Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அல் ஹூசைன் ஏன் வருகிறார்? ஜெனீவா - இலங்கை விவகாரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல் ஹூசைன் ஏன் வருகிறார்? ஜெனீவா - இலங்கை விவகாரம்!

05 பெப்ரவரி 2016
  அல் ஹூசைன் ஏன் வருகிறார்? ஜெனீவா -  இலங்கை விவகாரம்!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டு அது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இதேவேளை இலங்கைக்கான ஐ.நா நிபுணர்குழு இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றதாக தனது அறிக்கைமூலம் அறிவித்திருந்தது. இதன்போது அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அறிவித்தது. 

கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்களில் தொடர்பில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்கு ஐ.நாவில் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்தில் உள்ள தமிழ் மக்களிடம் மாத்திரமின்றி அனைத்துலக தமிழ் மக்களிடமும் ஏற்பட்டது. 

இலங்கையில் கடந்த 2015 ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மார்ச் மாத கூட்டத்தில் பதில் அளிக்க வேண்டிய இலங்கை செப்டம்பர்வரையில் கால அவகாசம் கோரியது. இதேவேளை செப்டம்பரில் அமெரிக்காவினால் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம்  ஒன்று கொண்டுவரப்பட்டது. 

2014 மார்ச்சில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்த ஐ.நா தீர்மானித்திருந்தது அறிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை 2015 செப்டம்பரில் சமர்பிக்கப்பட்டது. இதில் போரின்போது நடைபெற்ற மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. 

பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை என்பன குறித்தும் ஆராய்ந்த குறித்த அறிக்கை கலப்பு விசாரண ஒன்றை இலங்கையில் நடத்தவேண்டும் என்றும் பரிந்துரைத்து இலங்கையை இணை அனுசரனையாகக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

புதிய ஆண்டில் விசாரணைகளை முன்னெடுப்பதாக இலங்கை அரசு தெரிவித்த போதும் இதுவரையில் விசாரணை தொடர்பான எந்த அறிவித்தலையும் வெளியிடவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தாமல் உள்ளக விசாரணை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சர்வதேச தலையீடற்ற விசாரணை நடத்தப்படும் என்று கூறினார் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தின. சர்வதேச தலையீடற்ற ஒரு விசாரணையே நடத்தப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார். சர்வதேசத்தின் பங்களிப்பின்றி விசாரணையை நடத்த முடியாது என்று பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு வெவ்வேறுபட்ட கருத்துக்கள் இலங்கை அரச தரப்பிடமிருந்து வெளிவரும் நிலையில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது. 

இதேவேளை எதிர்வரும் ஜூன் மாதம் ஐ.நாவில் இடம்பெறும் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கை அரசானது வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கலாக கொண்ட கலப்பு விசாரணை ஒன்றை நடாத்தி அதன் வாய்மூல அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் ஐ.நா செப்டம்பர் மாத தீர்மானத்தில் கூறப்பட்டது. 

குறித்த பிரேரணை அமுலாக்கம் தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை அடுத்தவருடம் மார்ச் மாத கூட்டத் தொடரில் இலங்கை சமர்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

2013ஆம் ஆண்டில் அப்போது மனித உரிமை பேரவை ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்திருந்தார். இந்த நிலையில் அவருக்குப் பின்னர் பதவியேற்றுள்ள செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இலங்கை -  ஜெனீவா விவகாரத்தில் முக்கியத்துவமானது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128646/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.