Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வெடிபொருள் சப்ளை: விசாரணை நடத்த உத்தரவு: சோனியா

Featured Replies

சென்னை, டிச. 16: இலங்கைக்கு லாரி மூலம் வெடிபொருள் சப்ளை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதிய கடித விவரம்:

இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்காக வெடிபொருள்களுடன் சென்ற லாரியை போலீஸôர் பிடித்துள்ளது குறித்து டிச.9-ம் தேதியன்று தில்லியில் நேரில் சந்தித்தபோது குறிப்பிட்டிருந்தீர்கள்.

இது தொடர்பாக டிச. 11-ம் தேதியிட்ட உங்களது விரிவான கடிதமும் கிடைத்துள்ளது.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, வெடிபொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் மூலம் அந்த வெடி பொருள்கள் இலங்கை கடற்படைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த வெடிபொருள்கள் கடலை ஆழப்படுத்தும் பணிக்காகவும், பாறைகளைத் தகர்க்கும் பணிக்காகவும் பயன்படுத்தப்படுவதற்காக அனுப்பப்பட்டது என்று தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எத்தகைய சூழலில், எந்த அதிகாரியின் அனுமதியோடு இத்தகைய வெடிபொருள்கள் அனுப்பப்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை பிரச்சினையில் இந்திய அரசின் நிலை மிகவும் தெளிவானது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்த சூழ்நிலையிலும் எத்தகைய ஆயுதங்களும் இலங்கைக்கு சப்ளை செய்யப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும் என்று குறிப்பிட்டுள்ளார் சோனியா.

இலங்கையில் புலிகள் பகுதியில் இருந்து 1,300 பேர் வெளியேறினர்

கொழும்பு, டிச. 16: இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து காடு மற்றும் கடல்மார்க்கமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர் என்று ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தது: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து 1,300 பேர் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து, கடந்த நவம்பர் முதல் வந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் காடுகள் வழியாக வருகின்றனர். சிலர் கடல்மார்க்கமாக படகுகளில் வருகின்றனர் என்றார் அவர்.

இதுகுறித்து விடுதலைப்புலிகள் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...ZLm&Topic=0

முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலும் தமிழர்களின் பல அப்பாவி உயிர்கள் பறிபோய்விட்டது மிகவும் கவலையையும், துயரத்தையும் அளிக்கும் விடயமாகும். இத்தகைய வன்முறை சம்பவங்களில் எந்தவித நியாயமும் இல்லை என்று நாங்கள் உறுதியாக குறிப்பிட்டு வருகிறோம். அப்பாவி மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தில் பொருத்தமான அத்தனை மட்டங்களுக்கும் இதை எடுத்துச் சென்று இலங்கையில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து கவலையை எடுத்து சொல்லி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை பெறும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும் அவசர அவசியத்தையும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. தொடர்ந்து இந்த விடயம் மேலான கவனத்தில் கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.