Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான்.

Featured Replies

தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான்.

தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

சர்வதேசம் விடுதலைப்புலிகளை வரவேற்கின்ற அளவிற்கு தனியொரு சரித்திரமாக நின்று உழைத்த புனிதம்:- சூசை.

சர்வதேசம் தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்று வரவேற்கின்றதென்றால் அதனை தனியொரு சரித்திமாக நின்று உழைத்தவர் பாலாண்ணா என தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் நினைவுரையாற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்தார்.

கடுமையான போராட்டச் சூழலில் ஒரு கெரில்லாப் போராளியாக தன்னையும் தனது துணைவியாரையும் வரித்துக்கொண்டு இந்த மண்ணின் விடுதலைக்காக உழைத்தவர் சர்வதேசம் எங்கும் தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் மரணம் வரையிலும் மண்ணுக்காக உழைத்த மாமனிதரை இழந்து தவிக்கிறோம். அவரின் தமிழீழ இலட்சியக் கனவை நனவாக்க உறுதியுடன் போராடுவோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

www.sankathi.com

Edited by YARLVINO

  • தொடங்கியவர்

விடைபெறுகிறார் "தேசத்தின் குரல்" பாலா அண்ணை:- பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீரவணக்கம்.

தமிழீழ "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் புகழுடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரவணக்கம் செலுத்தினர்.

லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்ட்றா மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு பாலா அண்ணையின் புகழுடல் வைக்கப்பட்டது.

உலகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் நாள் முழுமைக்கும் லண்டன் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், தமிழ்நாட்டிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சபாபதி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஆகியோர் பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தமிழீழத் "தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் புகழுடல் தீயுடன் சங்கமமாகிறது.

தமிழீழத் தாயகத்திலும் மலேசியா உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளிலும் லண்டனில் நடைபெறும் இறுதி வணக்க நிகழ்வு அதே நேரத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது.

www.puthinam.com

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் மேலதிக இணைப்பு

இந்நிகழ்வில் உரையாற்றிய நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தனது உரையில்,

பாலா எனது நண்பர். 1999 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவர் இலண்டன் வந்த காலம் முதல் அவருடன் பழகி வந்தேன். சமாதான முயற்சிகள் முன்நகர்த்தப்பட வேண்டும் என்று விரும்பியவர் பாலா. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் பாலாவின் வீட்டில் நீண்ட நேரம் நாங்கள் உரையாடினோம். பாலா நல்ல நகைச்சுவையாளர். அமைதி முயற்சிகளில் தொடர்புபட்ட இலங்கையின் பல இனத் தலைவர்களுடன் நான் உரையாடும்போது ஒருபோதும் பொய்யே கூறாத உண்மையான மனிதர் என்று தெரிவித்தனர் எனக் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து நேரப்படி மாலை 4 மணியளவில் தமிழீழத் "தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக சிலுவை சுமந்தவர் "தேசத்தின் குரல்": புதுவை இரத்தினதுரை

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக சிலுவை சுமந்தவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என தமிழீழ கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்கு அருகிருந்து மதியுரைத்த பாலா அண்ணாவை தமிழீழ தேசம் இழந்து விட்டது.

தமிழீழ விடுதலைக்காக தாயகத்திலும், சர்வதேசத்திலும் தமது நோயினையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் பாடுபட்டு உழைத்த ஒரு அற்புத மனிதனை எமது தேசம் இழந்து விட்டது.

பாலா அண்ணாவிற்கு எமது தேசம் விடுதலை பெற்று அத்தேசத்தில் தனதுயிரை துறக்கவேண்டும் என்ற பெரு விருப்பிருந்தது. அது அவருக்கு கைகூடவில்லை. பாலா அண்ணாவின் கனவை நனவாக்க தேசியத் தலைவருக்கு உலகத் தமிழினம் கைகொடுக்க வேண்டும். அதன் மூலம் எமது தேசம் விரைவில் விடுதலை பெற்று பாலா அண்ணாவின் கனவு நனவாகும் என்றார் அவர்.

மாலை 5.00 மணிக்கு கிளிநொச்சி முருகன் ஆலய முன்றலில் இருந்து "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படம் தாங்கிய ஊர்தி அணியிசையுடன் பேரணியாக நகர்ந்து கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையை சென்றடைந்தது.

அங்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழ் முதன்மைச் சுடரை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா ஏற்றிவைத்தார்.

வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் தமிழீழ தேசியக் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டதுடன் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.

தலைமையுரையினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் நிகழ்த்தினார்.

நினைவுரைகளை அருட்திரு ஜோசப் அடிகளார், ஆசிரியை பகீரதி ஆகியோர் நிகழ்த்தினர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு, மல்லாவி, மடு ஆகிய பகுதிகளிலும் தேசத்தின் குரல் அன்ரன் பாலாசிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

லண்டனில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற சம நேரத்தில் தமிழிர் தாயகத்திலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

http://www.eelampage.com/?cn=30194

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.