Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி

Featured Replies

பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி

 
 
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி.
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி.

'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை'

டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை பெரிதுபடுத்தாத அப்ரிடியும், சோயப் மாலிக்கும் இந்தியாவில் எவ்விதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடி, "இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் பேரானந்தத்தை நான் வேறு எங்கும் அனுபவித்ததில்லை. என் கிரிக்கெட் தொழிற்பயணத்தின் கடைசி நாட்களில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் கிடைக்கப்பெற்ற அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த அளவிளான அன்பை நான் பாகிஸ்தானில்கூட உணர்ந்ததில்லை. பாகிஸ்தானைப் போல் இங்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிகம் இருக்கின்றனர். மொத்தத்தில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை நான் எப்போதுமே ரசனையுடன் செய்திருக்கிறேன்" என்றார்.

அப்ரிடியின் கருத்துகளை ஆமோதித்த சோயப் மாலிக், "இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக பலமாக இருக்கின்றன. இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி ஓர் இந்தியப் பெண் (சானியா மிர்சா). அதனால், நான் நிறைய முறை இந்தியா வந்து செல்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் பாதுகாப்பு குறைபாட்டை உணர்ந்ததில்லை. இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒரே மொழியை பேசுகின்றனர். ஒரே மாதிரியான உணவை புசிக்கின்றனர். பாகிஸ்தானியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையே நான் எவ்வித வித்தியாசத்தையும் உணரவில்லை. இந்தியா வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்னை இந்திய மக்களும், ஊடகங்களும் எப்போதுமே அன்புடன் நடத்துகின்றனர். இந்தியா வந்ததில் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.

அரசியல் வேண்டாமே..

இந்தியாவில் நடைபெறும் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்தியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. நாங்கள் கிரிக்கெட் வீரர்களே அரசியல்வாதிகள் அல்ல. அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று நடப்போம்" என அப்ரிடி கூறினார்.

வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர் கூறும்போது, "சர்வதே கிரிக்கெட் போட்டி என்றாலே அழுத்தங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் என்பதை உணர்ந்திருக்கிறோம். எனவே, சவாலை சந்திக்க உடலையும், மனதையும் தகுதியுடன் வைத்திருக்கிறோம். அழுத்தங்களை கையாளத் தெரிந்த அணியே நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/article8348794.ece?homepage=true

  • தொடங்கியவர்

'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை' - அப்ரீடிக்கு நோட்டீஸ்

 
Afridi_2774387f_2774459f.jpg
 

பாகிஸ்தானில் கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்ததில்லை என்று பாக். கேப்டன் அப்ரிடி தெரிவித்தையடுத்து பாகிஸ்தான் மூத்த வழக்கறிஞர் ஒருவர் அப்ரிடிக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதாவது ஞாயிறன்று கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடி, "இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் பேரானந்தத்தை நான் வேறு எங்கும் அனுபவித்ததில்லை. என் கிரிக்கெட் தொழிற்பயணத்தின் கடைசி நாட்களில் நான் நின்றுகொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் கிடைக்கப்பெற்ற அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இந்த அளவிளான அன்பை நான் பாகிஸ்தானில்கூட உணர்ந்ததில்லை" என்றார்.

இதனையடுத்து பாகிஸ்தான் மக்கள் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகவும், தேசத் துரோகம் செய்து விட்டதாகவும் மூத்த வழக்கறிஞர் ஒருவர் அப்ரிடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த நஜாம் சேத்திக்கும் சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர் அசார் சாதிக் கூறும்போது, “ஷாகித் அப்ரிடி, மற்றும் நஜாம் சேத்தி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க சேர்மன் ஷஹார்யார் கான் இது குறித்து அப்ரிடி மீது விசாரணை நடத்தவும் கோரியுள்ளேன்” என்றார்.

அந்த நோட்டீஸில், “அப்ரிடி பாகிஸ்தான் நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். அதாவது பாகிஸ்தானை விட இந்தியா மீது தனது நேசத்தை அவர் காட்டியுள்ளார். அவர் உண்மையில் தேசதுரோகம் செய்துள்ளார். இப்போது இந்தியாவுக்கு எதிரான கொல்கத்தா டி20 உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற ஆடப்போவது யார்?” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அப்ரிடியின் கூற்று பாகிஸ்தானியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதோடு, அவரது வாழ்க்கையையும் பாதிக்குமாறு செய்து கொண்டுள்ளார், என்று கூறிய அசார் சாதிக், அவரது இந்திய-ஆதரவு கூற்றுகளுக்காக அவரை யாரும் மன்னிக்கப்போவதில்லை என்றார்.

நஜாம் சேத்தி அப்ரிடியை இவ்வாறு பேசத் தூண்டியிருக்கலாம் ஏனெனில் நஜாம் சேத்தி எப்பவும் இந்தியாவின் நன்மைக்காக பேசுபவர், எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கடுமை காட்டியுள்ளார் வழக்கறிஞர் அசார் சாதிக்

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article8352760.ece

  • தொடங்கியவர்

அப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு 

பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே  பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜாவீத் மியாண்டட் அளித்த பேட்டியில் , “ இது போன்ற கருத்துக்களை கூறியதற்காக வீரர்களே வெட்கப்பட வேண்டும். உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

இக்கருத்து குறித்து பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம்  அப்ரிடியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

_49022876_010131457-1.jpg

அதில் பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக உள்ளது எனவும், இக் கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை அப்ரிடி திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி:- 

எனது கிரிக்கட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். எமக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பு சிறப்பானதாகும். பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே  பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள்.  கொல்கத்தாவில் விளையாடுவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. இந்தியாவில் கிரிக்கட் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தத்தை  உலகில் வேறு எங்கும் நான் அனுபவித்தது கிடையாது. 

அப்ரிடியின் இந்த கருத்தால் பாகிஸ்தானில்  எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/4205

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.