Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு

Featured Replies

ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
 
கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர்.

சிரிய நாட்டுத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து சென்னை வந்துள்ள பெண் ஒருவர் கூறும்போது, "இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலம் என்பதால் தூதரகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜெர்மனி விசாவுக்காக ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலும் மிக நீளமாக உள்ளது. எனவே இன்னும் சில காலம் நான் காத்திருக்க வேண்டும்.

எனது கணவர் படகு மூலம் ஜெர்மனி சென்று விட்டார். ஆனால், பெண்கள், குழந்தைகள் அவ்வாறாக படகில் ஜெர்மன் செல்வது மிகவும் ஆபத்தானது. எனவேதான் இங்கு வந்துள்ளோம். எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும். சிரியாவில் இருந்த எங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டோம். துருக்கி, ஜோர்டான் நாடுகளிலும் ஜெர்மனி விசா பெற முடியும்.

ஆனால் அந்த நாடுகளில் எங்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். எனவேதான் ஈரான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு வருகிறோம். ஜெர்மனி விசா பெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்தியா வந்திருக்கிறோம். இது என் கதை மட்டுமல்ல இங்கு ஜெர்மன் விசாவுக்காக காத்திருக்கும் பல குடும்பங்களின் நிலையும் இதுவே" என்றார்.

சிரியாவைச் சேர்ந்த அகமது ஹூசைன் ஹைதராபாத்தில் கணினி படித்து வருகிறார். இவர் ஜெர்மன் தூதரங்களை விசாவுக்காக அணுகும் சிரிய மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் கூறும்போது, "இந்தியாவுக்கும் வரும் சிரிய மக்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் இங்கு தங்குவதற்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 டாலர் வரை செலவாகிறது. பெரும்பாலான பெண்கள் அவர்களது கணவரையோ, தந்தையையோ பார்த்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. அவர்களது குடும்ப, பொருளாதார நிலையைக் கருதி ஜெர்மனி தூதரகங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றார்.

அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு வரும் சிரிய அகதிகள் மொழிப் பிரச்சினையால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக அகமது ஹூசைன் கூறுகிறார்.

சென்னை விமான நிலையத்தின் குடியேற்று அலுவலகங்களில் சிரியாவிலிருந்து வருபவர்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுவதாகவும் ஆனால் அரபு மொழியைத் தவிர வேறு மொழி தெரியாத அவர்கள் தவிப்புக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள அரபு மொழிபெயர்ப்பாளர்கள் சிரிய அகதிகளிடம் அதிகக் கட்டணம் கோருவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இப்படி மொழிப் பிரச்சினை, பணப் பிரச்சினையில் சிக்கியுள்ள சிரிய அகதிகள் பலரும் முன்வைக்கும் ஒரே கோரிக்கை "தயவு செய்து எங்களுக்கு விரைவாக விசா வழங்குங்கள்" என்பதேயாகும்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8025244.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள்

 

சிரியாவில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜெர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.

சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜெர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.

சென்னையில் உள்ள ஜெர்மானிய தூதரகத்தில் "குடும்பத்தினருடன் இணைவதற்கான" விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் இவர்களில் யாரும் தற்போது வெளிப்படையாக பேச விரும்பவில்லை.

இந்த நிலையில், அவர்களுக்காக மொழிபெயர்ப்பாளராக உதவிவரும் சிரியாவைச் சேர்ந்த அகமது ஹுசைன் என்பவர் பிபிசியிடம் பேசினார்.

பெரும்பாலான அரபு நாடுகள் தங்களை அனுமதிக்காத நிலையில், இந்தியாவில் இந்த அனுமதி எளிதில் கிடைப்பதால் அவர்கள் இங்கு வருவதாகக் கூறுகிறார் அஹ்மத்.

"இந்தியா மட்டும்தான் விசா பெறுவதற்காக வர அனுமதி அளிக்கிறது. அரபு நாடுகள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன. இரண்டு அரபு நாடுகள் மட்டுமே அங்கிருந்து விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கின்றன. ஒன்று ஜோர்தன் மற்றொன்று லெபனான். ஆனால், அங்கு நேர்முகச் சந்திப்பிற்கு நேரம் கிடைக்கவே ஒரு வருடம் ஆகிவிடுகிறது'' என்கிறார் அஹ்மத்.

தற்போது, சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 11 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களது குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜெர்மனிக்குச் சென்றுவிட்டனர்.

'சென்னையில் செலவு குறைவு'

இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய இடங்களிலும் ஜெர்மனியத் தூதரகங்கள் இருந்தாலும் செலவு குறைவு என்பதால் இவர்கள் சென்னையைத் தேர்வுசெய்ததாகச் சொல்கிறார் அஹ்மத்.

"இந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் எழைகள். அவர்கள் வீடுகள், பொருட்களை விற்றுத்தான் இங்கே வந்துசேர்ந்திருக்கிறார்கள்" என்கிறார் அஹ்மத்.

சென்னையிலிருந்து ஜெர்மனிக்கான விமானப் போக்குவரத்து வசதியாக இருப்பதும் இவர்கள் சென்னையைத் தேர்வு செய்வதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இங்கிருக்கும் ஜெர்மனியத் தூதரகம் சில நாட்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டதால், பல சிரியக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அஹமது சொல்கிறார்.

இங்கே வரும் சிரியர்கள் பெரும்பாலானவர்களுக்கு அரபு மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாது. ஆகவே அஹமது போன்றவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக இருந்து உதவுகின்றனர்.

இந்தியாவைத் தவிர, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் இவர்கள் ஜெர்மனியை சென்றடைகின்றனர்.

தங்களிடமிருக்கும் பணம் குறைந்துகொண்டேவரும் நிலையில் விரைவில் தங்களுக்கான விசாவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இந்த சிரியர்கள்.

http://www.bbc.com/tamil/india/2015/12/151224_syrian_chennai?ocid=socialflow_facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.