Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கறை காட்டுமா அரசு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்கறை காட்டுமா அரசு?

தென்கிழக்காசிய நாடுகளை உலுப்பி, பெரும் உயிர்ச் சேதங்களையும் உடைமை நாசத்தையும் விளைவித்த ""சுனாமி'' என்ற ஆழிப்பேரலை தாக்கி, இன்னும் ஐந்து நாள்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் புனர்நிர்மாணப் பணிகளுக்குமென ஐக்கிய நாடுகள் உட்பட்ட சர்வதேச மட்டத்தில் உதவும் திட்டங் களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.

இலங்கையைப் பொறுத்த அளவில் ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவை. ஆனால், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் இப் பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் மிக மந்தமாகவே, குறை வாகவே நடைபெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆழிப்பேரலை அனர்ந்த மீளாய்வு அலுவலகத்தின் அறிக்கை, இதனை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்துள்ளது. ""ஓஎஸ்ஈ'' என்ற அந்த அலுவலகத்தின் விசேட தூதுவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக வடக்கில் இந்தப் பணிகள் மிக மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானத்துக்கான பொதுக் கட்டமைப்பு திட்டமிடப்பட்டவாறு செயற்படா மையே இதற்குக் காரணம் என்று விசேட தூதுவர் மந்தீப் கிரேவால் தமது பிந்திய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆழிப்பேரலைப் பாதிப்புகள், இனப்பிரச்சினைக்கான சமா தான முயற்சிக்கு மறைமுகமாக ஓரளவிலேனும் உதவும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் ஓர் எதிர் பார்ப்பு இருந்தது. ஆனால், அது வெறும் கற்பனைக் கோட் டையாக இடிந்து விழுந்து போனமை தெரிந்ததே.

ஆரம்பத்தில், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் வழங்கக் கூடிய நிதி உதவிகளை தக்கவாறு பங்கீட்டு மறுவாழ்வு மற்றும் புனர்நிர்மாண வேலைகளைச் செய்வது சிறந்தது என்ற கருத்து நிலவியது.

அதன் பெறுபேறாக, ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டு மானத்துக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்டமைப்பு செயல் வடிவம் பெறும் வாய்ப்பு அற்றுப் போயிற்று.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னரே சமா தானப் பேச்சுகளின் பலாபலனாக ""சிரான்'' என்ற ஓர் உபகுழு தோற்றுவிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்களின் பொது வான, குறிப்பாக பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சி னைகளை ஆராய்ந்து, வேண்டிய திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவது என்பதே அந்த உபகுழுவின் பிரதான இலக்காக இருந்தது.

""சிரான்'' உப குழு சுமார் ஒரு வருடத்திற்கு இயங்கி தனது பணிகளை முன்னெடுத்தது. ஆனால், பொதுக் கட்டமைப்பு உருவாகாததால் அதுவும் செயலிழந்து போயிற்று.

வடக்கு கிழக்கில் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட இடங்களின் மீள் கட்டுமானப் பணிகளை ""சிரான்'' உபகுழு ஊடாகச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுதலைப் புலிகள் அரசிடம் கோரினர்.

ஆனால், அரசாங்கத் தரப்பு அந்தக் கோரிக்கையை நிரா கரித்தது. அமைச்சு ஒன்றினூடாகவே நிதியை வழங்க முடி யும் என்று அரசாங்கம் தெரிவித்தது.

ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானத்துக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்றை நிறுவுவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தோடு அது பொசுங்கிப் போனது.

இப்போது, அரசாங்கம் தனக்குக் கிடைக்கும் நிதி உதவி களைக் கொண்டு தெற்கில் பெரிய அளவிலும் கிழக்கில் சிறிய அளவிலும் மீள்கட்டுமானங்களைச் செய்து வருகிறது. அவற்றுக்கு மேலதிகமாக பல சர்வதேச தொண்டு நிறு வனங்களும் நிதி உதவிகளையும் உபகரண உதவிகளையும் செய்து வருகின்றன.

ஆனால், வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர் பிரதேசங்களி னது கதியோ வேறாகிவிட்டது. ஒரு சில சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் உதவியால் அங்கும் இங்குமாக சிறிய அள விலேயே, ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்கட்டுமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இறுதிச் சமாதான நிலை எட்டப்படாத சூழ்நிலையிலும், போர் நிறுத்த ஒப்பந்தம் மட்டுமே நடைமுறையில் உள்ள நிலையிலும், இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான ஏதுக்கள் குறைந்திருந்தும், ஆழிப்பேரலை தாக்கியபோது, இன முரண் பாடுகளால், இலங்கையில் 55 பேர்களில் ஒருவர் உள்நாட் டில் இடம்பெயர்ந்தவர்களாக இருந்தனர்

ஆகையால், ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை, மோதல்களால் இடம்பெயர்ந்த வர்களுக்கு வழங்கப்படும் உதவிகளுடன் ஒப்பிடவேண்டிய தேவை உள்ளது. இத்தனைக்கும் மோதல்களால் இடம்பெயர்ந் தவர்களும் ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்தவர்களும் மிக வும் வெவ்வேறு தன்மையினர் வகையினர் என்று விசேட பிரதிநிதி தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு

ஆழிப்பேரலை அனர்த்த மீள் கட்டுமானத்துக்கான பணி களை அரசும் விடுதலைப் புலிகளும் சேர்ந்து, ஒத்துழைப் புடன் ஆற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

எனினும் இலங்கையில் பாதுகாப்பு நிலைமையும் சமா தானப் பேச்சுகளுக்குத் தேவையான பரஸ்பர நம்பிக்கையும் மோசமடைந்தும் தேய்ந்தும் போவதால் இரு தரப்பு ஒத்து ழைப்பு கேள்விக்குரியதே என்றும் மந்தீப் கிரேவால் வருத்தம் தெரிவிக்கத் தவறவில்லை.

ஆயினும்

ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானத்துக்கான பொதுக் கட்டமைப்பு ஒன்று இல்லாததால் "சுனாமி' தாக்கத்திலிருந்து இலங்கையர்களால் மீள முடியவில்லை என்று கிரேவால் எடுத் துரைத்துள்ளார்.

சமாதானத்தை ஏற்படுத்துவதில் முழு ஈடுபாடும் இன்றி இரட்டை முகம் காட்டும் அரசாங்கம் மேற்சொன்ன அறிக்கை யில் இம்மியும் அக்கறை கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.