Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் நாட்டில் சட்ட மாற்ற வாக்கெடுப்பு - தப்பு செய்த வெளிநாட்டவரை திருப்பி அனுப்புக

Featured Replies

வரும் 28 மாசி அன்று சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது. அதில் தப்பு செய்கிற வெளிநாட்டவரை திருப்பி அனுப்புவது பற்றியது. ஸ்விபி (SVP) கட்சியினால் தாயாரிக்கப்பட்ட திட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் சம நிலையில் உள்ளனர். வெளிநாட்டவரே அதிக குற்றங்கள் புரிகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, தப்பு செய்பவர்கள் நாடுகடத்த படவேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு வெளிநாட்டவரை சமநிலையில் இல்லாது இரண்டாம் நிலைக்கு தள்ளுகிறது. இங்கு பிறந்து வழர்ந்தவர்களுக்கு, மற்றும் சிறு வயதில் வந்தவர்களுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது. இன் நாட்டு புத்தம் (Passport) உள்ள வெளிநாட்டவர் தப்பித்தனர் என்றே கூறலாம்.

பல உதாரணங்கள்:
- சம்பளம் பத்தாத நபர் ஒருவர் அரசாங்கத்தின் உதவியுடன் குடும்பத்தை நடாத்துகிறார். தனது வேலை பார்க்கும் மூத்த மகனிடம் தனது 12 வயது மகனுக்கு சைக்கில் வாங்க பணம் பெறுகிறார். இதை அரசாங்கத்திடம் சொல்லாமல் இருந்ததால் நாடுகடத்த படுவார்.

- சுவிஸ் நாட்டிற்கு 5 வயதில் வந்த இன்று 28 வயது ஆகும் குமார் (உதாரணம்) ஒரு நிறுவனம் நடாத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். மனைவி வேலை இல்லை. அவர் நிறுவனம் நட்டத்தின் பின் அதை மூடிவிட்டு அரசாங்க வேலை இல்லாதவர்கள் மையத்தில் மாதம் மாதம் பணம் பெறுகிறார். பணம் பற்றாமல் ஒரு கடையில் கழவாக வேலைக்கு செல்கிறார். இது பிடிபட, இவரை நாடுகடத்த உத்தரவிடப்படுகிறது. இவர் தனது ஊர் அறியாதவர், உறவினர்கள் அறியாதவர். மனைவி மட்டும் பிள்ளைகளுடன் தனியே சுவிஸில் வாழும் நிலை.

- ஒரு கடையில் திருடிய நபரை காவல்துறை பிடித்துவிட, இவர் இங்கு பிறந்த வெளிநாட்டவர் என்று அறிந்தும், நாடுகடத்த உத்தரவிடப்படுகிறது.

- வெளிநாட்டவர் ஒரு சுவிஸ் பெண்ணை மணக்கிறார். இவருக்கு இன்னும் சுவிஸ் புத்தகம் கிடைக்கவில்லை. வீட்டில் நடந்த சண்டையில் மனைவி காயப்பட பக்கத்துவீட்டார் காவல்துறையை அழைத்தனர். ஏற்கனவே ஒரு குற்றசெயலில் பதிவான நபரை மனைவி கால்துறையிடம் குற்றம் செய்தார் என வாக்குமூலம் கொடுத்தால் நாடுகடத்த படுவார்.

இதை போல் பல உதாரணங்கள் உள்ளன. இன்றையை நிலையில் நமது தமிழ் மக்களும் வேறு இனத்தவரும் பலவித தவறுகளை புரிகின்றனர். திருட்டு வேலைகள், பணத்தை கணக்குகளில் காட்டாமை மற்றும் அரசாங்கத்தின் பணத்தை துஷ்பிரியோகம் செய்தல் என கூறிக்கொணடே போகலாம்.

நம்மவரின் உண்மை சம்பவங்கள்:
- மனைவி இறந்து ஆறு வருடங்கள் ஆகின. இறக்கும் முன் மனைவிக்கு அரசாங்கம் மாதாந்தம் பணம் வழங்கியது. இறந்ததை இவர் அரசாங்கத்திற்கும் பல மையங்களுக்கும் அறிவித்தார், ஒரே ஒரு அமைப்பிற்கு அறிவிக்கவில்லை, அறிவித்தால் வரும் பணம் நிறுத்தப்பட்டிருக்கும். ஆறு வருடங்களாக அந்த அமைப்பு மொத்தம் 200‘000 சுவிஸ் பிராங் செலுத்தி வந்துள்ளது. இது பிடிபட்டது.

- பெரிய பெரிய வாகனங்கள் விற்பதாக கூறி தனி நபர்களிடம் பல இலட்சம் சுவிஸ் பிராங் பெற்றார். வாகனங்கள் வாங்கியவர்கள் கைகளுக்கு செல்லவில்லை. பணம் எங்கே என்று அரசாங்கம் கேட்க செலவு செய்துள்ளேன் என கூறிவிட்டார்.

- சுய செலவுக்கு வங்கிகளில் பெரிய தொகைகள் எடுக்கப்பட்டன. சம்பள படிவங்கள் பெரிய பெரிய தொகையாக மாற்றப்பட்டன. சட்டத்தக்கு புறம்பானது. 4000 சம்பளம் எடுத்தவர் 6000 என காட்டினார். பணம் வழங்கப்பட்டது. இது சிக்கலாகி தமிழ் ஏயன்சிகள் மாட்டின. மாற்றியவர்கள் மற்றும் பணம் பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபப்படன.

இதை ஆதரிப்பதா வேணாமா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.