Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜின் மனைவி, பிள்ளைகளுக்கு ரூபா 50 இலட்சம் வழங்க அரசு முடிவு

Featured Replies

* அமைச்சரவை தீர்மானம்

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி, பிள்ளைகளுக்கு அனுதாப அடிப்படையிலான கொடுப்பனவாக 50 இலட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச் சாளரான தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனையொன்றுக்கு அமைய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாகவும், நிதியானது திறைசேரியிலிருந்து வழங்கப்படுமெனவும் அமைச்சர் யாப்பா கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச் சர் பிரியதர்சன யாப்பா மேற்கண்ட தீர்மானத்தைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

தெஹியத்தகண்டிய நீர் வழங்கல் திட்டத்தை எதிர்வரும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டில் நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முதற் கட்டமாக 132 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டமாக 279 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கென இவ் வருடத்தில் 10,530 வீடுகளை அமைக்கும் திட்டத்தில், நிர்மாண வேலைகள் நிறைவு செய்யப்படாமல் இருக்கும் 4089 வீடுகளுக்கு ஒரு இலட்சத்து 81 ஆயிரம் கூரைத்தகடுகளை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்து - ஸ்ரீ லங்கா மின் பரிமாற்ற திட்ட ஒப்பந்தத்திற்கென இரு தரப்புகளும் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடுகளுக்கு வரவும், ஆவணங்களை பரிமாறிக் கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபுல் செனவிரத்னவின் மனைவிக்கு அரச வாகனமொன்றை ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அவர் இறுதியாக தனது சேவைக் காலத்தில் உபயோகித்த வாகனம் அவரது மனைவிக்கு குறைந்த விலைக்கு வழங்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

http://www.thinakkural.com/news/2006/12/15...s_page17363.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.