Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் பீதி: மனு தாக்கல் முடியும் வரை படபடப்பு நீடிக்கும்

Featured Replies

Tamil_News_large_149591320160406235008.j

அ.தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை, 13 பேரை, முதல்வர் ஜெயலலிதா மாற்றியுள்ளதால், வேட்பாளர் அந்தஸ்து நீடிக்குமா என்ற படபடப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பற்றிய புகார்கள், போயஸ் தோட்டத்தில் குவிந்து வருவதால், மனு தாக்கல் முடியும் வரை, இந்த மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, இம்மாதம், 4ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்தப் பட்டியலில், புதுமுகங்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் புகார்களுக்கு ஆளானவர்கள் என்பதால், அதிர்ச்சி அடைந்த கட்சியினர், அ.தி.மு.க., மேலிடத்திற்கு தொடர்ந்து, புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.அவற்றின் அடிப்படையில், வேட்பாளர்கள் மாற்றம் துவங்கி உள்ளது. நேற்று முன்தினம், அருப்புக்கோட்டை வேட்பாளர் முத்துராஜாவிற்கு பதிலாக, தற்போதைய, எம்.எல்.ஏ., வைகை செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இதன் தொடர்ச்சியாக நேற்று, தமிழகத்தில், 9 வேட்பாளர்கள்; புதுச்சேரியில், மூன்று வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்; அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, இது தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டார்.இந்த வேட்பாளர்கள் மாற்றம், அடுத்து வரும் நாட்களிலும் தொடரும் என்பதால், 4ம் தேதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலர், பீதி அடைந்துள்ளனர். அவர்களின் படபடப்பு, மனு தாக்கல் முடியும் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய வேட்பாளர் மாற்றத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் எம்.பி., ஓ.எஸ்.மணியன், ராஜன் செல்லப்பா போன்ற, சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போன்றவர்கள், தங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் இருக்கும், தற்போதைய, எம்.எல்.ஏ.,க்கள் பலரும், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.இன்று அமாவாசை தினம் என்பதால், நேற்றை விட இன்று, வேட்பாளர்கள் மாற்றம் அதிக அளவில் இருக்கும் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று மாற்றப்பட்ட வேட்பாளர்கள் விவரம்

தொகுதி பெயர் - பழைய வேட்பாளர் - புதிய வேட்பாளர்
1. தியாகராய நகர் - சரஸ்வதி ரெங்கசாமி - சத்யநாராயணன் (எ) தி.நகர் சத்யா, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர்
2. மேட்டூர் - சந்திரசேகரன் - செம்மலை, அமைப்பு செயலர்
3. காட்டுமன்னார் கோவில் (தனி) - மணிகண்டன் - முருகுமாறன், எம்.எல்.ஏ., கடலுார் மேற்கு மாவட்ட துணை செயலர்
4. பூம்புகார் - நடராஜன் - பவுன்ராஜ், எம்.எல்.ஏ., செம்பனார் கோவில் தெற்கு ஒன்றிய செயலர்
5.வேதாரண்யம் - கிரிதரன் - ஓ.எஸ்.மணியன், முன்னாள் எம்.பி., நாகப்பட்டினம் மாவட்ட செயலர்
6. மன்னார்குடி - சுதா - எஸ்.காமராஜ், நீடாமங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர்
7. நாகர்கோவில் - டாரதி சேம்சன் - நாஞ்சில் முருகேசன், எம்.எல்.ஏ.,
8. பல்லாவரம் - இளங்கோவன் - சி.ஆர்.சரஸ்வதி, மகளிர் அணி துணை செயலர்
9. மதுரை வடக்கு - பாண்டியன் - ராஜன் செல்லப்பா, மதுரை மேயர்

புதுச்சேரி மாநிலம்
1. திருபுவனை (தனி) - சபாபதி - சங்கர்
2. திருநள்ளார் - அசனா - முருகையன், சட்டசபை தொகுதி செயலர்
3. காரைக்கால் தெற்கு - கணபதி - அசனா, காரைக்கால் மாவட்ட துணை செயலர்

பெண் வேட்பாளரை மாற்றிய 'கடுதாசி':

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரசபை தலைவராக இருப்பவர் சுதா அன்புச்செல்வன்; இவர், மன்னார்குடி தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே, நகராட்சி ஊழியர்கள் என்ற பெயரில், அ.தி.மு.க., தலைமைக்கு, ஒரு மொட்டை கடிதம் அனுப்பப்பட்டது. சுதா, மன்னார்குடி பஸ் நிலைய ஒப்பந்ததாரரிடம், 1.60 கோடி ரூபாய் பெற்று, சென்னையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்; தனியார் நிறுவனத்திற்கு துப்புரவு பணி வழங்கி, மாதம், 10 லட்சம் ரூபாய் கமிஷன் பெறுகிறார்; நகராட்சி ஆணையர் பணியிடத்தை காலியாகவே வைத்திருந்து, பல காரியங்கள் சாதித்துள்ளார் உட்பட, பல குற்றச்சாட்டுகள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன என கூறப்படுகிறது.இந்நிலையில், சுதா மாற்றப்பட்டு, சசிகலா ஆதரவாளர் காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1495913

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.