Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 இலட்சம் பாட நூல்கள் இராணுவ முகாமில்

Featured Replies

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கல்வியமைச்சால் அனுப்பி வைக்கப்பட்ட 4 இலட்சம் இலவச பாட நூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் இராணுவ முகாமில் முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாணவர்களுக்கு மொத்தம் 8 இலட்சம் பாடநூல்கள் தேவைப்படுகின்றன.இவற்றில் 4 இலட்சம் இலவச பாடநூல்கள் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை கப்பல் மூலமாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இறுதித் தவணைக்காக பாடசாலைகள் கடந்த 8 ஆம் திகதி மூடப்பட்ட சமயம் தென்னிலங்கையில் பல பாடசாலைகளுக்கான நூல் விநியோகம் ஓரளவு நடைபெற்றிருந்தது. கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, அடுத்த வருடம் பாடசாலைகள் ஆரம்பிக்க முன் இலவச நூல் விநியோகம் பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் யாழ்ப்பாணத்திற்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட இலவச பாடநூல்கள் விநியோகிக்கப்படாமல் அப்படியே இராணுவ முகாமொன்றில் முடங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் விடயம் பற்றி கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் என்.கஜ்ஜூ முஹம்மது கூறுகையில்;

`யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இலவச பாடநூல்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை. விரைவில் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4 இலட்சம் நூல்களும் இராணுவ முகாமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மன்னார், வவுனியா,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 62 சதவீதமான பாடநூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பாடநூல்களை, அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மற்றுமொரு தொகுதி இலவச பாட நூல்கள் 2 வாரங்களினுள் கப்பல் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்படும்.

வடக்கு,கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம், தமிழ் பாடசாலைகளுக்கு பாடநூல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் கல்வி வெளியீட்டுத் திணைக்கள 011-2785306,2786532 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.

இவ் வருடம் உரிய காலப்பகுதிக்கு முன் எமக்கு பாட நூல்களை அச்சடித்து தராத அச்சக நிறுவனங்களிடமிருந்து தண்டப் பணம் அறவிட தீர்மானித்துள்ளோம். இலங்கை பூராகவும் 2007 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் விநியோகத்தில் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இலவச பாடநூல் விநியோக வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வியமைச் சர், அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்த தென்றார்.

http://www.thinakkural.com/news/2006/12/15...s_page17345.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.