Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஈழம் எரிகிறது, எரிகிறது, எரிந்துகொண்டே இருக்கிறதே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஈழம் எரிகிறது, எரிகிறது, எரிந்துகொண்டே இருக்கிறதே!

மூவாயிரம் பேர் படுகொலை; 35,000 பேர் வீடிழந்துள்ளனர்!

சிங்கள அரசுக்கு எச்சரிக்கை தேவை!

ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை தேவை! தேவை!!

காலத்தால் தக்க நடவடிக்கை எடுத்துள்ளார் தமிழக முதல்வர்

பிரதமருக்கும், சோனியாவுக்கும் தந்திகள் குவியட்டும்! குவியட்டும்!!

ஈழத்திலே தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும் படுகொலைகள் குறித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில் சிங்கள வெறித்தன அரசால் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்படும் கொடுமை பல முனைத் தாக்குதல்களாக நாளும் நடைபெறுகிறது.

மனித உரிமை அந்த மண்ணில் தமிழர்களைப் பொறுத்தவரை மண்ணோடு மண்ணாக குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.

ஒரு பக்கம் குண்டு வீச்சு; இன்னொரு பக்கம் பட்டினிச் சாவு!

ஒருபுறம் குண்டு போட்டு அழித்தல், மறுபுறம் மக்களைப் பட்டினிப் போட்டுக் கொல்லுவதற்கான ஏற்பாடுகளாக சாலை மூடல், உணவுப் பொருள்கள்கூட அம் மக்களுக்குக் கிடைக்காமல் தடுத்தல். சிங்கள இராணுவத்தின் கோரத்தாண்டவத்தின் கொடுமை தாங்க முடியாது, தமிழ்நாட்டிற்கு அகதிகளாக கடலில் படகுகளில் ஏறி வருதலும், அது கவிழ்ந்து ஏற்படும் மரணங்களும் அவலம் நிறைந்த அன்றாடக் காட்சிகளாகி வருகின்றன.

உலகம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா என்று நாம் கேட்குமுன்பு, இந்திய அரசு - நமது அரசு - இந்த வன்கொடுமையைத் தடுத்து நிறுத்தாமல், ஈழத் தமிழர்களை அழிக்கும் சிங்கள இராணு வத்திற்குப் பயிற்சி, ஆயுதத் தளவாடங்கள் விநியோகம் இவற்றைத் தருவது என்பதைவிட அக்கிரமம், அநீதி வேறு இருக்க முடியுமா என்று தமிழ்நாடும், தமிழ்நாட்டுத் தலைவர்கள் - முதல்வர் கலைஞர் முதல் அனைத்துக் கட்சியினரும் கேட்டனர்.

இந்தியா அனுப்பும் உணவுப் பொருள்கள் யாருக்குப் போகிறது?

இந்திய அரசு அனுப்பும் உணவுப் பொருள் எந்த மக்களுக்குச் சென்று பசி, பட்டினி தீர்க்க வேண்டுமோ அவர்களுக்கு இது பயன்படாமல், சிங்களவருக்கும், சிங்கள இராணுவத்திற்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டதைவிட கொடுமை உண்டா?

மூவாயிரம் தமிழர்கள் பலி!

நேற்று மாலை ஏடுகளில் வந்துள்ள நெஞ்சைப் பிளக்கும் இதோ ஒரு செய்தி: "இந்த ஆண்டும், 3000 பேர் பலியாகி விட்டனர். 35,000 பேருக்கு மேல் வீடிழந்து தவிக்கின்றனர். மட்டக்களப்பு, வாகரைப் பகுதிகளில் சிங்கள இராணுவம் சுற்றி வளைத்து குண்டு மழை பொழிந்து வருகிறது! மட்டக்களப்புப் பகுதியில், தாக்குதலுக்குப் பயந்து மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு வாசல்களை இழந்து உயிர் பிழைக்க அடர்ந்த காட்டுப் பகுதிகள் வழியாக தப்பி ஓடுகிறார்கள். காடுகளிலேயே தஞ்சமும் அடைந்துள்ளனராம்! பலத்த மழை காரணமாக காட்டாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தையும், ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளையும் கூட பொருட்படுத்தாமல் அவர்கள் உயிருக்காக ஓடுவது பரிதாபமாக இருக்கிறது.

அய்.நா.இ மன்றத்தின் குரலும் மதிக்கப்படவில்லையே!

இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுள்ளார். இவரை இலங்கை இராணுவமும், கருணா கோஷ்டியும் சேர்ந்து கடத்தியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாம்!

'அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள்'என்று அய்.நா., மன்றம் விடுத்துள்ள வேண்டுகோள், சிங்கள அரசைப் பொறுத்தவரை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஆகிவிட்டது! இனியும் இந்தியா - அண்டை நாட்டு உறவால் மட்டுமல்ல; தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்கள் என்பதை மனதில் நிறுத்தி உடனடியாக இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முனைய முன்வரவேண்டும்!

நம் முதலமைச்சர் வற்புறுத்தினார்

நம் முதல்வர் மானமிகு கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தியிடம் இதுகுறித்து தமிழர்களின் மன நிலையை, வேதனையை டில்லிக்கு, கடந்த 8, 9 ஆகிய நாள்களில் சென்றபோது தெளிவாக எடுத்துரைத்து வற்புறுத் தியது ஓரளவுக்குப் பயன்பட்டிருக்கிறது!

சென்னை விழாவில் (16.12.2006) பேசிய கலைஞர் அவர்கள் தனது உணர்வுகளும், தமிழர்களின் வேதனையும் எப்படிப்பட்டவை என்பதை விவரித்துள்ளார்கள்.

ஈழத் தீவே எரிகிறது!

"இலங்கையிலே ஈழத்தீவே எரிகிறது! எரிந்து கொண்டேயிருக்கிறது! குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். செஞ்சோலை, மாஞ்சோலை என்றெல்லாம் சவக்காடாக ஆகிக் கொண்டிருக்கிறது. இதைப்பற்றி தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் கொதிப்படைந்திருக்கிறார்கள். நான் டில்லிக்குச் சென்று இரண்டு மூன்று முறை பிரதமரை, சோனியா காந்தி அம்மையாரை, ஏ.கே. அந்தோணி அவர்களை, மற்றத் தலைவர்களை எல்லாம் பார்த்துப் பார்த்துப் பேசி இங்குள்ள நிலைமைகளை எடுத்து விளக்கி, நான் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னபோது கூட, சோனியா காந்தி அம்மையார் நன்றியோடு அந்த வாழ்த்தைப் பெற்றுக் கொண்ட நேரத்தில், அந்தக் கட்டத்தில்கூட நான் நேற்றிரவு கூட ஆயுதங்கள் இங்கிருந்து சென்றதாகக் கேள்விப்பட்டேன், செய்தி வந்திருக்கிறது" என்று சொன்னபோது, பக்கத்திலே இருந்த என் பேரன் தயாநிதிமாறன், "தாத்தா இப்போது வேண்டாம் பிறந்த நாள் அதுவுமா? சொல்லவேண்டாம்" என்று சொன்னான். "சும்மா இரு, என் உணர்ச்சி உனக்குத் தெரியாது" என்றுதான் நான் அவனிடம் சொன்னேன்.

சோனியா எழுதிய இரு கடிதங்கள்

"அதன் விளைவாக இரண்டு கடிதங்கள் வந்துள்ளன. அந்தக் கடிதங்களோடு ஒரு விளக்கம்; நாங்கள் இலங்கை இராணுவத்திற்கு எந்த ஆயுதங்களையும் அனுப்பப் போவதில்லை என்ற உத்தரவாதம் அடங்கிய கடிதம் திருமதி சோனியா காந்தி அம்மையாரால் எழுதப்பட்டிருக்கிறது என்றால், அது எனக்குப் பெருமை அல்ல; தமிழர்களின் மனங்குளிரக் கூடிய செய்தி; இலங்கை அரசை எச்சரிக்கின்ற செய்தி. அப்படிப்பட்ட செய்தி வரவேண்டிய அளவுக்கு சில பத்திரிகைகளில் வரவில்லையே."

காலத்தால் எடுக்கப்பட்ட முதல்வரின் நடவடிக்கைகள்

காலத்தால் எடுக்கப்பட்ட முதல்வரின் நடவடிக்கைக்கு உலகத் தமிழர்கள் முதல்வருக்கும், திருமதி சோனியா காந்தி அம்மையாருக்கும், பிரதமருக்கும் நாம் வெறும் வார்த்தைகளால் நன்றி நன்றி என்று மட்டும் கூற முடியாது!

சிங்கள அரசுக்குத் தேவையான எச்சரிக்கையும், ஈழத் தமிழர் களுக்குத் தேவையான பாதுகாப்பும், வாழ்வுக்கான ஜீவாதாரமும் அளிக்கும் மனித நேயப் பணியை உடனடியாக போர்க்கால அடிப் படையில் (டீn றுயசகுடிடிவiபே) நடைபெற்றாகவேண்டும்!

அன்றே அண்ணா சொன்னார்!

இது தலையிடுவது ஆகாது; அண்ணா சொன்னார்: "அடுத்த வீட்டுக் கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்கும்போதோ, ஊடலாக இருந்தாலோ நாம் தலையிடக் கூடாதுதான்; ஆனால், கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றால், நாம் இது அண்டை வீட்டு விவகாரம் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாதே!" என்றார் - இதே இலங்கைத் தமிழர் உரிமைக்கான போராட்ட காலத்தில்.

தந்தி அனுப்புங்கள்!

திருமதி சோனியா அம்மையாருக்கும், பிரதமர் திரு. மன்மோகன் சிங்கிற்கும் தந்திகளும், மின்னஞ்சல் செய்திகளும், தொலைப்பதிவுகள் ஏராளம் அனுப்புங்கள், அனுப்புங்கள்!!

தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி என்ற இன உணர்வு மிக்க ஒரு தனித்தமிழர் ஆட்சி - "பெரியார் ஆட்சியாக" நடைபெறுவதால்தானே இப்படி குரல் எழுப்ப, நமது உணர்வெனும் வெளிச்சம் போட்டுக் காட்ட முடிகிறது என்கிறபோது, இந்த ஆட்சியைக் கவிழ்ப்போம் என்போரையும் அவர்தம் உள்நோக்கம் தமிழர் விரோதமே என்பதையும் கூட புரிந்துகொள்ள தமிழ்நாட்டு மக்கள் தவறிடக்கூடாது!

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

-விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.