Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது மக்கள் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்!

Featured Replies

பொது மக்கள் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்!

-----------------------------------------------------------------

இலங்கையின் கிழக்குப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. நேற்றும் இலங்கை இராணுவம் மட்டக் களப்பில் மக்கள் வசிப்பிடங்கள் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடி யாக நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் சென்ற சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்திவரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என புலிகள் தரப்புத் தெரிவித்துள்ளது.

புலிகள் பொதுமக்களை கவசமாகப் பயன்படுத்துகின்றனர் என இராணுவம் சாடியுள்ளது.

வாகரைப் பகுதியில் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதை நாங்கள் இடைநிறுத்தியுள்ளோம். என இராணுவப் பேச்சாளர் நேற்று ராய்ட்டர் நிறுவனத்திடம் தெரிவித் துள்ளார்.

இங்கு வன்முறை மோச மடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கில் கிளர்ந்துள்ள வன் முறை, போர் நிறுத்த உடன் படிக்கையை முறித்ததோடு மட்டு மல்லாமல் பெரும் அபாயத்துக் குள் சென்றுள்ளது. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித் துள்ளது என்று அதன் அறிக்கை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு வாகரை மக்களைப் பாதுகாக்கத் தவறியதுடன் அவர்களது செயல் பாட்டையும் கட்டுப்படுத்தியுள்ளது. இந்த அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல தங்களால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டியது புலிகளின் கடமை.

இப்பகுதிகளுக்குச் செல்ல இராணுவம் கட்டுப்பாடு விதித்திருப் பதால் இங்குள்ள நிலைமையைக் கண்காணிப்புக் குழுவினால் முழுமை யாகக் கண்காணிக்க முடியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் தீவிர மடைந்துள்ள உள்நாட்டுப் போரில் இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1,200க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என கண் காணிப்புக் குழு கூறியுள்ளது. மேலும் கிழக்கில் தொடரும் தாக்கு தலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடப்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

கிட்டத்தட்ட 30,000 முதல் 35,000 வரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாகரையில் உள்ள முகாம் களில் வசிக்கின்றனர். 3,000க்கும் அதிகமான சிங்கள மக்கள் அரசாங்கத்தின் வசமுள்ள பகுதியில் வசிக்கிறார்கள்.

வாகரையிலும் திருகோணமலைப் பகுதி கிராமங்களிலும் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ள அந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்ப துவே இப்போது அவசர கடமையாகும். காயமடைந்தவர் களுக்குச் சிகிச்சை அளிக்க அவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இடைக்கால ஐநா பிரதிநிதியும் மனித உரிமை ஒருங்கிணைப்பாளருமான திரு அமின் ஆவட் கூறியுள்ளார்.

TAMILMURASU-SINGAPORE

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

This not enough stop we need some urgent action from the UN against the Srilankan government

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.