Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க., 10 அமைச்சர்களுக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை

Featured Replies

10 மந்திரிகள் காலி; காரணம் என்ன?

அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், 10 அமைச்சர்களுக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை. இது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil_News_large_1494481.jpg

பூனாட்சி:

சிவபதியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக, மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பூனாட்சிக்கு யோகம் அடித்தது; முத்தரையர் கோட்டாவில், கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சரானார்.அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சகோதரரின் சொத்தை அபகரிக்க முயன்றார்; ஆட்சிக்கு எதிராக நடந்த முத்தரையர் போராட்டத்துக்கு பின்னணியாக இருந்தார் என்ற உளவுத்துறை அறிக்கை, அவரது சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.


சுப்பிரமணியன்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நல அமைச்சரானார். ஆட்சிக்காலம் முழுவதும் பதவியில் இருந்துள்ளார். ஆனால், தொகுதி பக்கமே சென்றதில்லை. யாராவது கேட்டால், 'எனக்கா ஓட்டு போட்டீர்கள்; ஜெயலலிதாவுக்கு தானே; அங்க போய் கேளுங்கள்' என, பயப்படாமல் பேசுவார்.கந்தர்வகோட்டை பேருந்து நிலைய இடம் தேர்வு செய்த விஷயத்தில், மக்களின் பகையை சம்பாதித்தார். அதனால், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் அவரை விரட்டிய காட்சிகளும் நடந்தன.அதோடு, கட்சியினரை மதிப்பதில்லை; எளிதில் சந்திக்க முடிவதில்லை என்ற புகார்களும் சேர்ந்ததை அடுத்து, இந்த தேர்தலில் வாய்ப்பை இழந்துள்ளார்.


அப்துல் ரகீம்:

ஆவடி எம்.எல்.ஏ., அப்துல் ரகீம்; இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கிறார். 2011 சட்டசபை தேர்தலில், 42 ஆயிரத்து, 173 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அடுத்த சில மாதங்களில் நடந்த, ஆவடி நகரசபை தலைவர் தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த நாசர் வெற்றி பெற்றார். நாசர் வெற்றி பெறுவதற்காக, இவர் உள்ளடி வேலை செய்தது தான், அ.தி.மு.க., தோல்விக்கு காரணம் என புகார் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, அவரிடம் இருந்த நகர செயலர் பதவி பறிக்கப்பட்டது.மேலும் பினாமிகள் பெயரில் பல்வேறு நிலங்களை ஆக்கிரமித்து வளைத்தது தொடர்பான புகார்களும், போயஸ் கார்டனுக்கு சென்றன.இந்த தேர்தலிலும், தி.மு.க., வெற்றிக்கு மறைமுகமாக உதவ, அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் அடுத்த நகரசபை தேர்தலில், தன் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரை பதவியில் அமர்த்தி, வருவாய்க்கு வழிவகுக்க, தி.மு.க., உதவும் விதத்திலான, 'நன்றிக்கடன்' திட்டமும் தயாரிக்கப்பட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதெல்லாம் தான், 'சீட்' மறுப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது.


ஜெயபால்:

நாகப்பட்டினம் மாவட்ட செயலராக இருந்த ஓ.எஸ்.மணியன் சிபாரிசில், ஜெயபாலுக்கு, 'சீட்' கிடைத்தது; வெற்றி பெற்று, மீன்வளத் துறை அமைச்சரானார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரண்டு கோஷ்டிகள் உருவாகி, ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் வேலைகள் துவங்கின. ஜெயபால், தன்னை ஆட்டுவித்த மணியனை பற்றி மேலிடத்தில் போட்டுக் கொடுத்து, அவரிடமிருந்த மாவட்ட செயலர் பதவியை பறித்தார்; எம்.பி., தேர்தலிலும் மணியனுக்கு சீட் கிடைக்காமல் செய்தார்.பதிலுக்கு, மணியன் ஆதரவாளர்கள், ஜெயபாலிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தோல்வியை சந்தித்தனர். விரக்தியடைந்த மணியன் தரப்பு, ஜெயபாலுக்கு மீண்டும் சீட் கிடைக்காமல் தடுக்க, சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தியது. ஜெயபால் பற்றிய தகவல்களை, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மூலம்பரப்பியதன் விளைவு, ஜெயபாலுக்கு, 'கல்தா' கொடுக்கப்பட்டது.


சண்முகநாதன்:

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு, ஜவுளி மற்றும் சுற்றுலா துறை அமைச்சரானார், எஸ்.பி.சண்முகநாதன்.இந்த மாவட்டத்தில், சண்முகநாதன் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் எதிர்கோஷ்டியும் செயல்படுகிறது. ஆட்சி அமைந்ததும், சண்முகநாதன் தான் முதலில் அமைச்சரானார். அவர் மீதான புகார்களை, செல்லப்பாண்டியன் குரூப், கார்டனுக்கு அள்ளி வீசியதில், அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது. அந்த பதவி, செல்லப்பாண்டியனுக்கு கிடைத்தது. சும்மா விடுவாரா, சண்முகநாதன். செல்லப்பாண்டியன் எப்போது சிக்குவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், அவரது மகனின் ஏடாகூடமான வீடியோ வெளியானது. அந்த சிக்கலில், செல்லப்பாண்டியன் காலியானதும், அமைச்சர் பதவி மீண்டும் சண்முகநாதன் கைக்கு வந்தது.கடைசி வரை அதை, செல்லப்பாண்டியனால் தட்டி பறிக்க முடியாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நடந்த, 'சீட்' பேர வசூல் ஆடியோ வெளியானது. அதில், சரியாக சிக்கிக் கொண்டார். அவரது உதவியாளர் கைது வரை விவகாரம் சென்ற போதே, அவருக்கு சீட் இல்லை என்பது உறுதியானது.


சுந்தர்ராஜன்:

கடந்த தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனி தொகுதியில் வெற்றி பெற்று, விளையாட்டு துறை அமைச்சரானார் சுந்தர்ராஜன்.இத்தொகுதியில், ஐந்து முறை போட்டியிட்டுள்ள அவர், இரண்டு முறை தோல்வியும், மூன்று முறை வெற்றியும் பெற்றுள்ளார்.ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், புதுக்கோட்டை மாணவியர் விளையாட்டு விடுதியில், இரவு நேரத்தில் அவர் நடத்திய திடீர் ஆய்வும், மாணவியரை தொட்டு பேசிய விதமும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அமைச்சரின் செயலை கண்டித்தன.அதனால், கட்சித் தலைமையின் கடும் கோபத்திற்கு ஆளான அவருக்கு, லோக்கல் கட்சியினரின் எதிர்ப்பும் சேர்ந்ததால், 'சீட்' மறுக்கப்பட்டு உள்ளது.


முக்கூர் சுப்பிரமணியன்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சேர்ந்த முக்கூர் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருக்கிறார்.இவர், பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வாங்கியதில், கட்சி தலைமைக்கு தெரியாமல் கமிஷன் தொகை கறந்ததாகவும், அதில் கோவில் கட்டி, வெள்ளி தேர் செய்ததாகவும் புகார் எழுந்தது.மேலும் கட்சி பிரமுகர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது போன்ற புகார்களும், தலைமைக்கு சென்றன.அவரது நடவடிக்கைகளை, தலைமை ஆய்வு செய்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும், பா.ம.க.,வினரிடம் ரகசிய தொடர்பில் உள்ளதும் தெரியவந்தது. இதனால் அவருக்கு, 'சீட்' மறுத்துள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரம் சொல்கிறது.

மோகன்:

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, ஊரக தொழில்துறை அமைச்சரானார், மோகன். அ.தி.மு.க., அமைப்பு செயலராகவும் இருக்கிறார்.
கூட்டுறவு தேர்தல்களில், கட்சியினரை புறக்கணித்து, தன் உறவினர்களுக்கு மட்டும், 'சீட்' பெற்று தந்ததாக, முதல் புகார் அவர் மீது தலைமைக்கு போனது.சேஷசமுத்திரம், பாண்டியங்குப்பம் பகுதிகளில் ஏற்பட்ட இரு பிரிவு மோதலை தடுக்க தவறியதாக, அடுத்த புகார் கூறப்பட்டது.மிக முக்கியமாக, பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் பண வசூல் விவகாரம், தலைமையின் கோபத்திற்கு காரணமானது. ஆந்திர சிறையில் அடைபட்டிருந்த தமிழர்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா முயற்சி எடுத்தார். அதை மக்களிடத்தில் கொண்டு செல்ல, மோகன் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, தி.மு.க., மாவட்ட செயலர், விடுதலையான தமிழர்களை, அறிவாலயம் அழைத்து வந்து பாராட்டு கூட்டமே நடத்தி விட்டார். அதில் கோட்டை விட்டதாக, மோகன் மீது கடைசி புகார் பறந்தது. இதெல்லாம் சேர்ந்து, மோகன் வாய்ப்பை பறித்துள்ளது.


பழனிப்பன்:

gallerye_003500806_1494481.jpg

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஜெயித்து, உயர் கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தவர் பழனியப்பன். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இதனால், தலைமை நிலையச் செயலர், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், ஐவர் அணியில் இடம் என, அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள் கிடைத்தன. இதையடுத்து, கட்சியில் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கியது தான், அவரது வீழ்ச்சியின் துவக்கம். லோக்சபா தேர்தலில் தர்மபுரியில், அ.தி.மு.க., தோற்றதும், அவரது பதவி பறிபோய் விடும் என்றனர். ஆனால், அந்த பழியை கே.பி.முனுசாமி மீது போட்டு தப்பித்தார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கான்ட்ராக்ட் பணிகளை, தன் குடும்பத்தார் மூலம் செய்தார். தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால், கட்சியினரிடையே வெறுப்பை சம்பாதித்தார். துணைவேந்தர் நியமனம் உட்பட துறை சார்ந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள், ஆதாரத்துடன் தலைமைக்கு புகார்களாக சென்றன. பினாமி பெயரில் சொத்து குவிப்பு, 'சீட்' வாங்கி தருவதாக வசூல் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. ஐவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.இதேபோல, வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மீதும் பல்வேறு புகார்கள் காரணமாக மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1494481

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.