Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் 
[Thursday 2015-12-03 08:00]

தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை
தமிழக மழை-வெள்ளச் சேதப் பாதிப்புகளை "தேசியப் பேரிடர்' ஆக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மக்களவை, மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்."நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மழை சேத நிலவரம்' தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை பிற்பகலில் விதி எண் 193-இன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்தார். இதில் பங்கேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம் வருமாறு: டி.ஜி.எஸ். வெங்கடேஷ் பாபு (வடசென்னை): மழை - வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிய நிவாரண நிதி ரூ.8,480.93 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஒதுக்க வேண்டும்'.ஏ.அருண்மொழித் தேவன் (கடலூர்): "கன மழையால் நெய்வேலி, குறிஞ்சிபாடி, பன்ருட்டி, சிதம்பரம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் ஆறுகளில் மழை வெள்ளம் அதிகரித்துள்ளது. கடலூரிலும், சென்னையிலும் கனமழை தொடர்கிறது. மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

   
கே.மரகதம் (காஞ்சிபுரம்): கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பரப்பாக்கம், மதுராந்தகம் போன்ற நீர்நிலைகளில் வழக்கமான கொள்ளளவைவிட அதிகமான நீர் நிரம்பியுள்ளது. மீட்புப் பணி மற்றும் நிவாரண நடவடிக்கைளுக்காக பாதுகாப்புப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (தென் சென்னை): சென்னையில் 859 இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. லட்சக்கணக்காண மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்புகளை சேசியப் பேரிடர் ஆக அறிவிக்க வேண்டும். இதே கோரிக்கைகளை அதிமுக எம்.பி.க்கள் எஸ்.ஆர். விஜயகுமார் (மத்திய சென்னை), எம்.சந்திரகாசி (சிதம்பரம்) ஆகியோரும் வலியுறுத்திப் பேசினர். இறுதியாக நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவரும், திருவள்ளூர் தொகுதி உறுப்பினருமான டாக்டர் பி.வேணுகோபால் பேசுகையில், "திருவள்ளூர் மற்றும் மூன்று கடலோர மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்காக துணை நிற்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி. தமிழக மழை பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என்றார்.

முன்னதாக, மக்களவை துணைத் தலைவரும் கரூர் தொகுதி உறுப்பினருமான மு. தம்பிதுரை, "தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு அறிக்கை அளிப்பதற்குள் மழை மீண்டும் கடுமையாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறையின் நடவடிக்கையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவைக்கு வந்து விளக்க வேண்டும்' என்றார். மாநிலங்களவையில்...: மாநிலங்களவையிலும் தமிழக மழை, வெள்ள நிலவரத்தை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா (திமுக), நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், எஸ். முத்துகருப்பன் (அதிமுக), நியமன உறுப்பினர் கே. பராசரன் உள்ளிட்டோர் விரிவாகப் பேசினர். அனைவரும் தமிழக மழை-வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழுமையாக நிதி வழங்கவும் அதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேசிய கட்சிகள் ஆதரவு தமிழக மழை - வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் கருணாகரன் (மார்க்சிஸ்ட் கம்யு.): தமிழகத்துக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சரும், பிரதமரும் வான்வழியாக மழை, சேதப் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். அரவிந்த் கண்பத் சவந்த் (சிவசேனை): மத்தியக் குழு அறிக்கைக்காக காத்திருக்காமல் தமிழகத்துக்கு நிதி வழங்க வேண்டும். இத்தகைய சூழலை சமாளிக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.

துஷ்யந்த் சௌதாலா (ஐஎன்எல்டி): நிவாரண உதவிக்குத் தேவையான மருத்துவ, உணவுப் பொருள்களை அனுப்ப வேண்டும். கூடுதல் பேரிடர் மீட்புப் படையினரை அனுப்ப வேண்டும். சங்கமிதா மம்தா (டிஎம்சி): தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மழை வெள்ளத்துக்கு தேவையான நிவாரண உதவியை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும். இச்சம்பவம் தேசத்துக்கு படிப்பினை. வேணுகோபால் (காங்கிரஸ்): தமிழகத்தில் மலையாளிகள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும். கேரள அரசு தமிழகத்துக்கு உதவத் தயார். மாநிலங்களவையில் டி.ராஜா (இந்திய கம்யூ.): மழை பாதிப்புகளை மீண்டும் மதிப்பீடு செய்ய குழு அமைக்க வேண்டும். தற்போது ஒதுக்கிய நிதி போதாது. மீட்பு நிவாரணத்துடன் பொருளாதார உதவிகளை மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும். பூபிந்தர் சிங் (பாஜக): தமிழக மழை பாதிப்புகள், அதனால், கிடைத்த படிப்பினை குறித்து இரு நாள்களுக்கு சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும். சி.எம். ரமேஷ் (தெலுங்கு தேசம்): தமிழகத்தை போலவே ஆந்திரமும் மழை - வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இது புதிதல்ல. தமிழகத்துக்கு ஆந்திரம் உதவத் தயார். டி.பி. திரிபாதி (என்சிபி): தமிழக பாதிப்பு நிகழ்வைத் தொடர்ந்து தேசிய அளவில் மக்களுக்கு பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146119&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.