Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர்

Featured Replies

டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர்

February 25, 2016

கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tennis-Court-at-Sandy-Lane-Barbados

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான ஊழல் எச்சரிக்கைகள் கடந்த 2012 ஆம் ஆண்டு 14 கிடைக்கப்பெற்றதாக தெரிவித்த நைஜல் வெல்லேர்டன் 2013 இல் 46 ஆகவும் 2014 ஆம் ஆண்டு 91 மற்றும் 2015 ஆம் ஆண்டு 246 என அதிகரித்து செல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு டென்னிஸ் நேர்மை அலகு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. எனினும் இந்த அமைப்பு தன்னிச்சையாக இயங்குவதற்கு பாரிய சிக்கல்கள் உள்ளது. ஓழல் விவகாரம் தொடர்பில் சுயாதீன ஆய்வினை மேற்கொள்ள முடியாது உள்ளது’ எனவும் நைஜல் வெல்லேர்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் டென்னிஸ் ஊழல் குற்றச்சாட்டுகளில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஆவணங்கள் டென்னிஸ் நேர்மை அலகிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நைஜல் வெல்லேர்டன தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9737&cat=2

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

. ஓழல் விவகாரம் தொடர்பில் சுயாதீன ஆய்வினை மேற்கொள்ள முடியாது உள்ளது’ எனவும் நைஜல் வெல்லேர்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

உதயனுக்கு எழுத்துப்பிழைகளை கூட சரிபார்க்க நேரமில்லை.

அதுவும் கஷ்டம்தான் எப்படி சம்பந்தப் பட்டஇருவரின் ஒத்துழைப்பின்றி கண்டுபிடிப்பது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.