Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 200 பொதுமக்கள் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 200 பொது மக்கள் பலி

[ Wednesday,23 December 2015, 05:47:20 ]   
_87309946_87309943.jpg

சிரியாவின் ரஷ்ய விமானங்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் இதுவரை 200 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை 25 ற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை ரஷ்யா சிரியாவில் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்க ரஷ்யா தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் கோரிக்கைக்கு அமைய அங்குள்ள ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிராக கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் ரஷ்யா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

 

சிரியாவின் ஹோமஸ், ஹமா, இட்லிப், லடக்கிய மற்றும் அலெப்போ ஆகிய நகரங்களிலேயே ரஷ்யா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் கடந்த செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதி ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 49 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தமை இதற்கு சிறந்த உதாரணம் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரஷ்யா சட்டவிரோத குண்டுகளை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 

இதேவேளை, சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் மோதல்களினால் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 

இதனால் அங்கு நடைபெறும் மோதல்களை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமைதித் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் சிரியா அரசாங்கத்திற்கும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/15649

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்ய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 200 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஆம்னெஸ்டி தெரிவித்திருக்கிறது. சிரியாவில் நடத்தப்பட்ட ரஷ்ய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 200 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருக்கிறது. செப்டம்பர் 30லிருந்து நவம்பர் 29ஆம் தேதிவரை ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட 25க்கும் மேற்பட்ட ரஷ்யத் தாக்குதல்கள் குறித்து வெளியில் இருந்தபடி தாங்கள் ஆராய்ந்ததாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை ரஷ்யா மதிக்கத் தவறியதையே இந்த முடிவுகள் காட்டுவதாக ஆம்னெஸ்டி கூறியிருக்கிறது. ஆனால், பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ரஷ்ய அரசு மறுத்துவருகிறது. இம்மாதிரி கூறுவது தகவல்களை வைத்து யுத்தம் செய்வதற்கு ஒப்பானது என ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

ரஷ்ய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 200 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஆம்னெஸ்டி தெரிவித்திருக்கிறது. சிரியாவில் நடத்தப்பட்ட ரஷ்ய விமானத் தாக்குதல்களில் குறைந்தது 200 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருக்கிறது. செப்டம்பர் 30லிருந்து நவம்பர் 29ஆம் தேதிவரை ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட 25க்கும் மேற்பட்ட ரஷ்யத் தாக்குதல்கள் குறித்து வெளியில் இருந்தபடி தாங்கள் ஆராய்ந்ததாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை ரஷ்யா மதிக்கத் தவறியதையே இந்த முடிவுகள் காட்டுவதாக ஆம்னெஸ்டி கூறியிருக்கிறது. ஆனால், பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ரஷ்ய அரசு மறுத்துவருகிறது. இம்மாதிரி கூறுவது தகவல்களை வைத்து யுத்தம் செய்வதற்கு ஒப்பானது என ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

   

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று ரஷ்யா வான் தாக்குதல்களைத் துவங்கியதுஇஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் தீவிரவாதிகள் உள்ளிட்ட பல குழுக்களின் மீது கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று ரஷ்யா வான் தாக்குதல்களைத் துவங்கியது. சிரிய அதிபர் பஷர் அல் - அஸாதின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும், அஸாதுக்கு எதிரான மேலை நாடுகளின் ஆதரவு பெற்ற குழுக்கள் மீதும் ரஷ்யா தாக்குதலை நடத்துவதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.ஹோம்ஸ், ஹமா, இத்லிப், லடாகியா, ஆலெப்போ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆராயப்பட்டதாக ஆம்னெஸ்டி தெரிவித்திருக்கிறது. தாக்குதல்களையும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளையும் பார்த்த 16 பேரிடம் தொலைபேசி மூலமும் இணையம் மூலமும் பேட்டி எடுக்கப்பட்டதாக ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இதில் அடக்கம். ஆறு தாக்குதல்கள் பற்றி விரிவான தகவல்களை இந்த அறிக்கை அளிக்கிறது.

உதாரணமாக, நவம்பர் 29ஆம் தேதி இத்லிப் மாகாணத்தில் உள்ள அரிஹாவில் ஒரு சந்தைப் பகுதியை மூன்று ஏவுகணைகள் தாக்கியதில் 49 பொதுமக்கள் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்தனர் என ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது. இத்லிப் மாகாணத்தில் உள்ள அரிஹாவில் ஒரு சந்தைப் பகுதியை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 49 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தப் பகுதிக்கு அருகில் ஒரு ராணுவ இலக்கும் இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள்இதுவரை வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. தாங்கள் முதல் முறையாக விமானத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே, பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். சிரியாவில் இருக்கும் ஐஎஸ் இலக்குகளின் மீது அமெரிக்காவும் விமானத் தாக்குதல்களை நடத்திவருகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=147644&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.