Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார

Featured Replies

கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார
2016-04-25 08:30:33

இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விட­யங்­களில் எழும் பல கேள்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பதில் அளித்­தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரிவித்­துள்ளார்.

 

1621133.jpg

 

இங்­கி­லாந்தில் முதல்­தர பிராந்­திய கிரிக்கெட்  போட்­டி­களில் சரே அணிக்­காக விளை­யா­டி­வரும் குமார் சங்­கக்­கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

 

மீள் எழுச்­சிக்­கான காலப்­ப­கு­தியில் இலங்கை எதிர்­கொண்டு வரும் சிக்­கல்கள் குறித்து ஸ்டம்ப்பட் சேவையில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த குமார் சங்­கக்­கார, ‘‘பெரும்­பாலும் கடந்த இரண்டு வரு­டங்­களில் இலங்கை கிரிக்கெட் தொடர்­பான திட்­ட­மி­டல்கள் சரி­யாக அமை­ய­வில்லை.

 

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ ருந்து இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் விடை­பெற்றேன். என்­னோடு மஹே­லவும் விடை­பெற்­றி­ருந்தார்.

 

அன்று இலங்கை குழாமில் இடம்­பெற்ற பல வீரர்­க­ளு­ட­னேயே இலங்கை தொடர்ந்தும் விளை­யாடி வரு­கின்­றது. இந்­தி­யாவில் நடந்து முடிந்த அத்­தி­யா­யத்­திலும் அதுதான் நடந்­தது.

 

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் சிறப்­பாக விளை­யா­டிய இலங்கை அணி, நியூ­ஸி­லாந்தில் ஒருநாள் தொடரில் பிர­கா­சிக்­க­வில்லை. 

 

‘‘இப்­போது மீள் எழுச்­சியை நோக்­கிய காலக்­கட்­டதில் இலங்கை கிரிக்கெட் நகர்ந்­து ­கொண்­டி­ருக்­கின்­றது.

 

ஆனால், மீள் எழுச்­சிக்­கான நகர்வு சரி­யான பாதையில் செல்­கின்­றதா என்­ப­துதான் கேள்வி. மீள் எழுச்­சிக்­காலம் நீடிக்­காமல் இருப்­பதை உறுதி செய்யும் வகையில் கட்­ட­மைப்­பு­களும் செயல்­மு­றை­களும் சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்படு­கின்­ற­னவா என்­பது மற்­றொரு கேள்வி. 

‘‘ஆனால், இந்தக் காலப்­ப­கு­தியில் அணி வளர்ச்சி கண்­டி­ருக்­க­வேண்டும். வீரர்கள் ஓய்வு பெற்­று­வ­ரு­கின்­றார்கள்.

 

வீரர்கள் ஓய்­வு­பெ­றத்தான் செய்­வார்கள். அடுத்து வரும் வரு­டங்­க­ளிலும் வீரர்கள் ஓய்வு பெறு­வார்கள்.

 

இந்நிலை யில் எமது அதி சிறந்த வீரர்கள் பிர­கா­சிப்­ப­தற்கு தொடர்ச்­சி­யாக சரி­யான வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது.

 

அதற்­கான பதில் பெரும்­பாலும் இல்லை என்­றுதான் கூற­வேண்டும். அதிர்ஷ்­ட­வ­ச­மாக கிற ஹாம் போர்ட் எமது (இலங்கை) அணியைப் பொறுப்­பேற்­றுள்ளார்.

 

அணியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு என்ன செய்­ய­வேண்டும் என்­பது அவ­ருக்கு நன்கு தெரியும் என நான் எண்­ணு­கின்றேன்.

 

நீண்­ட­கால அடிப்­ப­டையில் அணி­களை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதை அவர் நன்கு அறிவார்.

 

இவ்­வா­றான சிர­ம­மான சூழ்­நி­லையில் அவரைப் போன்ற சிறந்த ஒருவர் கிடைத்­தி­ருப்­பது நன்மை தரும் விட­ய­மாகும். 

 

‘‘எம்­மிடம் சில திற­மை­வாய்ந்த வீரர்கள் இருக்­கின்­றார்கள். ஆனாலும், எவ்­வித சந்­தே­கத்­துக்கும் இட­மின்றி முதலில் எமது முதல்­தர கிரிக்கெட் விளை­யாட்­டுக்­கான கட்­ட­மைப்பு சீர் செய்­யப்­ப­ட­வேண்டும்.

 

தரா­தரம், இத­னை­விட சிறந்த போட்­டித்­தன்மை, திற­மையை வளர்ப்­ப­தற்கு வீரர்கள் மத்­தியில் விளை­யா­டு­வ­தற்­கான சவால் என்­பன உய­ர­வேண்டும்.

 

அத்­துடன், வீரர்கள் மத்­தியில் செயல்­திறன், உளப்­பாங்கு, பண்பு, அறிவுத் திறன் என்­பன அடிக்­கடி பரீட்­சிக்­கப்­ப­ட­வேண்டும்.

 

இதன் மூலம் 19 வய­தி­லி­ருந்து முதல் தர கிரிக்கெட் வரை மட்­டு­மல்­லாமல் முதல் தர கிரிக்­கெட்­டி­லி­ருந்து சர்­வ­தேச கிரிக்கெட் வரை அவர்­களால் இல­கு­வாக முன்­னேற முடியும்.

 

‘‘திற­மையும் செயல்­தி­றன்­களும் உள்­ளார்ந்த ஆற்­றல்­க ளும் இலங்கை கிரிக்கெட் துறையில் தாரா­ள­மாக இருக்­கின்­றன.

 

ஆனால், அந்தத் திற­மை­க­ளையும் செயல்­தி­றன்­க­ளையும் வெளிக்­கொ­ணர சரி­யான வழி கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்­பதே கேள்வி. இந்த கேள்­வி­க­ளுக்­கெல்லாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதி­ல­ளித்­துத்தான் ஆக­வேண்டும். அவை மிகவும் சரி­யா­ன­வை­யா­கவும் அமைய வேண்டும்.

 

‘‘இலங்கை கிரிக்கெட் வளர்ச்­சிக்கும் முன்­னேற்­றத்­திற்கும் முன்னாள் வீரர்­களும் தற்­கால வீரர்­களும் தங்­க­ளா­லான உத­வி­களை, ஒத்­தா­சை­களை வழங்­கு­வதை உறு­தி­செய்­ய­வேண்டும் என நான் கரு­து­கின்றேன். மேலும் நிர்வா­கத்­தி­லி­ருந்­து­கொண்­டுதான் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றைக்கு ஏதா­வது ஒரு வகையில் பெரிய அள­விலோ சிறிய அள­விலோ சேவை­யாற்ற வேண்டும் என்­ப­தல்ல. வெளியில் இருந்­து­கொண்டும் சேவை­யாற்ற முடியும்’’ என மிக விரி­வா­னதும், காத்­தி­ர­மா­ன­து­மான பதிலை அளித்தார்.

 

முதலாம் பிரிவில் சரே இங்­கி­லாந்தில் பிராந்­திய கிரிக்கெட் போட்­டி­களில் கடந்த வருடம் சரே பிராந்­திய அணிக்­காக இரண்டாம் பிரிவில் விளை­யா­டிய குமார் சங்­கக்­கார இவ் வருடம் முதலாம் பிரி­வில் ­வி­ளை­யா­டு­கின்றார்.

 

‘‘இவ் வருடம் முதலாம் பிரிவில் நாங்கள் விளை­யா­டு­கின்றோம். இது எங்கள் அனை­வ­ருக்கும் சவா­லாக அமை­ய­ வுள்­ளது. அதனை நான் ரசிக்­க­வுள்ளேன்.
ஓட்­டங்கள் குவிப்­ப­தென்­பது இயல்பு.

 

ஆடு­க­ளத்தின் நடு ­விற்கு சென்று ஓட்­டங்­களைக் குவிக்­கும்­போது அதற்கு மாற்று ஏற்­பாடு இல்லை.

 

சர்­வ­தேச அரங்­கி­லி­ருந்து ஓய்­வு பெற்­றதால் அவ்­வ­ரங்கில் அதற்­கான சந்­தர்ப்­பத்தை இழந்து விட்டேன் என்பதில் சந்தேகமில்லை.

 

ஆனால் வாழ்க்கை நகரும்போது அதற்கேற்ப நகரவேண்டும். சர்வதேச அரங்கிலிருந்து நான் ஓய்வு பெற்றிருந்தாலும் என்னில் இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை வருட கிரிக்கெட் எஞ்சியிருக்கின்றது என நான் கருதுகின்றேன்.

 

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு நான் சரி யான முடிவையே எடுத்தேன். எனக்கு ஒரு செய்தி வந்தது. ஆனால், எனது முடிவு சரியானதாக அமைந்தது’’ எனவும் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16211#sthash.ePRSl2UP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.