Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குனி உத்தரமா அல்லது மகமா??? உண்மை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016
5-ஆம் பதிவு
நாள்: 24.02.2016
        
பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழுநிலவு கடந்த 22.02.2016 அன்று மாலை 06.20-க்குத் தோன்றி நள்ளிரவை 12.25-க்கு இனிதே கடந்தது. இது இழு பறியான நிலைதான். அதற்கு முதல் நாள், நிலவு மாலை 06.10-க்குத் தோன்றி நள்ளிரவு 11.41-க்குக் கடந்த நிலையில் இந்த முழுநிலவு 14-ம் நாளிலேயே வந்து விட்டது என்ற கணிப்பை மாற்றி வியப்பிலும் வியப்பாகவும் விரைந்து இழப்பை ஈடுசெய்தும் வெற்றி பெற்றுள்ளது. நிலவு 23.02.2016 அன்று மாலை 07.20-க்குத் தோன்றியது. இந்த ஒரு மணி நேர இடைவெளி அதற்கு முதல் நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது


கடந்து சென்ற நிலவு பங்குனி உத்தரம்:
    இவ்வாண்டின் வெற்றி பெற்ற முதல் முழுநிலவாகப் பங்குனி உத்தரம் அமைந்தது தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இதைத் தொடர்ந்து இவ்வாண்டின் மிச்சமுள்ள ஒன்பது முழுநிலவுகளும் முறையே 15+15 கணக்கு முறையில் வெற்றி பெற்றால் நாம் தமிழ்ப்புத்தாண்டின் மீட்பை நோக்கிச் செல்வதாகக் கருதலாம்.


பிரித்து விடுக:-
    கடலாடுதலும், புதுப்புனலாடுதலும் தமிழர் மரபில் வெற்றி பெற்ற முழு நிலவு நாட்களில் அமைந்தன என்ற செய்திகள் இலக்கியச் சான்றுகளாக உள்ளன. முங்கிக் குளிக்கவும் துப்பில்லாமல் முக்காலியில் உட்கார்ந்து கொண்டு தலை முழுகும் ஆரிய வைதிகம் தமிழர்களுடையது அல்ல. வளர்பிறை நிலவைச் சல்லியம் வைத்துச், சண்டாளஞ் செய்து, சண்டி ஓமம் நடத்தி, சமற்கிருதத்தால் திட்டி விரட்டும் பீடைகளையெல்லாம் எல்லா முழுநிலவு நாட்களிலும் குளம் குட்டைகளில் படிய முக்கினால் இயற்கை சீர்படும் போலும்.
    இவரைப் பிரித்து விடுக! என்று கோப்பில் எழுதினால், இந்தப் பணியாளரை, அரசு ஊழியரை இன்று முதல் வேறு நிறுவனத்திற்கு மாற்றி விடுக! என்று பொருள், என்றவாறு ஒரு மரபை உருவாக்கியிருக்கிறார் பெருமைக்குரிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாண்பு நிறைந்த முதல் துணை வேந்தர் வடசேரி ஐயம் பெருமாள் சுப்பிரமணியம் அவர்கள். அவரிடம் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய தஞ்சைக் கவிராயர் இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
    தமிழர் வாழ்வியலில் இருந்து ஆரிய வைதிகச் சடங்குகளைப் பிரித்து விடுக! என்று எழுதும் தகுதிவாய்ந்த தமிழ்த் தக்காரைத்தான் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தேடிக்கொண்டிருக்கிறது.


மஞ்சு விரட்டுக்குத் தடை:-
    மஞ்சு விரட்டுக்குத் தடை! மகாமகத்திற்குப் பாதுகாப்புப் படை! இது என்ன நேர்மை?
    தமிழர்களின் மரபு வழிப்பட்ட அனைத்து அறிவுத்துறைகளிலும் ஊடுருவி, வகை மாறாட்டம் செய்து அறிவு மோசடி செய்து எற்றிப் பிழைத்து வந்த ஆரிய வைதிகம் இன்று சட்டம் இயற்றித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமாம்! மற்றையோர் அவர்களின் வாழ்வியலின்படி ஒழுக வேண்டுமாம்! இது எந்த வகை நேர்மை?


கட்டம் கட்டி ஒழித்தது யார்?
    தமிழர்களின் நுண்ணறிவை ஒருபோதும் தமிழர் அல்லாதார் கையாள இயலாது. அது அவர்களை நேரம் பார்த்துப் பிரித்து விடும். அந்த வகையில் முழுநிலவு வழிகாட்டும் என்று நம்பலாம்.
    திருமுருகாற்றுப்படையில் உள்ளவாறு முருகனின் ஒருமுகம் முழுநிலவின் தோற்றம் ஆகும்.
    ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
    திங்கள் போலத் திசை விளக்கும்மே ............(திருமுருகு ... 97-98)
    எந்தெந்த அறிவுத்துறையின் முதன்மைக் கூறுகள் எல்லாம் தமிழ் இனத்தாரை விழிப்படையச் செய்யுமோ அந்தந்தக் கூறுகளையெல்லாம் கட்டம் கட்டி ஒழித்தவர்கள் யார் யார் என்பதில் உண்மைத் தமிழர்கள் முழு விழிப்புப் பெற்றாக வேண்டும். தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் அவற்றுள் முதன்மையானது. 


அடுத்த மறைநிலவு:-
    22.02.2015-ல் முழுநிலவு வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த நாளைத் தவிர்த்து அடுத்து வரும் 15-ம் நாள் ஆகிய 08.03.2016 அன்று அடுத்த மறை நிலவு அமையும் 07.03.2016 விடியற்காலையில் 06.30 மணியளவில் தேய்பிறையின் கடைசிக் கீற்றைக் காண இயலும். 


வருடைப் பிறப்பு:-
    08.03.2016-ல் மறைநிலவைச் செவ்வாய்க் கிழமையாகப் பொருத்தி 11.03.2016 மாலையில் தோன்றும் மூன்றாம் பிறையக் கணக்கிட்டு அன்று இரவு வானத்தை நிமிர்ந்து பார்த்து விடியற் காலையில் அதாவது 12.03.2016 அன்று ஆட்டு வடிவில் ஆன மீன் கூட்டத்திற்குள் கதிரவன் நுழைகிறானா என்று பார்க்கலாம். ஏனெனில் அன்று தான் உண்மையான வருடைப் பிறப்பும் சித்திரை முதல் நாளும் ஆகும். அன்றிலிருந்து 12-ஆம் நாள், அதாவது 23.03.2016 அன்று தான் ‘சித்திரா பவுர்ணமி’ என்ற சித்திரை முழு நிலவு நாள் அமைய வேண்டும். அந்த நிலவைக் கிரகணம் தீண்டாமலும், அந்த நிலவு இரட்டை மீன்களுக்கு இடையே சிக்கி விடாமலும் செல்லத் தமிழர்கள் கவலைப்பட்டாக வேண்டும் இனி! 


முருகனை முன்னெடுக்கும் தமிழ்த் தேசிய அரசியல்:-
    முருகனை முதன்மைப் படுத்தும் தமிழ்த் தேசிய நுண்ணரசியல் என்பது தமிழ்ப்புத்தாண்டினை உவந்து வரவேற்கும் என்பது கோட்பாட்டு அடிப்படை கொண்டது.
    தமிழ்ப் புத்தாண்டின் அருமை தெரிந்து அரசியலைக் கையில் எடுப்போர் இமைப்பொழுதும் அயராமல் அயன்மை இனங்களை விரட்டி அடித்து மொழித்தூய்மை, இனத்தூய்மையைக் கட்டிக் காப்பாற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்வர் என்று வரலாற்று வழியில் நம்பிக்கை பெறலாம். 


‘ஆங்கில ஆண்டு 2016-க்கு இணையான தமிழ் ஆண்டு’
நாள் வர வேண்டியது    நாள் வந்தது    நாள்-சிறப்பு    நாள் சூழ்திறம்    ஆங்கில நாள்    நாள் முறை    நாள் தகுதி
-    1    தமிழ்ப் புத்தாண்டு
தைத்திங்கள் முதல்நாள்    சதயம்    15.12.2015    -    வெற்றி
12    11    முதல் முழுநிலவு    பூசம்    25.12.2015    14-வது நாள்    தோல்வி
27    26    முதல் மறைநிலவு    -    09.01.2016    15-வது நாள்    வெற்றி
42    40    இரண்டாவது முழுநிலவு     மகம்    23.01.2016    14-வது நாள்    தோல்வி
57    55    இரண்டாவது மறைநிலவு    -    07.02.2016    15-வது நாள்    வெற்றி
72    70    மூன்றாவது முழுநிலவு    உத்தரம்    22.02.2016    15-வது நாள்    வெற்றி
87    85    மூன்றாவது மறைநிலவு    -    08.03.2016    -    -
91    -    வருடைப் பிறப்பு சித்திரை திங்கள் முதல் நாள்    -    12.03.2016    -    -
102    -    நான்காவது முழுநிலவு    சித்திரை    23.03.2016    -    -

குறிப்பு: கதிரவன் தென்செலவை முடித்து விலகித் திரும்பி வடக்கே நகரத் தொடங்கிய நாளில் இருந்து சரியாக ‘91’வது நாளில் வருடைப் பிறப்பு ஆகிய சித்திரைத் திங்கள் முதல் நாள் அமைய வேண்டும். இதுவரை இரண்டு முழுநிலவுகள் ஒவ்வொரு நாள் குறைவுற்றபடியால் முறையே இரண்டு நாட்களை இழந்து 89-வது நாளில் 12.03.2016 அன்று அமையவிருக்கிறது.
...---000OOO000---...
© இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.