Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு ஒரு புதிய நோய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஒரு புதிய நோய்!

- உதயன்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது, மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளாமை என்பன குறித்துச் சாடி வந்த வெளி உலகம் சர்வதேசம் இப்போது இந்த நாட்டில் ஊழல் கள் மலிந்து வருவதை கண்டிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த வரிசையில், அமெரிக்காவின், ஆசியப் பிராந்தியங்களுக்கான வெளியுறவுக் கொள்கைக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் ஊழல்கள் மலிந்து வருவதை அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை இல்லாத போக்கை கடும் தொனியில் எச்சரித்திருக்கிறது.

இலங்கை அரசாங்கம், ஊழல் பெருகுவதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்வதில்லை என்று எள்ளி நகையாடி இருக்கிறது அமெரிக்க செனெட்டின் குழு.

ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கு, லஞ்சம், ஊழல் என்பன ஒழிக்கப்பட வேண்டும். கீழைத்தேச நாடுகளில் இவை இரண்டும் அரசாள்வோர் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் உண்டு என்பது மறுக்க முடியாத, தர்க்கத்துக்கு எடுத்துக்கொள்ள இயலாத உண்மை.

ஆனாலும், மேலை நாடுகள் இது விடயத்தில் மிகச் சுத்தமானவை என்று சொல்வதற்கில்லை. ஆயினும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, இயன்றளவு குறைத்துக்கொள்வதில் அக்கறையும் உணர்வும் அவற்றுக்கு அதிகம். அதற்கான கடும் சட்ட விதிகளும் அவற்றைப் பாகுபாடின்றி நடைமுறைப்படுத்தும் வழக்கமும் மேலோங்கி நிற்பதை அந்நாடுகளில் காணலாம். கீழைத்தேச நாடுகள் லஞ்சம் மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கு முயன்றாலும், அல்லது அவ்வாறு முயல் வதாகக் காட்டிக்கொண்டாலும், மிகவும் குறைந்தளவு முன்னேற்றமே மிஞ்சுகிறது.

அவற்றிலும், குறிப்பாக ஆசிய நாடுகளில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுவது என்று சொல்வதை விடக் கோரத் தாண்டவம் ஆடுகிறது என்பதே பொருத்தம். இலங்கையும் அந்தக் குழுவைச் சேர்ந்ததே.

சமூகத்தின் கீழ் மட்டம் தொடங்கி அரசாளும் வர்க்கம் வரையான நீண்ட பெரிய வரிசையில் அடங்குவோர், லஞ்சம் மற்றும் ஊழலை தமது வாழ்க்கையின் ஓர் அம்சமாக்கிக் கொள்கிறார்கள். அது குறித்து அவர்கள் வெட்கப்படுவதுமில்லை. அவற்றைக் குற்றங்களா கக் கருதுவதுமில்லை. தமக்கு நயம் தரும் முன்சொன்ன இரண்டு சமூக விரோதச் செயற்பாடுகளை அச்சமோ வெட்கமோ இல்லாது கைக்கொள்கிறார்கள். அதனை ஒரு நிரந்தரமான பழக்கமாக்கிக்கொள் கிறார்கள். அதுவும் ஒரு வாழ்க்கை முறை என்ற ""பெருமையோடு'' செய்கிறார்கள்.

எங்கும் எதிலும் லஞ்சம், அங்கும் இங்கும் ஊழல் என்றவாறு அவை நாட்டில் பரவிப் படர்ந்து மக்களைஇம்சைப்படுத்துகின்றன. தமக்கு வேண்டியதை அடைவதற்கு ஊழல் புரிந்து கொள்பவர்கள் மலிந்துபோயுள்ள காலம் இது.

இதனை அமெரிக்க செனெட் குழு இப்போது தான் கண்டு பிடித்திருக்கலாம். சமுதாயத்தை நாசம் செய்யும் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் சேர்த்திருப்பதால் உடனடியாக அவை குறைந்து போகுமா? பொதுவாக, அரசாங்கத் துறைகளில் இந்த இரண்டு சமூகத் துரோகங்களும் தாராளமாக இடம்பெறுகின்றன. தட்டிக் கேட்க எவருமில்லாவிடில் தம்பி சண்டப் பிர சண்டம் என்பது போல, எல்லையற்ற விதங்களில் அவை பெருகி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒன்று இயங்கினாலும் எலிகள் பிடிபடுவதும் முதலைகள் தப்பிவிடுவதும் சர்வசாதாரணம்.

அரசியல் தலைவர்கள் உட்பட சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஊழல் பரவிப் படர்ந்திருப்பதால், ஆட்சியில் உள்ளவர்களும் அவற்றில் அடிக்கடி சம்பந்தப்படுவதால், அவை தடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை. தன்னைத் திருத்திக் கொள்ளாமல் பிறரைத் திருத்துவது மிகவும் கடினம். ஆகையால் இன்றைய போக்கில் ஊழலை ஒழிப்பது என்பது சாத்தியமாகப் போவதில்லை.

இலங்கையையும் ஊழல் மலிந்த நாடுகளில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ள அமெரிக்கா, அதன் மூலம் இலங்கையை, இலங்கை அரசை என்னதான் செய்து விட முடியும்? லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதைத் தவிர அதனால் வேறு எதனைத் தான் சாதிக்க முடியும்? நிதி உதவி வழங்குதலை குறைத்து நல்லாட்சி செய்யுமாறு அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தலாம். ஆனால் அந் நாடு அந்த வழியை நாடாது.

மனித வாழ்வின், மிக உயர்ந்த விழுமியமான அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதை சுட்டிக் காட்டி, நிதி உதவி வழங்குதலை நிறுத்தாத அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் இலங்கையில் லஞ்சம், ஊழலைக் குறைப்பதற்கு நிதி வழங்கலை தொடர்பு படுத்தி அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை.

எனினும், இலங்கை அரசாங்கத்துக்கு வெளி உலகில் உண்டாகிவரும் வடுக்களுடன் ஊழல் பெருக்க மும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது இலங்கைக்கு ஒரு புதிய நோயே!

"புலிகள் யுத்தத்தை நாடினால் பலம் மிக்க இலங்கை ராணுவத்தினை சந்திக்க வேண்டி வரும்" என்று திமிராக அறிக்கை விட்ட அமெரிக்காவிற்கு ஆரம்பத்திலேயே தலைகுனிவு ஏற்பட்டது.

இலங்கை ராணுவத்தளபதி மீதான தாக்குதல் தொடங்கி பல தாக்குதல்கள் ஊழல் மலிந்த ராணுவத்திராலேயே இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. எத்தனை இராணுவத் தொழில் நுட்பங்களை போதித்தாலும் அவை அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்படும் என்பதை உணர்ந்த அமெரிக்கா இப்போது USAID மற்றும் ADB என்பவற்றின் மூலமாக பெருமளவிலான நிதியினை ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு வழங்கி வருகின்றது. அதன் படி பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,

1) வீதிகள், பொது நிகழ்ச்சிகள், பேருந்து, தொடருந்து என்பவற்றில் தொண்டர் அமைப்புகள் மூலம் துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வீதி நாடகங்கள் நடாத்துதல்.

2) அனைத்து வாணொலி தொலைக்காட்சி போன்றவற்றில் அனைவரையும் கவரும் வண்ணம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்தல் (இது மிகவும் ஆழமாக மக்களை சென்றடைகின்றது)

இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல ஊழல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது ராணுவ அபிலாசையை நிலைநிறுத்திக் கொள்ள தடையாக இருக்கும் இலங்கையின் உழலை ஒழிக்க அமெரிக்காவின் முயற்சி பலிக்குமா?

இது போலவே அண்மைய மாதங்களில் பல உள்ளூர் பாதாள உலக நபர்களும் தயவுதாட்சனியம் இன்றி பொலிசாரால் எவ்வித விசாரணைகளுமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்காக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாத முன்னாள் பாதாள உலக சந்தேக நபர்களை பகலில் வீட்டில் வைத்து கைது செய்து அன்றிரவே ஆயுதங்களை காட்டித்தருவதற்காக எனக் கூறி கைதிகளை வெளியில் அழைத்துச் சென்று பின்னர் தாக்க முயன்றதாக கூறி சுட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு கடந்த மாதத்தில் மட்டும் 5 இற்கும் அதிகமான சம்பவங்களில் 10 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதற்குக் காரணம் புலிகள் சில பாதாள உலகக்குழுவினரை சில இராணுவ உளவாளிகளை கொல்லப்பயன்படுத்தியதேயாகு

Edited by saanakiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.