Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சநிலை தெற்கில் குறைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் கவலையளிக்கிறது!

Featured Replies

அச்சநிலை தெற்கில் குறைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் கவலையளிக்கிறது!

அச்சநிலை தெற்கில் குறைந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் கவலையளிக்கிறது!

February 9, 2016  03:33 pm

Bookmark and Share
 
அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் அது உருமாறியுள்ளது, ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை கடந்த ஒரு வருடத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, ஊடகங்களிற்கு இது நன்கு தெரியும் நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கும், நீங்கள் நினைத்ததை அறிக்கையிடுவதற்கும் அதிகளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத் தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் அது உருமாறியுள்ளது, ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது

கிட்டத்தட்ட அனைவரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்ற போதிலும், இந்த முன்னேற்றத்தின் அளவு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளன, எனினும் புதிய முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையை, நடைமுறைப்படுத்தும் முறை தொடர்பில் தமது அலுவலகம் அவதானித்து வருவதாக, மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முழுமையாக விபரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்
 
  • தொடங்கியவர்

அச்சசூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறைவடைந்துள்ளது வடக்குகிழக்கில் கவலையளிக்கிறது:

 
 

 

அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத் தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்குகிழக்கில் அது உருமாறியுள்ளது. ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது (அச்சநிலை) காணப்படுகின்றது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட்  அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை கடந்த ஓரு வருடத்தில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, ஊடகங்களிற்கு இது நன்கு தெரியும் நீங்கள் விரும்பியதை எழுதுவதற்கு அதிகளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத் தக்களவிற்கு குறைவடைந்துள்ளது எனினும் வடக்குகிழக்கில் அது உருமாறியுள்ளது ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது (அச்சநிலை) காணப்படுகின்றது. அனைவரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்ற போதிலும் இந்த முன்னேற்றத்தின் அளவு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
 
வெள்ளைவான் கடத்தல்கள் குறித்து தற்போது மிக அபூர்வமாக குறிப்பிடப்படுகின்றது, சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகள் குறைவடைந்துள்ள போதிலும்புதிய முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளனஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து தான் வழங்கிய வாக்குறுகளில் இருந்து பின்வாங்குகின்றது என்ற அச்சத்தை பலர் என்னிடம் வெளியிட்டிருந்தனர். எனினும் இன்று காலை இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும்  தாங்கள் அளித்த வாக்குறுதிகள் குறித்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர். என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
ஜெனீவா தீர்மானம் குறித்து பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன, இலங்கையர்கள் தீர்மானத்தை புரிந்து கொள்ளவேண்டும்,  அவர்கள் கடந்தகாலங்களின் பயங்கரங்களை எதிர்கொண்டு அவற்றை தோற்கடிக்க வேண்டும்  முன்னைய ஆணையாளர் நவிபிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வேளை காணப்பட்டதை விட தற்போது அதிகளவு சினேகபூர்வமான சூழல் காணப்படுகின்றது.
 
இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை மீள கையளிப்பதை துரிதப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
  • தொடங்கியவர்

' நீதித்துறை அரசியல்மயமானதால்தான், ஐநா சர்வதேச பங்குபெறுதலை வலியுறுத்தியது'

இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து , நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக , மனித உரிமைகள் ஆணையர் சையத் ரா’அத் அல் ஹூசேன் கூறியுள்ளார்.

 

160209131835_unhrcalhussein_640x360_unco

 

இலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களை சந்தித்த பின்னர், இன்று கொழும்பில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஐநா மனித உரிமைக் கவுன்சில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை குறித்து நிறைவேற்றிய தீர்மானம் பற்றி பல புனைவுகளும், தவறான புரிதல்களும் காணப்படுவதாகக் கூறிய அல் ஹுசேன், அந்த்த் தீர்மானம், இலங்கையின் இறையாண்மையிலோ அல்லது சுதந்திரத்திலோ தேவையற்ற வகையில் தலையிடும் ஒரு முயற்சியல்ல என்றார்.

இலங்கை அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, அதன் பலவீனத்தைக் காட்டவில்லை, மாறாக , அதன் பலத்தையே காட்டியது என்றார்.

அத்தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்ட அந்த நிகழ்வு, தனது கடந்த கால சம்பவங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு அது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாவண்ணம் தடுக்க இலங்கை எடுத்துக்கொண்ட உறுதிப்பாடாகவே கருதப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் பல திறமையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் இருந்து, பல ஆண்டுகளாக நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது என்றார் அவர். கடந்த பல தசாப்தங்களாகவே , இலங்கையின் வரலாற்றில் பல நீதித்துறை தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன என்று அவர் கூறினார். இதை இலங்கைப் பிரதமரே வெளிப்படையாக கடந்த ஜனவரி 27ம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

இலங்கையின் நலனையே உலகம் விரும்புகிறது

உலக நாடுகள் இலங்கை ஒரு வெற்றிகரமான நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புவதாக்க் கூறிய அவர், இலங்கையில் நீடித்த அமைதியை உருவாக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை இப்போது உலகம் கண்டிருக்கிறது என்றார். எனவே தான் கடந்த அக்டோபரில் இலங்கை குறித்த அந்த தீர்மானத்தை மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்ற உலக நாடுகள் கணிசமான சக்தியையும், நேரத்தையும் செலவழித்தன என்றார்.

இத்தீர்மானம் ஏன் முக்கியமானது என்பதை அனைத்து இலங்கையர்களும் புரிந்து கொண்டு அதை ஏன் மற்ற நாடுகளும் ஐநா மன்றமும் அங்கீகரித்தன என்பதை விளக்கினால், சீர்திருத்தங்களுக்கும் நீதியை வழங்குவதற்கும் எதிரான குரல்களுக்கு ஆதரவு இருக்காது என்றார்.

கடந்த தேர்தலில் இலங்கை மக்கள் மாற்றத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் ஆதரவாக வாக்களித்தனர் என்று கூறிய அல் ஹுசேன், சிறுபான்மை தீவிரவாதக் குரல்கள் அச்சத்தை உருவாக்கி நிலைமையை குழப்புவதில் வெற்றி கண்டால் அது பெரும் அவமானகரமானது என்றார்.

அரசு மாற்றங்களை உருவாக்க தேவையான மன உறுதியைக் காட்டியிருக்கிறது என்று கூறிய அவர், ஆனால் வடக்கு கிழக்கிலும், கொழும்பில் உள்ள அறிவு ஜீவிகள் சிலர் மத்தியிலும், அரசு தனது மனித உரிமை கடப்பாடுகளிலிருந்து வழுவிவிடுமோ என்ற அச்சங்கள் காணப்படுவதைத் தான் பார்த்ததாக ஹுசேன் கூறினார்.

எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இன்று தன்னிடம் இது குறித்து அளித்த உறுதிமொழிகள் தனக்கு மன நிறைவைத் தருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை ஒரு பொருளாதார சக்தியாக உருவாகவேண்டும் , இலங்கை ராணுவம் அதன் மீது படிந்திருக்கும் களங்கத்தைத் துடைத்தெறிந்து எதிர்காலத்தில் மீண்டும் சர்வதேச அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான பங்காற்றவேண்டும் என்று சர்வதேச சமூகம் விரும்புவதாகவும் அல் ஹுசேன் கூறினார்.

ஆனால் அது எல்லாம் நடக்கவேண்டுமென்றால், இலங்கை தனது கடந்த கால நிகழ்வுகளை எதிர்கொண்டு, கடந்த காலத்தில் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவேண்டும் என்றார் அவர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160209_humanrightssrilanka?ocid=socialflow_facebook

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.