Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊதிய உயர்வை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகும்!

Featured Replies

ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊதிய உயர்வை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகும்!

- பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:01

ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களுக்குப் பெருமளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அரசதுறை சம்பள மீளாய்வுத் தொழிலாளர் சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக அதாவது 165 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் சம்பளம் 31, 800 ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபாவாக 210 சதவீதத்தாலும், ஜனாதிபதியின் சம்பளம் 25 ஆயிரம் ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபா வாக 300 சதவீதத்தாலும் அதிகரிக்கப்படுமென சமீபத்தில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் புதிய சம்பளம் 2006 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச ஊழியர்கள் 6 சதவீதம் முதல் 15 சவீதம் வரையிலான சம்பள உயர்வையே பெற்றுள்ளார்கள். அரச ஊழியர்கள் 20 வருடங்கள் சேவையாற்றிய பின்னரே ஓய்வூதியம் பெறும் தகுதியைப் பெறுகின்றனர். ஆனால், அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலக உழியர்கள் 5 வருடம் சேவையாற்றினால் ஓய்வூதியம் பெறும் தகுதியைப் பெறும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை அரச ஊழியர்கள் வாழ்க்கைச் செலவுக்கென வழங்கப்பட்டு வந்த 1,100 ரூபா, யுத்தச் செலவைக்காரணம் காட்டி 375 ரூபாவாகக் குறைக் கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு ஒரேயடியாகப் பெருமளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பது பாதுகாப்புச் செலவீனங்களைப் பாதிக்காதா எனவும் தொழிலாளர் சங்க ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

http://www.sankathi.org/news/index.php?opt...69&Itemid=1

ஜனாதிபதியின் சம்பளம் 25 ஆயிரம் ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபா வாக 300 சதவீதத்தாலும் :rolleyes::rolleyes:

அமைச்சர்களின் சம்பளம் 31, 800 ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபாவாக 210 சதவீதத்தாலும் :blink::blink:

ஒரு செய்தியைச் சொல்பவர்கள் கொஞ்சமாவது சிந்தித்து தாம் எழுதுவது சரியா என்று சிந்திக்காமலேயே எழுதுவதிலேயே குறியாகவுள்ளார்கள். :lol::lol::lol:

அதுவுமன்றி, இவை அனைத்தும் ஜனவரி 1-ஆம் திகதி 2006 ஆண்டிலிருந்து அமுலுக்கு வருமென்றல்லவா எழுதப்பட்டுள்ளது !! ஆமாம் இப்போது நத்தார்-புதுவருட காலம்தானே, எனவே தவறுகளுக்கான காரணம் என்னவாயிருக்குமென்று என்னால் உணரமுடிகிறது.

  • தொடங்கியவர்

பாவம், இலங்கைப் பொதுசனங்கள்!

`

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளங்கள் அடுத்த மாதம் தொடக்கம் உயர்த்தப்பட உள்ளன. உயர்த்தப்பட உள்ள சம்பள வீதங்களை அறியும்போது சாதாரண பொதுமக்கள் தலை சுற்றிக் கீழே விழுந்துவிடும் நிலை.

ஜனாதிபதியின் சம்பளம் 300%; அமைச்சர்களின் சம் பளம் 210%; நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 165%. இந்த உயர் கணக்கில் நெடிதுயர்ந்து செல்கிறது. மக்கள் பிரதிநிதிகளின் "ஊதியம்'!

இந்த "எக்கச்சக்கமான' சம்பள உயர்வுகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

இதுவரை காலமும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்கள் பதவி வகித்தால் மட் டுமே ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி உண்டு.

ஆனால், இப்போது அதிலும் ஒரு திருத்தம் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் நாடாளு மன்ற உறுப்பினராகத் தெரிவாகி, சத்தியப் பிரமாணம் செய்துகொண்டால் போதும். அன்று தொடக்கம் ஓய்வூ தியம் பெறுவதற்கு அவரை அருகதை உடையவர் ஆக்கு வதே உத்தேச திருத்தத்தின் நோக்கம்.

ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மக்களால் தெரிவுசெய்யப்படுபவர்கள். அதன் பின்னர் மக் களுக்குச் சேவை செய்வதற்காக அமைச்சர், பிரதி அமைச் சர் பதவிகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அவர்கள் உணவுப் பொருள்கள் உட்பட ஏனைய பாவ னைப் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு மானிய விலைகள் என்ற சலுகை எதுவும் இல்லை என்பது உண் மையே. இங்கே அவர்கள் பொதுமக்களுக்குச் சமமாக மதிக் கப்படுகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே.

ஆனால், அவர்கள் வரிச்சலுகைகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய வசதி உண்டு. அவற்றுக்குத் தேவை யான எரிபொருள்கள், அவற்றைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் சிற்×ழியர்களின் கொடுப்பனவுகள் என்பன மக் கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்தே கறக்கப்படுகின் றன! இவ்வாறு இன்னும் எத்தனையோ விசேட சலுகைகள்.

நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் உள்ள தாகக் கூறப்படுகிறது;. அது உண்மை என்று காட்டிக் கொள் வதற்காக "சரிசெய்யும்' கணக்குகளும் காட்டப்படுகின்றன.

ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்று பொருளா தார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதுவே, சரியென்று ருசுப்படுத்தும் விதத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவு எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு நாளாந்தம் உயர்ந்து உயர்ந்து செல்கிறது. அதனைக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் பொருளாதார வளர்ச்சி கீழ்முகமாக இறங் கிச் செல்கிறது என்பதனை எவரும் புரிந்துகொள்ளலாம்.

இதற்கு மேலதிகமாக விளக்கமும் வியாக்கியானமும் நிபுணத்துவமும் தேவை என்பதல்ல. இத்தகையதோர் பின் புலத்தில், பொருள்களின் விலைகளைக் குறைத்து மக்க ளின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க எந்த மார்க்கமும் அரசுக்கு இல்லை என்பதனை எவரும் மறைக்க முடியாது.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலமும், அவற்றை ஏற்றுமதிசெய்து வெளிநாட்டுச் செலாவணி யைச் சம்பாதிப்பதன் மூலமுமே வாழ்க்கைச் செலவைக் குறைக்க வாய்ப்பு உண்டாகும்.

இது விடயத்திலும், பதவிக்கு வந்த அத்தனை அரசு களும் தோல்வியே கண்டன. நாட்டின் வரவையும் செல வையும் சமன்சீர்செய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப்போவதாக வாய் வேதாந்தம் பேசிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றுவது எல்லா அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் கைவந்த கலை.

ஆனால், பொருளாதார நிலையில் மக்களை அதள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு அவர்களின் முதுகுகள் மீது அடுத்தடுத்துக் கனம் நிறைந்த பாரப்பொதிகளை ஏற்றி எலும்புகளை உடைத்துவிடுவதே கடந்த பல தசாப் தங்களாக நடைபெற்றுவரும் "சீரிய நடைமுறை'! அல்லலுறும் மக்களின் எல்லையில்லா அனுபவமும் அதுவே!

இந்த இலட்சணத்தில் நாட்டின் பாதுகாப்புச் செலவை 47 சதவீதத்தால் அதிகரித்து மேலும் நிலைமையை மோச மாக்கி உள்ளது மஹிந்த அரசு. மக்களில் மிகப் பெரும் பாலானவர்கள் சமாதானத்தையே விரும்பினாலும், அர சாங்கம் யுத்தத்தை நாடி, கோடான கோடிக் கணக்கில் பணத் தைச் செலவிட்டுக் கரியாக்குவதற்கு கங்கணம் கட்டி நிற் கிறது. முழு அளவிலான போருக்கு முஸ்தீபு செய்துவருகிறது.

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையை நினைத்த நினைத்தவாறு, திடீர் திடீரென, அனேகமாக நாளாந்தம், அவர்கள் தாங்க முடியாதவாறு, ஒடிந்துவிடும் வகையில் அதிகரித்துக்கொண்டு

அரசியல் தலைவர்களின் சம்பளங்களை உயர்த்து வதற்கு முடிவு செய்திருப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இதனைச் சற்றேனும் மனிதாபிமான உணர்வுடன் நோக்கும் பண்பும் பழக்கமும் இந்த நாட்டு அரசியல் வாதிகளுக்கு இல்லை என்பதனை மக்கள் அறிந்திருந்து என்ன? திக்கற்றவர்கள் அவர்கள்!

நாடு சுபீட்சம் பெற்று, திருப்தியாக உண்டு, உடுத்து சராசரி வாழ்க்கையையேனும் நடத்தும் நிலை வராதா என்று இந்நாட்டு மக்கள், இப்போது ஏங்கிப் பயனில்லை.

உணவை அகப்பையில் அள்ளி வைத்திருக்கும் அர சியல்வாதிகள், தலைவர்கள் தமக்குள் அதனைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் அவர்களைத் தெரிவு செய்த பாவத்திற்காக நாவறண்டு ஏதிலிகளாக வேண்டியது தானா?

அரசியல் தலைவர்கள் மட்டுமே மனிதர்கள், மக்கள் அந்த வகை சாராதாவர்கள் என்ற எண்ணத்துடன் ஏமாற் றும் போக்குடன் நடமாடும் நிலை மாறும் வரை இந்த நாட்டில் பொதுசனத்துக்கு மீட்சியே இல்லை.

பொதுமக்களின் வாக்குகளுக்கு மன்றாடி அவற்றைப் பெற்று அரசியல் தலைவர்களாக வருவோர், ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்துவிடும் விதத்தில் செயற்படுவது தொடரும் வரை இந்த நாடு முன்னேறமாட்டாது நிச்சயம்.

தேர்தல் காலத்தில் இதனை பொதுமக்கள் உணர்ந்து நடந்தாலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே "அரசர் களாக' ஆட்சி யில் அமர்வார்கள்.

பாவம், இலங்கை நாட்டின் பொதுசனங்கள்!

http://www.uthayan.com/editor.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.