Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு ஏற்படுகிறவரை போராட்டம் தொடரும்:- திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு.

Featured Replies

ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி வாழ்வு ஏற்படுகிறவரை இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் - திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு.

ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழுகிற நிலை ஏற்படுகின்றவரை இந்தப் போராட்டம் ஓயாது, தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னையில் நேற்று நடைபெற்ற “மனித சங்கிலி’’ போராட்டத்தின் போது ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

ஈழத்திலே நடக்கும் கொடுமைகள் மிக அநாகரிகமான கொடுமைகளாகும். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு. சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகவேண்டும் என்பதற்காக உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய சாலைகளை சிங்கள இனவெறி அரசு மூடிவைத்துள்ளது.

தொடர்ந்து குண்டுமழை அங்கு முகாம்களில் இருக்கின்ற சாதாரண மக்கள், அப்பாவி மக்கள் மீதும், ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்தின் மீதும் தொடர்ந்து சிங்கள அரசு குண்டு மழை பொழிந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகிறது.

அதன் மூலம் தமிழினத்தை அழிக்கக் கூடிய ஒரு திட்டமிட்ட சதி சிங்கள அரசாலே இலங்கையிலே நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டு எந்த நாகரீக உணர்வு உள்ளவர்களும் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

தொப்புள் கொடி உறவுள்ள நாடு

நம்மைப் பொறுத்தவரையிலே அது அண்டை நாடுமல்ல, தொப்புள்கொடி உறவுள்ள ஒரு கலாச்சார ரீதியான, பண்பாட்டு ரீதியான தமிழன மக்கள் இலங்கையிலே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

30ஆண்டுகளாக 30லட்சம் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 5லட்சம் ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்

மற்றயவர்களின் உரைகள்.

செல்வப்பெருந்தகை

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இணைப் பொது செயலாளர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. ஆற்றிய உரை:

மத்திய அரசு உடனே தலையிட்டு ஈழத்தில் மூடப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளைத் திறக்க வேண்டும். இனிமேலும் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. தமிழர்களுடைய உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

டி.கே.எ°. இளங்கோவன்

திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எ°.இளங்கோவன் அவர்கள் ஆற்றிய உரை:

ஈழத் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது என்பதற்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுடைய தலைமையில் இங்கும், மற்றும் தமிழ்நாடு முழுக்க திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

அனைத்துத் தரப்பினரும் இங்கே பங்கேற்றிருக்கின்றார்கள்.

நம்முடைய ஈடுபாட்டை உணர்வுகளைக் காட்டுவதன் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகத்தான் பொருள்.

ஈழத்தமிழர்களின் இன்னலைப் போக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். ஈழத் தமிழர்கள் சாவதைத் தடுக்கும் வரையிலே இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

சி.மகேந்திரன்

இந்திய கம்யூனி°ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் ஜி.மகேந்திரன் ஆற்றிய உரை:

திராவிடர் கழகம் நடத்துகின்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் இந்திய கம்யூனிட் கட்சி தமிழகம் முழுவதும் பங்கேற்கிறது. ஈழத் தமிழர்களின் மீது தொடர்ந்து நடத்தப்படுகின்ற அந்த படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

உணவும், மருந்துப் பொருள்களும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போராட்டம். இது அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதையும், நம்முடைய மதிப்பிற்குரிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களுடைய தலைமையில் நடைபெறுகின்ற போராட்டம். மீண்டும் பல நிலைகளில் வெற்றிபெற வேண்டும் என்பதை இந்திய கம்யூனிட் கட்சிகளின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

செஞ்சி ராமச்சந்திரன்

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி. அவர்கள் ஆற்றிய உரை:

இலங்கையிலே ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து அங்கே அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தமிழத்தினுடைய தலைவராக திராவிடர் கழகத்தினுடைய தலைவராக விளங்குகின்ற அய்யா அவர்களுடைய தலைமையிலே ஈழத் தமிழர்களுக்காக நடைபெறுகின்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலந்து கொள்கிறோம்.

இந்திய அரசின் கவனத்தைக் கொண்டு வந்து ஈழத்தமிழர்களுக்கு உணவுப் பொருள்கள் செல்ல அங்குள்ள சாலையைத் திறந்துவிடவேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு கோரிக்கைகளை இணைத்திருக்கின்றார்கள்.

நம்முடைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய முயற்சியால், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருடன் சந்திக்க இருக்கின்றார்கள்.

இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினையை ஆதரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு, இந்த மனிதச் சங்கிலி அறப்போர் மிகப்பெரிய அளவில் பயன்படும். மத்திய அரசு உடனே தலையிட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

-விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.