Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் கருணாநிதியிடம் அறிய விரும்பும் பதில்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் கருணாநிதியிடம் அறிய விரும்பும் பதில்கள்

சேர, சோழ பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பது தமிழகத்தின் பொறுப்பு. அதிலிருந்து நாம் விலகமாட்டோம்.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னையில் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்னர், இலங்கைத் தமிழர் விடயத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது என்ற நியாயமான கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று அவர் கூறியிருந்தார்.

வாகரையில், நவம்பர் மாதம் எட்டாம் திகதி அகதிகள் ஐம்பது பேர் தமிழர்கள் ஐம்பது பேர் அரசாங்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கோரமாகக் கொலையுண்டனர்.

கதிரவெளிப் பகுதியில் அகதிகள் தங்கியிருந்த பாடசாலையைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அனாதரவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நிராயுதபாணிகளான தமிழர்களைக் கொன்றுவிட்டு, கொலை செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அவர்கள் நடத்திய தாக்குதல்களுக்கான பதில் தாக்குதலிலேயே மக்கள் மரணமானார்கள் என்றும் புரட்டும் புனைகதையும் கூறுவதே இலங்கை அரசாங்கத்தின் வழமை.

அந்த வரிசையில் வாகரைப் படுகொலையிலும், விடுதலைப் புலிகள் அகதிகளைக் கேடயமாக பயன்படுத்தியதாலேயே இந்தப் படுகொலைகள் நடைபெற்றன என்று அரசு கூறிய பொய்யை சர்வதேச சமூகம் நம்பவில்லை; ஏற்கவில்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கை அரசைக் கண்டித்ததோடு கவலையும் அதிர்ச்சியும் தெரிவித்திருந்தன.

இலங்கை அரசின் மனிதப் படுகொலைகளை உலக நாடுகள் கண்டித்த வேளையிலேயே கருணாநிதியின் கண்ணீர் மொழியும் சேர்ந்து கொண்டது.

கடந்த மாதம் 12ஆம் திகதியன்று உதயன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் கருணாநிதியின் கண்ணீர் மொழி போதுமானதல்ல, பொருத்தமானதும் அல்ல என்று சுட்டிக்காட்டி இருந்தது. ஏனைய நாடுகளைப் போன்று, ஏன் இந்திய மத்திய அரசைப்போன்று, கடமைக்காக வெறும் சம்பிரதாயத்துக்காக தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி ஈழத் தமிழர்களின் கொடுங்கொலை குறித்து அவ்வாறு கருத்துக் கூறுவதை ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை; சீரணிக்கவும் இல்லை.

தமிழகத்து மக்களும், ஈழத்தமிழர்களும் இரத்தத்தின் இரத் தங்கள், ஒரு தாய் பிள்ளைகள் போன்று மொழி, கலாசார, பண்பாட்டு வாழ்வியல் விழுமியங்களால் ஒன்றிணைக்கப் பட்டவர்கள்.

ஈழத் தமிழர்கள் மீது ஏவப்பட்டுள்ள அழிவுகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிரான உணர்வலைகள் தமிழகத்தில் பொங்கிப் பிரவாகித்து வரும் இந்த வேளையிலும் மத்திய அரசை சமாளிப்பதற்காக, அதனைத் தாஜா பண்ணுவதற்காக கருணாநிதி கண்ணீர்ப் புலம்பல் நடத்தியதை இங்குள்ள தமிழ் மக்களால் சீரணிக்க முடியவில்லை; ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனைய தலைவர்கள் போன்று ஒப்புக்காக செய்த புலம்பலாகவே அதனை அவர்களல் கணிக்க முடிந்தது. உலகத் தமிழினத்தின் தலைவர் என்ற பொறுப்புமிக்க நிலையில் நின்று பொங்கிஎழும் பாத்திரமாகி இடித்துரைக்க வேண்டிய கருணாநிதி மத்திய அரசிடம் குட்டு வாங்கிவிடக் கூடாதே என்ற மனநெருக்கீட்டுடன் வெளியிட்ட வார்த்தைகள் ஈழத்தமிழர்களை வருத்தமுற வைத்தன. அவரது தயவும், தயக்கமும் ஏமாற்றம் தந்தன.

அதனைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, ஈழத்தமிழர்களுக்குத் தமிழீழம் கிடைத்தால் நான்தான் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் பின்னர் ஒரு தடவை கூறினார்.

"சுதந்திரத் தமிழீழம் மலர்ந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். இதனை இப்போது அல்ல, ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் தெரிவித்திருக்கின்றேன்.

"அதேபோல ஈழத்தமிழர்கள் இத்தகைய படுகொலைகளுக்கு ஆளாகாத வகையில் இரு சாராரும் இணைந்து ஒரு மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடித்து, அதில் ஓர் உடன்பாடு ஏற்பட்டு அமைதியை உருவாக்கினால் அதற்கும் மகிழ்ச்சி அடைவேன்" என்பதே அதுவாகும்.

அந்தக் கூற்று அவரது அரசியல் முதிர்ச்சியினால் வெளிவந்ததா அல்லது வயது முதிர்வினால் உண்டான கடைசிக்கால "ஆசையா' என்பது தனியாக நோக்கப்படவேண்டிய, விமர்சிக்கப்படவேண்டிய ஒன்றாகும். நிற்க,அவர் இப்போது முன் வைத்திருக்கும், மொழிந்திருக்கும் கூற்று அர்த்தமுள்ளதாக, ஓரளவு ஆழம் நிறைந்ததாக அமைந் திருக்கின்றது எனக் கொள்ளக்கூடியது.

எனினும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசினதும் தமிழக மாநில அரசினதும் நிலைப்பாடு ஒன்றே என்று வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகள் மட்டுமன்றி மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் அழுத்தி உரத்துக் கூறி வருகிறார்கள்.

இலங்கையின் ஆட்புலம் மற்றும் இறைமையை பாதிக்காத வகையிலான சகல இனத்தவர்களினதும் நியாயமான உரிமைகளை வழங்கும் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்பதே மத்திய அரசின் வாய்ப்பாடமான தேற்றம். இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் உயிர்களைப் பாதிக்கும் விதத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும். இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து அதிக அக்கறையுடன் காங்கிரஸ் செயற்படுகின்றது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா அண்மையில் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கருணை பொழிந்து கூறியிருக்கிறார். இவற்றில் எந்த நிலைப்பாட்டை தமிழக முதல்வர் என்ற பதவிசால் வகையில் கருணாநிதி ஆதரித்திருக்கிறார் அல்லது இணங்கிப்போகிறார்?

உலகத் தமிழர்களின் தலைவர் என்ற உயர்ந்த பதவியில் நின்று கொண்டு, எதனைச் செய்ய விரும்புகிறார்; செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டைக் கலைஞர் கருணாநிதி கொண்டிருக்கிறார்?

இக்கேள்விகளுக்கான பதில்களை வெளிப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையும் கடமையும் அவருக்கு உண்டு. அதனையே ஈழத்தமிழர்கள் அறிய விரும்புகிறார்கள்.

- உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைப்புண்ணுக்குக் கண்ணாடி ஏன் ? - என்ற முதிய வாக்கு பற்றி அறியாதவரா இந்தக் கருணாநிதி. உலகத்தமிழினத்தலைவர் என்ற விருப்புப் பதவி என்பது ஓட்டுகளால் பெறப்பட முடியாதது.

சாதிக்க வேண்டும்! உலகத்தமிழினத்தின் மனதை ஈர்க்கும் வகையில் தன்னலமற்று தொண்டாற்றிட வேண்டும். இது இலகுவான காரியமல்ல.

- ஆனாலும் காத்திருப்போம்! கடைசிக் காலத்தில் மனிதர்கள் நன்மையே செய்ய விழைவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.