Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனையை சற்று முன்னர் பிரதமர் முன்வைத்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனையை சற்று முன்னர் பிரதமர் முன்வைத்தார்
09 ஜனவரி 2016

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனையை சற்று முன்னர் பிரதமர் முன்வைத்தார்

 இலங்கைப் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
 
பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ள இந்தப் பிரேரணை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை வழங்குவது உள்ளிட்ட அடிப்படைகளுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முகமாக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசியலில் திருப்பம்? புதியஅரசியல் யாப்புக்கான முயற்சி- பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது:
09-01-2016 - 1:48
இலங்கை அரசியலில் திருப்பம் ஏற்படுமா என்ற மாபெரும் எதிர்பார்ப்பை இன்றைய நாள் ஏற்படுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படுமா அதில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிவர்த்தி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது. 

முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. முழுநாள் விவாதத்தின் பின்னர் இந்த பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று(09) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை பிரதமர் சமர்ப்பிப்பார்.

பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன,எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்,உட்பட கட்சித் தலைவர்கள்,அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் உரையாற்ற இருப்பதாக  பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகளை இலகு படுத்த உப குழுக்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டாார்.

முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பின்னர் சாதாரண சட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தை வழமை போன்று கூட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.அரசாங்கத்திற்கு தேவையாயின் பாராளுமன்றத்தை கூட்டாது அரசியலமைப்பை திருத்தும் பணிகளை மட்டும் அரசியலமைப்பு சபையினூடாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பை திருத்துவதற்காக மக்கள் கருத்தறியும் வகையில் 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் கருத்துக்களை நேரில் சென்று இந்தக் குழு எழுத்திலும், வாய்மொழி மூலமும் பெற இருப்பதாக மக்களின் கருத்தறியும் குழு வின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். இந்தக் குழு மக்களின் கருத்துக்களை அரசியலமைப்பு சபைக்கு வழங்க இருப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் கருத்தறியும் குழு மக்களின் கருத்துக்களை எழுத்து மூலமும் வாய்மூலமும் பெறும் பணிகளை மார்ச் மாதத்தில் பூர்த்தி செய்து ஏப்ரல் மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தரிவித்த லால் விஜேநாயக்க 6 மாத காலத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் கருத்துக்கள் ,அரசியல்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் அடங்கலான சகல தரப்பினரதும் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெறப்பட இருக்கிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.

புதிய அரசியலமைப்பு பின்னர் மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட இருக்கிறது.இதே வேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பங்கை நிறைவேற்றியுள்ளதாகவும் இன்று சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புடன் அவரின் வாக்குறுதிகள் முழுமையடைவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதே வேளை புதிய அரசியலமைப்பு வௌிநாடுகளின் தேவைப்படியே தயாரிக்கப்பட இருப்பதாக எதிர் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக நிராகரித்தார். 

மக்களின் தேவைப்படியே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியாக கூறியிருக்கிறார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எந்த வௌிநாடும் தங்களுடன் பேசவில்லை என வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் தௌிவுபடுத்தியதாவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பினூடாக ஜனாதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கவும் தேர்தல் முறையை மாற்றவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக தனது அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க அளவினை குறைத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது முதலாவது பதிவியேற்பு நிறைவுக்கு மறுதினம் ஏனைய அதிகாரங்களையும் குறைக்க தயாராவது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் என்றே முன்னர் அறிவிக்கப்பட்ட போதும் பின்னர் பிரதமரே அதனை சமர்ப்பிப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127666/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.