Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை முஸ்லிம்கள் எந்த இனம்? (காணொளி)

Featured Replies

3482_1460100015_PhototasticCollage-2016-

வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாண சபையின் தீர்வுத்திட்டத்தை முஸ்லிம் உலமா கட்சி முற்றாக மறுத்திருப்பதுடன் இதனை எதிர்க்கும் தீர்மானத்தை முஸ்லிம் ஒருவரை கொண்ட கிழக்கு மாகாண சபை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
 

இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,

வடக்கு கிழக்கை இணைத்து விட்டு அதற்குள் முஸ்லிம்களுக்கென தன்னாட்சி பிராந்திய சபை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதானது கொடிய விசத்துடன் சீனி மிட்டாய் கலக்கப்பட்டது போன்ற வக்கிரத்தனமான செயலாகும். 

முஸ்லிம்கள் தமிழ் பேசுவோராக இருந்தாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் அல்ல. மாறாக ஆதி காலம் முதல் இலங்கையில் அறபு மொழியில் பேசி வந்த அவர்கள் தமது தமிழ் சூழல் காரணமாக தமிழ் பேசுபவர்கள். இன்றும் கூட அவர்களின் பேச்சு வழக்கில் 20 வீதத்துக்கும் அதிகமான அறபுச்சொற்கள் உள்ளன.

 
அத்துடன் முஸ்லிம்கள் தம்மை தனி இனமாகவே நோக்குகின்றனர் என்பதுடன் இது வரை காலமும் தமிழ் மக்களும் முஸ்லிம்களை தனி இனமாகவே பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் வட மாகாண முஸ்லிம்கள் தனியாக பிரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதே போல் 34 வீதமாக வாழும் மட்டக்களப்பு முஸ்லிம்கள் 4 வீத காணிகளுக்குள் முடக்கப்பட்டு தமிழ் பகுதிகளில் அவர்கள் சுதந்திரமாக காணிகள் வாங்கி வசிக்க முடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளதுடன் யுத்த காலத்தில் ஆயுத முனையில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகளும் பறிமுதல் செய்யப்பட்டமை  என்பது தமிழர் தரப்பால்  முஸ்லிம்கள், முஸ்லிம் இனமாக பார்க்கப்பட்டதனால்த்தான். அவர்களை தமிழ் அதிகாரிகள் கூட தமிழர்களாக பார்க்கவில்லை.
 
அதே போல் முஸ்லிம்களுடன் வாழ முடியாது என கோரியே கல்முனை தமிழர்கள் தமக்கென தனியான பிரதேச செயலகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இவ்வாறெல்லாம் தமக்கு வாசியான நிலைகளில் முஸ்லிம்களை வேறாக பார்ப்பதும் அதே போல் தமக்கு வாசி என வரும் போது முஸ்லிம்களையும் தமிழர்கள் என நடிப்பதும் தமிழ் அரசியல்வாதிகளின் தொடரான நிலைப்பாடாகும்.
 
ஆகவே வட மாகாண சபையின் மேற்படி பரிந்துரையை உலமா கட்சி மற்றாக நிராகரிப்பதுடன் கிழக்கு மாகாணம் தனியாக இருப்பதுடன் கிழக்கு தமிழ் மக்கள் விரும்பினால் அவர்களின் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைத்துக் கொள்ளலாம் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். அவ்வாறு நடந்தால்; கிழக்க மாகாண சபை சிங்கள மக்களையும் கொண்ட பெரும்பான்மை முஸ்லிம் மாகாணமாக இருக்கும்.
-எஸ்.அஷ்ரப்கான்-

http://battinaatham.com/description.php?art=3482

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தமிழர்களா என்று ஆராய்வது வீண்வேலை.   அதனால் பெரியளவு பயனெதுவும் கிடைக்கப் போவதில்லை.   வடகிழக்கு தமிழர் உள்ளூராட்சியமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வடகிழக்கு மாகாண சபையை ஏற்படுத்தும் அதே வேளை, முஸ்லீம் உள்ளூராட்சி சபைகளை சிங்களப் பெரும்பான்மையினரோடு இணைத்துவிடுவதே நடைமுறைச்சாத்தியமான செயன்முறையாகும்.

எல்லாம் பயம்.

தமிழன் என்று சொல்லப்படுகிறவன்,  முஸ்லிம் என்று சொல்லப்படும் தமிழனை,  தனது முழு  ஆழுகைக்குள்  கொண்டுவந்து  விடுவான்  என்பதும், வடக்குத் தமிழன்,  கிழக்குத் தமிழன் மேல்  தனது  ஆதிக்கத்தைக்  கொண்டுவந்து  விடுவான்  என்பதுந்தான், தம்மைத்  தமிழனென்று  தமிழனே தன்னை  அடையாளப்படுத்த  மறுக்கும்  காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.