குப் பின் நால்வரது உடல்களையும் கால்வாயில் வீசியெறிந்தனர்.

நால்வரும் வீட்டை விட்டு வெளியே இழுத்துவரப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே அங்கு வந்து விட்ட போதும் உயிருக்கு அஞ்சி மறைந்திருந்த பய்யாலாலின் கண் முன்பே இந்த கொடூரங்கள் நடந்து முடிந்தன.

நம்மை நாமே ஆளும்.. நம் வாழ்வை நாமே முடிவு செய்து கொள்ளும் விடுதலைப் பெற்ற சனநாயக நாட்டில்’ ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

இனியும் அடிமைகளாக, ஒதுக்கப்பட்ட குப்பையாக வாழ விரும்பாதவர்கள் எழுந்து நின்று, எதிர்த்து குரலெழுப்பிய போது.. தங்கள் ஆதிக்க நிலை அசைக்கப்படுவதை சகிக்க இயலாதவர்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடே இந்த கொடூரம்.

சாதியத்தையும்.. அதனால் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆதிக்க நிலையையும் தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்ய ஆதிக்க சாதிகள் துணியும் போது.. சாதி இழிவை அழித்தொழிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

பரவலாக அறியப்படுகிற, பேசப்படுகிற சிக்கல்களை மட்டும் கையிலெடுத்தும் போராடுவது எந்த அளவிற்கு அவசியமோ.. அதே அளவிற்கு.. சொல்லப்போனால் அதை விட பன்மடங்கு அவசியம் இது போன்ற வன்கொடுமைகளை உலக அரங்கிற்குத் தெரியப்படுத்துவதும் ஆகும்.

ஏனெனில், இந்திய அரசு இந்திய நாட்டில் சாதிய பேதங்களும் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும் அறவே இல்லை என எந்தவிதக் கூச்சமும் இன்றி உலக அரங்கில் பறைசாற்றிக் கொள்கிறது.

இந்திய சட்டமோ சாதியின் பிடியில் சிக்கி இத்தகு கொடூரங்களுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாது நிற்கிறது

வருணாசிரமத்தை நிலைநாட்டவும்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் ஓங்கிக் குரல் கொடுக்கும் ஊடகங்கள், சாதி தன் கோர முகத்தைக் காட்டும் தருணங்களில் எல்லாம் வாய் மூடி பாராமுகமாக இருக்கின்றன.

தேர்தல் அரசியல் கட்சிகள் எது எதற்கோ ‘மாபெரும் போராட்டங்கள்’ நடத்தினாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளின்போது மட்டும் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றன. அல்லது பின்னணியில் நின்று தூண்டியே விடுகின்றன.

படித்த அறிவு ஜீவி வர்க்கமோ, இத்தகு கொடூரங்களைக் காண விரும்பாது, கேட்க விரும்பாது, எல்லாவற்றிற்கும் மேலாக.. இவற்றை நம்ப விரும்பாது.. தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி அனைத்துத் தரப்பினரும் கைவிட்டுவிட்ட நிலையில், மனித உரிமை அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள், தலித் அமைப்புகள், பெரியார், பொதுவுடைமை, தமிழ்த் தேசிய இயக்கங்கள் உள்ளிட்ட சமூக நலன் நோக்கிய அனைத்து இயக்கங்களுக்கும் இத்தகு கொடூரங்களை எதிர்த்துப் போராட வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளன. அவர்களை விட அதிக பொறுப்பு இச்செய்தி அறிந்த ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கிறது.

நம் ஒன்றிணைந்த குரலும் போராட்டங்களும் மட்டுமே இத்தகு கொடூரங்களுக்கு முடிவு கட்ட இயலும்.

-தென் செய்தி

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.