Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்துவதில்லை:- இளந்திரையன் .

Featured Replies

விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்துவதில்லை - அரசின் குற்றச்சாட்டுக்கு இளந்திரையன் மறுப்பு.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுவதற்கு சிறீலங்கா அரசுக்கு எதுவித அருகதையும் இல்லை. யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு, யுத்த சூழலைக் கண்காணிப்பதற்கு என சர்வதேச சமூகத்தின் ஒப்புதலின் பேரிலும் இரு தரப்பினரும் ஏற்றக் கொண்டதற்கு அமைய இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் இருக்கின்றார்கள்.

கண்காணிப்புக் குழுவினரை நடுநிலமையாளர்கள் என அனைவராலும் ஏற்கப்பட்ட நிலையில் சம்பவ இடங்களுக்கு சென்று இவர்கள் பார்வையிடுவதற்கு சிறீலங்கா அரசாங்கமும் அரச படைகளும் அனுமதிக்க வேண்டும்.

கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு செல்லவிடாது தடுத்து வைத்துக் கொண்டு அங்கே தாங்கள் நினைப்பது போல கற்பிதற்களை கூறிக்கொள்வது அபத்தமானது. இவ்வாறு நடந்துகொண்டு புலிகள் மீது குற்றம் சுமத்துவதில் எந்தவித உண்மையும் இல்லை.

பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனிதத் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்கிற குற்றச் சாட்டு எவ்வாறான அடிப்படையில் இருந்து எழ முடியும் என பார்க்க வேண்டும். சிறீலங்காப் படைகளின் தளங்கள் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்றன.

சிங்கள மக்கள மத்தியிலிருந்து தான் தமிழ் மக்கள் மீதுத கனரக ஆயுதங்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளும் விமானங்கள் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் தான் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கூறமுடியுமா?

போர் விமானங்கள், ஆட்லறிப் பீரங்கிகள், மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் சிறீலங்காப் படைகள் சிங்கள மக்களை கேடயங்களாக வைத்துள்ளனர் என மாறி நினைத்தால் அதனை எந்த வகையில் கூறுவது என இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

பொது மக்களின் போக்குவரத்துக்கு புலிகள் தடையாக இருக்கமாட்டார்கள்:- எழிலன்.

பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு புலிகள் தடையாக இருக்கின்றனர் என்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது. விடுதலைப் புலிகள் பொதுமக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். எமது கட்டுப்பாட்டு பிரதேச நடைமுறைகளை பின்பற்றி வெளியிடங்களுக்கு மக்கள் செல்லலாம் என்று விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எஸ்.எழிலன் நேற்றிரவு பி.பி.சி.க்கு தெரிவித்தார்.

போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினருக்கு வாகரைப் பகுதியில் மோதல் இடம்பெறும் பிரதேசங்களுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கான போக்குவரத்தை படைத் தரப்பினர் நிறுத்தி வைத்துள்ளனர். தாக்குதல்களின் போது காயமடைபவர்களைக்கூட வெளியிடங்களுக்கு கொண்டுசெல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் எம்மீது போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் குற்றம் சுமத்துவது தவறானதாகும்.

பனிச்சங்கேணி பகுதியில் கடந்த 21ஆம் திகதி பனிச்சங்கேணி ஊடான பாதை மூடப்படும் வரை மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டுவந்தனர். ஆனால் பாதை மூடப்பட்டதன் பின்னர் மக்களால் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. இப்பகுதியில் ஒரு பாதையே காணப்படுகின்றது. இதனை படைத்தரப்பினர் தொடர்ச்சியாக மூடிவைத்துள்ளதுடன் முன்னகர்வுகளை மேற்கொண்டும் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு போக்குவரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இருக்குமானால் நாங்கள் அதற்கு தடையாக இருக்கமாட்டோம். ஆனால் போக்குவரத்துக்கான எந்த வசதியும் மக்களுக்கு செய்துகொடுக்கப்படாத நிலையில் நாங்கள் அவர்களை தடுப்பதாக கூறுவது வேதனைக்குரிய விடயமாகும்.

மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலிருந்து நாங்கள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம். ஆனால் புலிகள் வாகரை வைத்தியசாலைக்கு அருகில் இருந்து தாக்குதல்களை நடத்துவதாக அரசாங்கம் பொய் பிரசாரம் செய்து வருகிறது.

இதனை உறுதிப்படுத்திக்கொள்ள சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்து நிலைமைகளை பார்வையிடலாம். ஆனால் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு செல்ல படை தரப்பு அனுமதி வழங்காமல் இவ்வாறான குற்றச்சாட்டுகளை செய்வது மோசமான விடயமாகும்.

www.pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.