Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க டிச. 22 இல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அறப்போர்! - கி. வீரமணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க டிச. 22 இல் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அறப்போர்! - கி. வீரமணி

ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப் போராட்டம் நடைபெறும் என்று இன்று (டிச. 19) செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

இலங்கையில் ஈழத் தமிழர்கள், அப்பாவி பொதுமக்கள் பட்டினிப் போட்டும் குண்டு மழை பொழிந்தும் சிங்கள அரசு தமிழினத்தை அழித்து வருவது தடுக்கப்பட வேண்டும்.

அங்கு செயற்கையாக ஒரு பஞ்சத்தை சிங்கள அரசு உருவாக்கி தமிழினத்தை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதை முதலில் நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதில் கட்சி, ஜாதி, அரசியல் வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுதான் இருக்கவேண்டும். அந்த உணர்வு மனிதநேய அடிப்படையிலான உணர்வாக இருக்கவேண்டும்.

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வெடி மருந்து பொருள்கள் போகின்றன. நம்முடைய தமிழர்களை கொல்லத்தான் வெடி மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்லுகின்றனர். இதைப்பற்றிக் கேட்டால் ஏதோ பாறையைத் தகர்ப்பதற்கு வெடி மருந்து எடுத்துச் சென்றதைப் போன்று சொல்லுகின்றார்கள்.

கலைஞர் அவர்களும் சோனியாவிடம் வலியுறுத்தியுள்ளார்

நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களும் டெல்லி சென்றிருந்தபொழுது நேரடியாக சோனியா காந்தி அவர்களை சந்தித்த பொழுது, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அதே நேரத்திலே ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்படுகின்ற கொடுமையையும், ஈழம் பற்றி எரிவதையும் பற்றி அவர்களிடத்திலே விளக்கியிருக்கின்றார்கள்.

இலங்கைக்கு எந்த வகையிலும் ஆயுத உதவி வழங்கமாட்டோம் என்பதைத் தெரிவித்து நம்முடைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியிருக்கின்றார் காங்கிர° தலைவர் சோனியா காந்தி.மத்திய அரசு தமிழர்களுடைய எண்ணங்களுக்கு மாறான எந்த நிலையையும் எடுக்கக் கூடாது. இன்றைக்குக் கூட ஒரு (தினத்தந்தி) நாளேட்டில் ஒரு செய்தி வந்துள்ளது.

மராட்டியத்தில் ரகசிய பயிற்சி

கொழும்பிலிருந்து இலங்கை கடற்படையைச் சேர்ந்த 12 பேர் சென்னை விமான நிலையத்தில் இறங்கி, மும்பை சென்று, அங்கிருந்து பூனா சென்று ஆயுத பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

முதலிலே கருநாடகத்திலே பயிற்சி பெற அனுப்பினார்கள். அடுத்து இலங்கை கப்பற் படையைச் சார்ந்தவர்கள் மராட்டிய மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து வெடி மருந்து பொருள்கள் இலங்கை கடற்படையினருக்குக் கடத்தப்பட்டுள்ளது.

தென்னை மரம் ஏறியவன் புல் புடுங்க ஏறியதைப்போல..கேட்டால் ஏதோ பாறையைத் தகர்ப்பதற்கு வெடி மருந்து பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது என்று கூறுகிறார்கள். தென்னை மரத்தில் ஏறியவன் புல் பறிக்கப் போனேன் என்று சொல்லுவதைப் போலத்தான் மத்திய அரசின் நிலை உள்ளது.

எனவே, இந்தியா எந்த வகையிலும் இலங்கை அரசுக்கு இதில் உதவிடக் கூடாது. இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகின்ற உணவு பொருள்கள் நேரடியாக பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்குச் சென்றடைய வேண்டிய பணியை மத்திய அரசு செய்யவேண்டும்.

டிச. 22 ஆம் தேதி மனித சங்கிலி

எனவேதான் ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள அத்தனை மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெறும்.

சென்னையில் நான் பங்கேற்கிறேன்

சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடைபெறும் போராட்டம் என்னுடைய தலைமையில் நடைபெறும். இந்த மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும்.

அனைவரும் பங்கேற்பீர்!

இதில் ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்களை அனுப்புவோம். அனைவரும் கட்சி வேறுபாடு கருதாமல் ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாக்க இந்த மனித சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று (பத்திரிகைகள் மூலமாக) உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

-விடுதலை

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலிப் போராட்டம்

[புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006, 05:42 ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் 22 ஆம் நாள் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. குண்டுமழை பொழிகிறது. ஈழத் தமிழர்களை அழிக்க சிங்கள அரசு செயற்கையாக பஞ்சம் ஏற்படுத்துகிறது. ஏராளமாக ஈழத்தமிழர்கள் பட்டினியால் கிடக்கின்றனர். இந்த அவலம் போக்கப்பட வேண்டும்.

மனித நேயத்தின் அடிப்படையிலும், தமிழர்கள் என்ற எண்ணத்திலும் நாம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது. ஆனால் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு மராட்டியத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும், இதற்காக அவர்கள் சிறிலங்காவிலிருந்து சென்னை வந்து மும்பாய் சென்றுள்ளனர் என்றும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

முதலமைச்சர் கருணாநிதி புதுடெல்லி சென்று சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தபோது கூட சிறிலங்காவுக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார். அதன் பயனாக சிறிலங்காவுக்கு எந்த ஆயுதமும் அனுப்பப் போவதில்லை என்று கருணாநிதிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

இது பாராட்டத்தக்கது. சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிங்கள அரசுக்கு தேவையான எச்சரிக்கையும், ஈழத் தமிழர்களுக்கு தேவையான பாதுகாப்பும், வாழ்வுக்கான ஜீவாதாரமும் அளிக்கும் மனிதநேயப்பணி உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்றாக வேண்டும்.

இது தலையீடு அல்ல. பக்கத்து வீட்டு கணவன் மனைவி ஊடலாக இருந்தால் தலையிடக்கூடாது. ஆனால் கழுத்தை நெரித்துக்கொல்ல முயன்றால் பக்கத்து வீட்டுக்காரன் சும்மா இருக்கமுடியாதே என்று அண்ணா கூறினார். அது போலத்தான் ஈழத் தமிழர் பிரச்சினையை பார்த்துக்கொண்டு சும்மா தமிழகமோ, இந்தியாவோ இருக்க முடியாது.

இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக 22 ஆம் நாள் சென்னையில் மெமோரியல் மண்டபம் அருகே எனது தலைமையில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் அதே நாளில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஒத்தக்கருத்து உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். ஈழத் தமிழர்களை காப்பாற்ற கட்சி, மதம், வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் வரவேண்டும் என்றார் அவர்.

http://www.dailythanthi.com/article.asp?Ne...date=12/20/2006

http://www.eelampage.com/?cn=30181

-தினத்தந்தி, புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தமிழர் தலைவர் பதில்

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்று கருது-கின்றீர்கள்?

தமிழர் தலைவர்: ஒன்று, இராணுவ உதவிகளையோ அல்லது வேறு வகையான உதவிகளையோ மத்திய அரசு இலங்கை அரசுக்கு ரகசியமாகவோ அல்லது வேறு எந்த வகையிலேயும் அளிக்கக் கூடாது, செய்யக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.

இரண்டாவது, ஈழத்தில் தமிழர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முதலில் தடுக்கப்பட வேண்டும். மூன்றாவது ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு குண்டுமழை பொழிவது நிறுத்தப்பட வேண்டும்.

இந்தியா சார்க் நாடுகளினுடைய உறுப்பினராக இருக்கிறது. ஈராக் பிரச்சினை, ஈரான் பிரச்சினைகளுக்கெல்லாம் இந்திய அரசு குரல் கொடுக்கிறது.

இதில் நேரடியாக சம்பந்தப்பட்டது இந்திய அரசும், தமிழக அரசும்தான். எனவே இந்திய அரசு இலங்கை அரசுக்கு உரிய முறையில் எல்லா வகையான அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கை சரியா?

தமிழர் தலைவர்: தமிழக அரசு இந்த விசயத்தில் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டினார். அனைத்துக் கட்சியினரும் சேர்ந்துதான் ஒரு மனதாக முடிவெடுத்தார்கள். முதலில் பேச்சுவார்த்தை மூலம் செல்வோம். அதில் உரிய பலன் கிடைக்கவில்லை என்றால் மறுபடியும் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்றுதான் ஒரு மனதாக முடிவெடுத்தோம்.

அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க., ம.தி.மு.க., உள்பட கலந்துகொண்டார்கள். அனைவரும் அந்த தீர்மானத்தை ஒரு மனதாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் முதல் கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த கட்டம் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்றுதான். ஏற்கெனவே கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கின்றோம்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள்கூட பேச்சுவார்த்தையில், தோல்வி ஏற்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம் என்பதையும் அவர் அறிவித்திருக்கின்றார். கேள்வி: முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில் உங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: இந்த பிரச்சினையில் அவருடைய கருத்தென்ன? இவருடைய கருத்தென்ன? எங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன என்று கேட்கக் கூடாது

எப்படி முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளத்தில் எந்த கட்சியினராக இருந்தாலும் ஒற்றுமையாக இருந்து ஒரே கருத்தாக பிரதிபலிக்கின்றார்களோ அதுபோல நாமும் ஒற்றுமையாக இருந்து நம்முடைய கருத்தை எதிரொலிக்க வேண்டும். எனவே இதில் தனிப்பட்ட கருத்துகள் என்று சொல்லுவதற்கு இடமே இல்லை.

காவிரி நீர் பிரச்சினையாக இருக்கட்டும், அல்லது முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையாக இருக்கட்டும் அல்லது ஈழத் தமிழர்களுகளுடைய வாழ்வுரிமைப் பிரச்சினையாக இருக்கட்டும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தமிழர்கள் ஒத்த கருத்துக்களைத்தான் பிரதிபலிக்க வேண்டும். ஒத்த கருத்துள்ளவர்களாகத்தான் நாம் இருக்க-வேண்டும்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று சட்டமன்றத்திலே வேண்டுமானால் இருந்துகொள்ளலாம். ஆனால், தமிழர்களுடைய உரிமைப் பிரச்சினை என்று வரும்பொழுது இதில் ஒத்த கருத்து உள்ளவர்களாகத்தான் நாம் எப்பொழுதும் இருக்கவேண்டும்.

- விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.