Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹேல தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் : திலங்க குற்றசாட்டு

Featured Replies

மஹேல தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார் : திலங்க குற்றசாட்டு

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹே ஜயவர்தன இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறப்பான ஒரு விடயம் அல்ல என இலங்கை கிரிக்கைட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.thilanga-sumathipala-mahela-jayawardene.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட மஹேல ஜெயவர்தன கிரிக்கெட்டிருந்து ஓய்வுபெற்று ஒரு சில மாதங்களே ஆகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயற்படும் அவர் சொந்த நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றார். இந்தச் செயல் எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்

கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/3640

  • தொடங்கியவர்

’’இங்கிலாந்து அணி வீரர்களுக்கு உதவியே செய்தேன்’’ ஜெயவர்த்தனே

February 27, 2016

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தன் மீது குற்றம்சாட்டியிருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜெயவர்த்தனே கூறியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜெயவர்த்தனே, தற்போது இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஜெயவர்த்தனே இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயற்படுவது சிறந்த விடயம் அல்ல என்று கூறிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவர் தாய் நாட்டிற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ad-strikers-mahela

இது பற்றி பேசிய ஜெயவர்த்தனே, “சுமதிபாலவின் கேள்வி சிரிக்கும்படியே உள்ளது. இங்கிலாந்து அணியில் எனது பணி அந்த அணி வீரர்களுக்கு உதவி செய்வது தான். அந்த உதவியும் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது  போன்ற அளவில் தான் இருக்கும். மற்றபடி இங்கிலாந்து என்னை இலங்கை அணியின் ரகசியங்களை பகிர்ந்து கொள்வதற்காக தெரிவு செய்யவில்லை. அதற்கு அணியில் ஆய்வாளர்கள், பயிற்சியாளர்கள் உள்ளனர். இருப்பினும் அவரின் குற்றச்சாட்டால் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த இந்த கருத்து எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9836&cat=2

 

  • தொடங்கியவர்

அணிக்கு குழிபறிக்கிறாரா மகேலா ஜெயவர்தனே? - இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆவேசம்

 
 
மகேலா ஜெயவர்தனே. | கோப்புப் படம்.
மகேலா ஜெயவர்தனே. | கோப்புப் படம்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக முன்னாள் இலங்கை கேப்டன் மகேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டதற்கு இலங்கை வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தும், இலங்கையும் ஒரே பிரிவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலா கூறும்போது, “மகேலா ஜெயவர்தனேயின் அறிவின் மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது ஒரே பிரிவில் இருக்கும் இன்னொரு அணிக்கு அவர் ஆலோசகர். ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே உலகக்கோப்பையில் அவர் வேறு அணிக்கு ஆலோசகராகச் செல்வது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

ஏதாவது ஒரு கிளப், மாகாண அல்லது ஐபிஎல் அணிக்கு ஆலோசகராகச் செல்லலாம். இது ஒரு உலகக்கோப்பை. இப்போதுதான் ஓய்வு பெற்று உடனேயே ஒரே பிரிவில் இருக்கும் இன்னொரு எதிரணியினருக்கு ஆலோசகராகச் செல்லலாமா?”

என்று கேள்வி எழுப்பினார்.

 

ஜெயவர்தனே பதிலடி:

இங்கிலாந்து அணியுடன் எனது ரோல் என்னவெனில் அந்த வீரர்களை மேம்படுத்துவது, மற்றும் பல்வேறு சவால்களைச் சந்திக்க அவர்களது அணுகுமுறையில் சில மாற்றங்களை புகுத்துவது, அதாவது ஸ்பின் பந்து வீச்சை ஆடுவது என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த ஆலோசகர் பதவியை நான் ஏற்கும் போது உலகக்கோப்பை டி20 பிரிவுகள் அறிவிக்கப்படவில்லை. இலங்கை அணி பற்றிய தகவல்களை அளிக்க இங்கிலாந்து என்னை நியமிக்கவில்லை, அதற்காக அவர்களிடம் நிபுணர்களும் பயிற்சியாளர்களும் உள்ளனர்.

நான் ஓய்வு பெற்று குறிப்பாக டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 2 ஆண்டுகள் ஆகின்றன. சரி, நான் இலங்கை வீரர்கள் பற்றிய குறிப்பிட்ட தகவல்களையும், அந்த அணிக்கு எதிரான உத்திகளையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொண்டாலும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் இருக்கும் போது இருந்த அதே உத்திகளை அவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அப்போது அதுதான் பிரச்சினை.

எனக்கு இலங்கை கிரிக்கெட் தான் இருதயபூர்வமானது, ஆனால் நானும் தொழில்பூர்வ வீரர்தான், மற்ற வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வாய்ப்பு வந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் சுமதிபாலா எனது அறம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது.


இவ்வாறு கூறினார் ஜெயவர்தனே.

  • தொடங்கியவர்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவரது கருத்து நகைப்புக்குரியது என்கிறார் மஹேல ஜயவர்தன
2016-02-29 12:22:59

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்­பான தக­வல்­களை அறிந்­து­கொள்­வ­தற்கு இங்­கி­லாந்து தன்னை அமர்த்­த­வில்லை. அவர்­க­ளிடம் பகுப்­பாய்­வா­ளர்­களும் பயிற்­று­நர்களும் இருக்­கின்­றார்கள் என இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மஹேல ஜய­வர்­தன கூறியுள்ளார்.

 

15238150727.jpgஇங்­கி­லாந்து கிரிக்கெட் அணியின் ஆலோ­ச­க­ராக பத்து தினங்­க­ளுக்கு தான் பதவி வகிப்­பது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்  நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால கடு­மை­ யாக விமர்­சித்­தி­ருப்ப­தற்கு பதி­ல­ளிக்கும் வகையில் மஹேல ஜய­வர்­தன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

 

‘‘இலங்­கை அணியின் முன்னாள் தலை­வ­ராக இருந்து மஹேல ஜய­வர்­தன மிக நீண்ட காலம் அணியில் விளை­யா­டி­யவர். அப்­ப­டி­யான அவருக்கு இலங்கை அணியின் பலம், பலவீனம், அணியின் உத்திகள் அனைத்தும் நன்கு தெரியும்.

 

இவ்வளவு விடயங்களைத் தெரிந்த அவர், தனது நாட்டிற்கு எதிராக விளையாடும் மற்றொரு அணிக்கு ஆலோசகராக செயற்படுவது நியாயத்திற்கு புறம்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்’’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந் நிலையில் தனது ஒழுக்­க­வியல் குறித்து சும­தி­பால கேள்வி எழுப்­பி­யி­ருப்­பது நகைப்­புக்­கு­ரி­யது எனவும் மஹேல ஜய­வர்­தன கூறி­யுள்ளார்.
இங்­கி­லாந்து வீரர்­களின் கிரிக்­கெட்டை மேம்­ப­டுத்­து­வதே தனது பணி எனவும் தந்­தி­ரோ­பாயத் தக­வல்­களை வழங்­கு­வ­தல்ல எனவும் அவர் கூறினார்.

 

‘‘சுழல்­பந்து வீச்­சா­ளர்­களை எவ்­வாறு எதிர்­கொள்­ள­வேண்டும் என்­பது உட்­பட சவால்­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­ப­தற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வதே எனது பணி.

 

இங்­கி­லாந்து என்னை அழைத்­த­போது உலக இரு­பது 20 போட்­டிக்­கான குழுக்கள் அறி­விக்­கப்­பட்டிருக்­க வில்லை. இலங்கை அணி தொடர்­பான தக­வல்­களைப் பெறு­வ­தற்­காக இங்­கி­லாந்து என்னை ஆலோ­ச­கராக அமர்த்த­வில்லை. அதற்­கென பகுப்­பாய்­வா­ளர்­களும் பயிற்று­நர்­களும் இருக்­கின்­றனர்.

 

நியா­ய­மாகக் கூறு­வதென்றால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் வெளி­யிட்டுள் கருத்­துக்கள் பெரும் ஏமாற்றம் அளிக்­கின்­றன’’ என மஹேல ஜய வர்தன குறிப்பிட்டார்.

 

‘‘உலக இரு­பது 20 ஆரம்­ப­மா­கும்­போது சர்­வ­தேச ஒருநாள் கிரிக் கெட் அரங்­கி­லி­ருந்து நான் ஓய்வு பெற்று ஒரு வரு­ட­மா­கி­யி­ருக்கும். இரு­பது 20 இலி­ருந்து ஓய்வு பெற்று சுமார் இரண்டு வரு­டங்கள் ஆகி­யி­ருக்கும்.

 

நான் அணியில் இடம்­பெற்ற காலங்­களில் வீரர்கள் மத்­தியில் காணப்­பட்ட அணு­கு­மு­றைகள் மாறாமல் அத­னையே அவர்கள் பின்­பற்­று­வ­தாக இருந்தால் அது பிரச்­சி­னை தான். அப்­ப­டித்­தானே?. இலங்கை அணியில் தற்­போது பல புதி­ய­வர்கள் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளுடன் நான் விளை­யா­டி­ய­தில்லை'' என அவர் மேலும் கூறினார்.

 

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் என்ற வகை யில் இங்­கி­லாந்தின் ஆலோ­ச­க­ராக ஜய­வர்­தன பதவி வகிப்­பது அவ­ரது  கொள்­கை­யற்றத் தன்­மையைக் காட்­டு­கின்­றது என திலங்க சும­தி­பால சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

 

அதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஜய­வர்­தன, ‘‘அப்­ப­டி­யா னால் கிரஹம் போர்டை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அமர்த்­தி­ய­மையும் கொள்­கை­யற்­றதா என கேள்வி எழுப்பினார்.

 

‘‘எனது இத­யத்தில் இலங்­கைக்கு உய­ரிய இடத்தைக் கொடுத்­துள்ளேன். ஆனால், நான் தொழில்சார் கிரிக்கெட்­ து­றையைச் சேர்ந்­தவன்’’ என்றார் ஜய­வர்­தன.

 

‘‘உள்ளூர் கிரிக்கெட் விளை­யாட்டின் மேம்­பாட்டை முன்­னிட்டு 12 மாதங்கள் ஊதி­ய­மின்றி நான் வேலை செய்து ஒரு திட்­டத்­தையும் முன்­வைத்தேன். ஆனால், சும­தி­பால நிரு­வா­கத்­தினால் அந்தத் திட்டம் அகற்­றப்­பட்­டுள்­ளது’’ எனவும் அவர் கூறினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15238#sthash.RJpLmTPH.dpuf
  • தொடங்கியவர்
திலங்க சுமதிபாலவின் உச்சக்கட்ட நகைச்சுவை
 
 

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

INSumJOBucket-2.jpg

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன மீதான இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அண்மைய விமர்சனம், அதிக புருவங்களை உயர்த்தியிருந்தது. உலக இருபதுக்கு-20 தொடரில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல ஜெயவர்தன செயற்படவுள்ளமையே, சுமதிபாலவின் பிரச்சினையாக இருந்தது.

மஹேல ஜெயவர்தனவை 'துரோகி" என்று நேரடியாக அழைக்காமை மாத்திரமே, சுமதிபாலவின் விமர்சனத்தில் இருந்த ஒரே குறை. அதைத் தவிர, மஹேலவின் நேர்மை, அவரது நாட்டுப் பற்று, தொழில் மீதான அவரது நற்பண்பு என, அனைத்தையும் சுமதிபால கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும், உலக இருபதுக்கு-20 தொடரில் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமது போட்டி அணியொன்றுக்கு மஹேல பயிற்சி வழங்குவது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய சுமதிபால, 'ஓய்வுபெற்று சில மாதங்களில், மற்றோர் அணியால் உலகக் கிண்ணத்துக்காக உள்வாங்கப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்திருந்தார். கழகம், மாகாணம், ஐ.பி.எல் போன்றதோர் அணி, பிராந்திய அணி போன்றவை வித்தியாசமானவை எனத் தெரிவித்த அவர், இது உலகக் கிண்ணம் எனவும், தற்போது விலகிய வீரரொருவர், மற்றைய நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியல்ல எனவும் தெரிவித்த அவர், மற்றோர் அணிக்கு ஆதரவு வழங்கவோ அல்லது பயிற்சி வழங்கவோ, ஓய்வின் பின்னர் 24 மாதங்களாவது காத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்திருந்தார். இலங்கை அணியின் இரகசியங்களை, மற்றைய அணிக்கு வழங்குவது பிழை என்பதே, சுமதிபாலவின் விமர்சனம்.

மஹேல மீதான சுமதிபாலவின் இந்த விமர்சனம், விநோதமானது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து மஹேல ஓய்வுபெற்று, ஏறத்தாழ ஒரு வருடமாகிறது. இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று, எதிர்வரும் ஏப்ரலுடன் 2 வருடங்களாகின்றன. ஆகவே, சுமதிபால விரும்பும் 24 மாதங்கள், ஓரளவு பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.

24 மாதங்கள் பூர்த்தியாகவில்லை என்றாலும், முன்னாள் வீரரொருவரைக் கட்டுப்படுத்தும் எந்தவோர் உரிமையும், சுமதிபாலவுக்குக் கிடையாது. அத்தோடு, சுமதிபாலவின் விமர்சனத்தின் மோசமான பகுதி என்னவெனில், இலங்கை அணியின் இரகசியங்களை மஹேல சொல்லிக் கொடுக்கப் போகிறார் என, அவராகவே சுமதிபால முடிவெடுத்துக் கொடுக்கிறார். மஹேலவை நன்றாக அறிந்தவர்கள், மஹேலவின் நடத்தை மீது கேள்விகளை முன்வைப்பதில்லை. ஆனால், சுமதிபாலவோ, சந்தேகத்தைக் கூட வெளியிடாமல், நேரடியாகவே குற்றச்சாட்டாக முன்வைக்கிறார்.

அடுத்து, ஊதியமெதனையும் பெறாமல், ஒரு வருடமாகக் கடினமாக உழைத்து மஹேல தயாரித்த மாகாணமட்ட கிரிக்கெட் தொடரை, சுமதிபால தலைமையிலான கிரிக்கெட் சபை பதவியேற்றதும், நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. முன்னாள் வீரர்களை மதிக்கின்ற சபையானால், தூரநோக்கில் சிந்தித்து, அந்தத் தொடரை நடத்தியிருக்க வேண்டாமா? நிர்வாக அரசியலுக்காகவே அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது என்பது, சிறு பிள்ளைக்கும் கூட தெரிந்த உண்மை.

இலங்கை அணியின் இரகசியங்களை மஹேல சொல்லக்கூடுமென்றால், ஐ.பி.எல் போன்ற தொடர்களில் விளையாடும் இலங்கை வீரர்கள், தங்கள் நாட்டு வீரர்களைக் காட்டிக் கொடுக்க முடியாதா? தனக்கு யோர்க்கர் பந்துவீசச் சொல்லிக் கொடுத்தது மலிங்க தான் என்கிறார் இந்தியாவின் ஜஸ்பிறிட் பும்ரா. அதைப் போன்றே, இரகசிய விடயங்களை இலங்கை வீரர்கள் வழங்க முடியாதா? அவர்கள் விரும்பினால் அவர்களால் முடியும். ஆனால், அவர்கள் செய்யப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, அவர்கள் அவ்வாறு செய்தாலும், கிரிக்கெட் சபை கண்டுகொள்ளப் போவதில்லை. ஏனென்றால், வீரர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை, இலங்கை கிரிக்கெட் சபை பெற்றுக் கொள்ளுமல்லவா? பணம்.!

இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த மஹேல, தன்பக்க நியாயங்களைச் சிறப்பாக வழங்கியிருந்தார். இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே பயிற்றுநராக இருந்த கிரஹம் போர்ட், தற்போது இலங்கைப் பயிற்றுநராக உள்ள நிலையில், அவ்வணியைச் சேர்ந்த ஜேஸன் றோய் பற்றிய தகவல்களை அவரால் பகிர முடியாதா எனவும் மஹேல கேள்வியெழுப்பியிருந்தார். அத்தோடு, 2 வருடங்களுக்கு முன்னரே இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், பல புதிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளதாகவும், அப்போதிருந்த வீரர்களும் தங்கள் நுணுக்கத்தை மாற்றியிருப்பார்கள் எனத் தெரிவித்த மஹேல, 2 வருடங்களுக்கு முன்னர் இருந்த நுணுக்கமே இப்போதும் பயன்படுத்தப்படுகிறது என்றால், அணித் திட்டமிடலில் ஏதோ தவறு எனவும், வீரர்களைப் பற்றி ஆராய்வதற்கு, இங்கிலாந்து அணியில் ஆய்வாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சுமதிபாலவின் இந்த நடவடிக்கை, முன்னாள் காதலியை/காதலனைக் கட்டுப்படுத்த விரும்பும் முன்னாள் காதலனின்/காதலியின் செய்கை போன்றது தான். ஏனெனில், இலங்கையின் முன்னாள் வீரர்களை அரவணைத்து, அவர்களுக்கான ஊதியத்தை வழங்கி, அவர்களை அணியோடு வைத்துக் கொள்வதற்கு இவர்களால் முடியாது. ஆனால், அவர்கள் செய்வதையெல்லாம் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேல், சூதாட்ட நிலையங்கள் கொண்ட மாபெரும் சங்கிலியொன்றுக்கு உரிமையாளர் எனக் குற்றஞ்சாட்டப்படும் திலங்க சுமதிபால, மஹேல போன்றதொரு வீரரின் எண்ணங்கள் தொடர்பாகவும் நடத்தை தொடர்பாகவும் கேள்வியெழுப்புவது தான், உச்சக்கட்ட நகைச்சுவை.

- See more at: http://www.tamilmirror.lk/167064/%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B5-#sthash.ZY58PoHA.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.