Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லயமும் கானமும் ஒரே கருவியில்

Featured Replies

san.jpg

 

 

மென்­டலின் சிவ­கு­மாரின் லலித ஷேத்ரா" எனும் இசை ஒழுங்­க­மைப்பு நிறு­வனம் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக அற்­பு­த­மா­ன-­இ­த­யத்தே ஆழப் பதிந்து நிற்கும் கர்­நா­டக சாஸ்­தி­ரீய இசை நிகழ்­சி­களை நடத்தி வரு­கி­றது.

இது­வரை எமது நாட்டில் நடந்­தே­றா­த -­முற்­றிலும் புதி­யதும், புது­மை­யா­ன­து­மான நிகழ்­சிகள் நான்கு நிறை­வேறி விட்­டன.

ஜனார்த்­தனின் "saxovil fusion concert" ,விக்­கு­வி­நா­ய­க­ரானின்  "சதுர் கட லய சமர்ப்­பணம்", இரா­தா­கி­ருஷ்ணன் "scintillating strings",  ராக­வேந்­தி­ராவின்  "பிர­ணவம்" போன்­றவை ஆகும்.

இவை ஒவ்­வொன்றும் ஒன்­றி­லி­ருந்து மற்­றொன்று முற்­றிலும் வேறுபட்­டதே. இந் நிகழ்ச்­சி­களில் இந்­தி­யாவின் பிர­பல வித்­து­வான்கள் அணிசேர் கலை­ஞர்­க­ளாக பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

இத்­தனை இசைநிகழ்ச்­சி­க­ளிலும் எமது ஈழத்துக் மென்­டலின் கலைஞர்  சிவ­குமார் இணைந்து இசை வழங்­கி­யது சிறப்­பம்­ச­மாகும்.

முதல் நிகழ்ச்­சியில் உலக தவில் மேதை தட்­ச­ணா­மூர்த்­தியின் புதல்வர்  உத­ய­சங்­கரும் இணைந்து சிறப்­பித்­தமை குறிப்­பிடத் தக்­கது.

இந் நிறு­வனம் ஆரம்­பிக்கப் பட்­டதன் நோக்கம், கலைப் பொக்­கி­ஷங்­களை தன்­ன­கத்தே கொண்டு உலக கலை­ஞர்­க­ளுக்­கெல்லாம் அதனை வாரிவழங்கும் பொக்­கிஷ பூமி­யான இந்­தி­யாவில் இன்று இசை பல்­வேறு பரி­மாணங்­க­ளுடன்  பாரம்­ப­ரிய சாஸ்­தி­ரீயத்துடன் மீறாது வளர்ந்து கொண்டு வரு­கி­றது. உதா­ர­ண­மாக,

கடம், மிரு­தங்கம் போன்ற பக்க வாத்­தி­யங்கள்  முதன்மை வாத்­தி­யங்­க­ளாக இசைக்­கப்­ப­டு­வதும்  உப பக்கவாத்­தி­ய­மான கடத்தை முதன்மை வாத்­தி­ய­மாக்கி அதில் நான்கு கடங்­களை இணைத்து தாள வடி­வ­மி­சைத்தல், பத்து கடங்­களை இணைத்து ஜல­த­ரங்க வடிவில் இசைக்கும் கடதரங்" ,fusion concert வடிவம்   போன்­ற­வற்றை குறிப்­பி­டலாம். அத்­துடன் விசே­ட­மாக  வடி­வ­மைக்­கப்­பட்ட இரட்டை வயலின் (double violin), 5 தந்­தி­களை உடைய வயலின், இரட்டை கெஞ்­சிரா போன்­ற­வற்­றையும் குறிப்­பி­டலாம்  இத்­த­கைய மாற்­றங்­க­ளு­ட­னான கச்­சே­ரி­களை அங்கு சென்று பார்ப்­ப­தற்கும், அவை பற்றி தெரிந்து கொள்­வ­தற்கும் ,அம் மாற்­றங்­களை உரு­வாக்­கிய ஜாம்­ப­வான்­களை நேரில் சந்­திப்­ப­தற்கும் இய­லாத மாண­வர்­க­ளுக்கும் ,இசை ஆர்­வ­லர்­க­ளுக்கும் இத்­தை­கைய கச்­சே­ரி­களை இல­வ­ச­மாக வழங்கி, மாண­வர்­களை அவை பயில ஊக்­கு­விப்­பதே இந் நிறு­வ­னத்தின் பிர­தான நோக்­க­மாகும்.

இந் நிகழ்ச்­சிகள்  அனைத்தும் அனு­ச­ர­ணை­யா­ளர்­களின் உத­வி­யுடன் கொழும்­பிலும்,யாழ்ப்­பா­ணத்­திலும் இல­வ­ச­மா­வ­கவே நடை பெற்று வரு­கின்­றது. இக் கச்­சே­ரிகள் மாண­வர்­களை மனதிற் கொண்டு, சாதா­ரண கச்­சேரி  போன்­றல்­லாது "கச்­சே­ரியும் கற்­பித்­தலும்"போன்றே ஒழுங்கு செய்­யப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் கச்­சேரி ஆரம்­பித்­த­வுடன் பிர­தான வாத்­தியக் கலைஞர் அவ் வாத்­தியம் சாதா­ரண வாத்­தி­யத்தில் இருந்து வேறு­படும் விதம்,அதன் வடி­வ­மைப்பு, கையாளும் விதம், பக்க வாத்­திய அறி­முகம், அன்­றைய இசை நிகழ்ச்­சியின் வடி­வ­மைப்பு போன்­ற­வற்றை விப­ரிப்­ப­துடன் ஒவ்­வொரு உருப்­படி ஆரம்­பிக்கும் போதும் அதன் இராகம், தாளம் போன்­ற­வற்றை தெரி­விக்­கிறார். கச்­சேரி முடிந்த பின்  மாண­வர்கள் தங்­க­ளது சந்­தே­கங்­களை வித்­து­வான்­க­ளிடம் கேட்டு தெளிவு பெறவும் உரிய வச­தி­களை ஏற்­பாடு செய்­கின்­றனர்.

முதலில் இந்­திய கலை­ஞர்­களை அழைத்து கச்­சே­ரி­களை நடத்தி புது வடி­வங்­களை உள்­வாங்கி பின் எமது கலை­ஞர்­க­ளையும் இணைத்து  அவர்­க­ளையும் இதில் ஈடு­பட வைப்­பதும் இதன் நோக்­க­மாகும் .

அந்­த­வ­கையில் "லலித ஷேத்ரா"வின் ஐந்­தா­வது நிகழ்ச்­சியும் முற்­றிலும் புது­மை­யான ஓர் நிகழ்ச்­சியே!   தமிழ் நல்­லு­லகம் போற்றி வணங்கும் தமிழ் தாத்தா  டாக்டர் . உ. வே. சாமி­நாத ஐயரின் வழித் தோன்­றலும், கிராமி விருது பெற்ற பத்­ம­பூஷண்  விக்கு விநா­ய­கராமின் பிர­தம மாண­வியும், கட வாத்தியம் வாசிக்கும் முதல் பெண்­ம­ணி­யு­மான திரு­மதி. சுகன்யா இராம்­கோபால் முதன் முறை­யாக நம் நாட்­டுக்கு வர­வி­ருக்­கிறார். 

இவர் இசை உலகின்  மிகப் பிர­ப­ல­மான வித்­வான்­க­ளுக்கும், வித்­வாம்­சி­னி­க­ளுக்கும் கடத்­தினை பக்­க­வாத்­ய­மாக வாசித்து  புகழ் பெற்­றுள்ளார் .

இசை மேடையில் ஐந்­தா­வது இடத்தில் இருந்த கடவாத்­தி­யத்­தினை முதல் இடத்­திற்குக்  கொண்­டு­வந்து , இசை உலகில் ஓர் புரட்­சி­யையும் ஏற்­ப­டுத்தி உள்ளார்.

லய­வாத்­தி­ய­மான கடத்தில் இசையை வாசிக்கும் "கட தரங்" எனும் புதிய முறையைக் கையாண்டு உரு­வாக்­கிய வடி­வமே "லய ராக சமர்ப்­பணம்". இந் நிகழ்ச்சி பல நாடு­க­ளிலும் ,மேடை­க­ளிலும்  இர­சி­கர்கள் வியந்து பராட்­டிய ஓர் நிகழ்ச்­சியே!

பல ராகங்­களில், பல தாளங்­களில் கட தரங்­கிற்கு ஏற்­ற­வாறு பல மெட்­டுக்­களை அமைத்து வாசிக்­கிறார்.

"ஸ்திரீ தாள் தரங்" என்ற பெண்கள் அடங்­கிய குழு­வி­ன­ருடன் பல நாடு­க­ளிலும் வாசித்து பாராட்­டு­தல்­களைப்  பெற்­றுள்ளார்.


இப்­பொ­ழுது  ஓர் புது முயற்­சி­யாக மென்­டலின் வாத்­தி­யத்­துடன்  கட தரங் நிகழ்ச்சியை அவர் நடத்த இருப்­பதும் இதுவே முதன் முறை­யாகும் . 

கட தரங் என்­பது ஜல­த­ரங்கம் போன்­ற­தொரு அமைப்பை உடை­ய­தாகும் . ஓவ்­வொரு இரா­கத்தின் ஆரோ­கணம் , அவ­ரோ­க­ணத்­திற்க்கு ஏற்­ற­வாறு கட வாத்­தி­யங்­களை தேர்ந்­தெ­டுத்து, வித வித­மான மெட்­டுக்­களை வாசிக்கும் ஓர் புது­மை­யான முயற்­சி­யாகும் . 

மென்­டலின் சிவ­குமார், வயலின் ஜ்யோத்ஸ்னா மஞ்­சுநாத் இரு­வரும் இசைக்கும் பாடல்­க­ளுக்கு பக்­க­வாத்­தி­ய­மாக லய கலா விபஞ்சி-  .என் . இரா­ம­கி­ருஷ்ணன் மிரு­தங்கம் , திரு­மதி சுகன்யா இராம் கோபால் கடம் ,மற்றும் திரு­மதி. பாக்கி­ய­லக் ஷ்மி கிருஷ்ணா மோர்­சிங்­குடன் இணைந்த ஒரு இனிமையான இசை விருந்தாகும். 

கட தரங் மெட்டுக்கள் வாசிக்கும் போது அதனுடன் மற்ற வாத்தியங்கள் பக்க வாத்தியமாக இணையும்.

கட தரங்கில் தாளம், பாடல், வெவ்வேறு நடைகளில் கற்பனா ஸ்வரங்களின் மூலம் கேள்வி கேட்க, மற்ற வாத்தியங்களில் அதற்கு தகுந்தவாறு பதில் அளித்து இறுதியில் ஒரு பெரும் முத்தாய்ப்பாக ஒலிக்கும். இதைத்  தொடர்ந்து மிருதங்கம், கடம், மோர்சிங் வாத்தியங்களின் தனி ஆவர்த்தனம், கொன்னக்கோல்

உங்கள் அனைவரது உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் என்ப தில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

http://kalaikesari.lk/article.php?category=features&num=737

 

 

 

 


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.