Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குசல் பெரேராவின் தடை நீக்கம்

Featured Replies

குசல் பெரேராவின் தடை நீக்கம்

 

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான  குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய குசல் பெரேராவுக்கு  ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழையானது என்று அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கிரிக்கட் சபையால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது.

Untitled-1_copy.jpg

http://www.virakesari.lk/article/6258

  • தொடங்கியவர்

நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்று கொண்டிருக்க மாட்டேன் : குசேல்

 

 

நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன். குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்ள முடியும் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தெரிவித்தார்.D33d0f3df.jpg

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான  குசல் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் ஊக்குமருந்து பாவித்திருக்கவில்லை என்பது தெரியவந்ததையடுத்து   சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை  நீக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற போதே குசேல் ஜனித் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'கூறுவதற்கு நிறைய உள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திலங்க சுமதிபால நேற்றிரவு எனக்கு அறிவித்தார். இதனையடுத்து உடனடியாக அவரை நேரில் சென்று சந்தித்தேன்.  

மீண்டும் கிரிக்கெட் களத்துக்குளு; வந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை நான் உட்கொண்டிருந்ததாக நிறைய பேர் என் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். ஆனால் ஒரு சிலர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 

எனக்கு எதிராக பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும் இன்று மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன். நான் தடைசெய்யப்பட்ட எந்த ஊக்க மருந்தையும் உட்கொள்ளவில்லை என்று கிரிக்கெட் சபையிடம் கூறியிருந்தேன். இதே நிலைப்பாட்டிலே நான் இருந்து வந்தேன். அது இன்று உண்மையாகியுள்ளது.

நாளை முதல் எனக்கு பயிற்சியில் ஈடுபட முடியும். அணியில் இணைவதற்கு முன்னர் கட்டாயம் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.

எனக்கு நிகழ்ந்த சம்பவத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விளையாட்டு மூலமே நிவர்த்தி செய்ய முடியும். எனவே எதிர்வரும் காலங்கங்கில் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று இந்த பாதிப்பை நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். எனது இழப்பை பணத்தால்  ஒப்பிட முடியாது. நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கமாகும்.

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக எனக்கு கூறமுடியாது. காரணம் எனக்கு சாதகமான முடிவே வந்துள்ளது.

 குற்றம் செய்யாமல் குற்றத்தை ஒத்துகொள்ள முடியாது. இதுவே எனது நிலைப்பாடாக இருந்தது. எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஏற்று கொண்டிருக்கவே மாட்டேன். நான் குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்வது.

இதேபோன்று என்னுடைய ஆதரவாளர்களும் என் மீது கோபம் கொள்ளவில்லை. இதனால் எனக்கு பெரிய அழுத்தம் இருக்கவில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/6312

  • தொடங்கியவர்
குசல் பெரேரா தொடர்பான கத்தார் பகுப்பாய்வு அறிக்கை தவறென ஐ.சி.சி. அறிவிப்பு: ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அமைச்சர் பாராட்டு
2016-05-13 11:47:00

(நெவில் அன்­தனி)

 

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரே­ரா­வுக்கு எதி­ராக சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவனை தடுப்பு முகவர் நிலை­யத்தின் கீழான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை வாபஸ் (ஐ.சி.சி) பெற்­றுக்­கொண்­டுள்­ளது.
அத்­துடன் அவ­ருக்கு முன்னர் விதிக்­கப்­பட்­டி­ருந்த தற்­கா­லிகத் தடை­யையும் நீக்­கு­வ­தாக ஐ.சி.சி. அறி­வித்­துள்­ளது.


இந்த விவ­கா­ரத்­தினால் குசல் பெரேரா எதிர்­கொண்ட சொல்­லொணா துய­ரங்­க­ளுக்கு வருந்­து­வ­தாக சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டேவ் றிச்­சர்ட்சன் தெரி­வித்­துள்ளார்.

 

16625kusal-perera1.jpg

குசல் பெரேராவை அமைச்சர் தயாசிறியும் திலங்க சுமதிபாலவும் வாழ்த்துகின்றனர்



கத்­தாரில் இயங்கும் ஆய்­வு­கூடம் முன்னர் தான் வெளி­யிட்­டி­ருந்த குசல் ஜனித் பெரே­ரா­வுக்கு தீங்கு விளை­விக்கும் வகையில் அமைந்த பகுப்­பாய்வு அறிக்­கையை வாபஸ் பெற்­றதை அடுத்தே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முடி­வு­றுத்­திக் ­கொள்­வ­தாக புதன்­கி­ழமை இரவு ஐ.சி.சி அறி­வித்­தது.


இதன் பிர­காரம் உடன் அமு­லுக்கு வரும்­வ­கையில் உள் ளூர் மற்றும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் குசல் ஜனித் பெரே­ரா­வுக்கு விளை­யாட முடியும் என சர்­வ­தேச கிரிக்கெட்  பேரவை அறி­வித்­துள்­ளது.


குசல் ஜனித் பெரே­ராவின் சிறுநீர் மாதி­ரியை கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய உலக ஊக்­க­ம­ருந்து பாவனைத் தடுப்பு முகவர் நிலை­யத்தின் கத்தார் ஆய்­வு­கூடம், பெரே­ராவின் உடலில் தடை­செய்­யப்­பட்ட 19 நொராண்ட்­ரொஸ்­டெ­னி­டியோன் என்ற ஊக்­க­ம­ருந்து கலந்­தி­ருப்­ப­தாக அறி­வி­தி­ருந்­தது.


இதனை அடுத்து குசல் ஜனித் பெரேரா இதற்கு விளக்­க­ம­ளிக்க வேண்­டி­ யுள்­ள­தாக உலகின் முன்­னிலை மருத்­துவ, விஞ்­ஞான, சட்ட நிபு­ணர்­க ளைக் கொண்ட சர்­வ­தேச கிரிக் கெட்  பேர­வையின் சுயா­தீன ஆய்வுக் குழு சபை தெரி­வித்­தது. இதன் விளை­வாக ஊக்­க­ம­ருந்து பாவனை தடுப்பு சட்ட விதி­களை பெரேரா மீறி­யுள்ளார் என கூறிய ஐ.சி.சி, அதன் அடிப்­ப­டையில் குற்­றச்­சாட்டு உறுதி செய்­யப்­படும் வரை பெரே­ரா­வுக்கு கடந்த டிசம்பர் 7ஆம் திக­தி­யன்று தற்­கா­லிகத் தடை விதித்­தது.


அன்­றி­லி­ருந்து பெரே­ராவின் சட்ட வல்­லு­நர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட ஐ.சி.சி, கத்தார் ஆய்வு கூடத்­தி­ட ­மி­ருந்து மேல­திக தக­வல்­களைக் கோரி­யி­ருந்­தது. இவ் வருடம் ஜன­வரி மாதம் பெரே­ராவின் பி மாதி­ரியை ஆய்வு செய்த கத்தார் ஆய்­வு­கூடம் பெரே­ராவின் உடலில்  19 நொராண்ட்­ரொஸ்­டெ­னி­டியோன் என்ற ஊக்­க­ம­ருந்து கலந்­தி­ருப்­பதை உறு­தி­செய்­தது.


எனினும் கத்தார் ஆய்­வு­கூடம் தவ­றாக அடை­யாளம் கண்­டி­ருக்­கக்­கூடும் என்ற அடிப்­ப­டையில் பெரேரா தொடர்­பான ஆய்­வு­களை சுயா­தீ­ன­மாக நடத்­து­மாறு பெரே­ராவின் சட்­டத்­த­ர­ணிகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இதனை அடுத்து, சுயா­தீன குழு­வினர் நடத்­திய ஆய்­வு­களின் மூலம் பெரே­ராவின் உடலில் இயல்­பா­கவே குறிப்­பிட்ட ஊக்க மருந்து கலந்­தி­ருக்க வாய்ப்பு இருக்­கின்­றது எனத் தெரி­வித்­தனர்.


இது குறித்து கத்தார் ஆய்­வு­கூ­டத்­திற்கு சர்­வ­தேச கிரிக் கெட் பேரவை அறி­வித்­ததை அடுத்து கேடு­வி­ளை­விக்கும் பகுப்­பாய்வு அறிக்­கையை கத்தார் ஆய்­வு­கூடம் நேற்­று­முன்­தினம் வாபஸ் பெற்­றுக்­கொண்­டது.
இதனை அடுத்தே பெரேரா மீதான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையை வாபஸ் பெறு­வ­தாக ஐ.சி.சி அறி­வித்­தது.


இது இவ்­வா­றி­ருக்க, உலக ஊக்­க­ம­ருந்து தடுப்பு முகவர் நிலை­யத்தின் (WADA – வாடா) கட்­ட­மைப்பு மற்றும் அமைப்பு ஆகி­யன குறித்து கிரிக்கெட் துறை பெருமை அடை­கின்­றது. வாடா அங்­கீ­க­ரித்­துள்ள தரா­த­ரங்­க­ளுக்கு அமை­யவே சிறுநீர் மாதி­ரிகள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் பெரே­ராவின் விட­யத்தில் கத்தார் ஆய்­வு­கூடம் வெளி­யிட்ட அறிக்கை சர்­வ­தேச கிரிக்கெட்  பேர­வைக்கு தொல்­லையைக் கொடுத்­துள்­ளது.


‘‘சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நடத்­தப்­படும் ஆய்­வு­களில் இது ஒரு மாறு­பா­டான சம்­பவம் என்­பதால் வாடா­வி­ட­மி­ருந்தும் ஆய்­வு­கூ­டத்­தி­ட­மி­ருந்தும் உட­னடி விளக்­கத்தை எதிர்­பார்க்­கின்றோம்’’ என சர்­வ­தேச கிரிக்கட் பேர­வையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டேவ் றிச்­சர்ட்சன் தெரி­வித்தார்.


‘‘பெரே­ராவின் சட்டவல்­லுநர் குழு­வி­னரின் விடா­முயற்சி மற்றும் உண்­மையைக் கண்­ட­றிய சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எடுத்­துக்­கொண்ட முயற்சி ஆகி­யன இல்­லா­ விட் டால் விளை­வுகள் வேறு­வி­த­மாக இருந்­தி­ருக்கும்.

 

மேலும் இந்த விட­யத்­தினால் தாங்­கொணா இன்­னல்­க­ளுக்கு பெரேரா உள்­ளா­ன­தை­யிட்டு பெரிதும் வருந்­துகின்றோம். இக் காலப்­ப­கு­தியில் அவர் பொறுமையுடன் செயற்பட்ட விதத்தை பாராட்ட விரும்புகின்றேன்’’ என்றார் றிச்சர்ட்சன்.


எல்லாவற்றுக்கும் மேலாக, ‘‘பெரேரா எந்தவொரு சந் தர்ப்பத்திலும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட் கொண்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். அவரது எதிர்கால கிரிக் கெட் வாழ்க்கை வளமாக அமைய வாழ்த்துகின்றோம்’’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி பாராட்டு


சுமார் நான்கு மாதங்­க­ளாக தற்­கா­லிகத் தடைக்­குட்­பட்­டி­ருந்த இலங்கை வீரர் குசல் ஜனித் பெரே­ராவை நிர­ப­ராதி என நிரூ­பிப்­ப­தற்கு சட்ட வல்­லு­நர்கள் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் எடுத்த நட­வ­டிக்கை பாராட்­டத்­தக்­கது என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் இத்­த­கைய துணி­க­ர­மான நட­வ­டிக்கை எடுத்­தி­ரா­விட்டால் குசல் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­க­மாட்டார் எனவும் அமைச்சர் நேற்று கூறினார்.


‘‘ஐ சி சி விதித்த தற்­கா­லிக தடை­யினால் குசல் ஜனித் பெரேரா எவ்­வ­ளவு பெருந்­தொகை வரு­வாயை இழந்­தி­ருக்­கின்றார் என்­பதை நான் அறிவேன். உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள், ஐ பி எல். கிரிக்கெட் போட்­டி­களில் அவர் பங்­கு­பற்றும் வாய்ப்­பு­களை இழந்தார். இதனால் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறு­வ­னத்­திற்கு இழப்பு ஏற்­பட்­டது. ஒரு­வேளை அவர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி யில் விளை­யா­டி­யி­ருந்தால் முடி­வுகள் வேறு மாதிரியாக இருந் திருக்கும்’’ என அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=16625#sthash.8Uvie1vd.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.