Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை

Featured Replies

ஒரு மில்லியன் டொலரை நஷ்ட ஈடாக கேட்க உள்ளோம் : கிரிக்கெட் சபை

kusal-janith-perera-sri-lanka-cricket-boஇலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது.

இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும்.

http://www.virakesari.lk/article/6340

  • தொடங்கியவர்
குசாலின் வழக்குச் செலவு: ஐ.சி.சி - இலங்கை முரண்பாடு
 
17-05-2016 02:48 PM
Comments - 0       Views - 13

article_1463484119-TamiliccslmukusLEAD-2இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, ஊக்கமருந்து விவகாரத்தில் தவறுதலாகச் சிக்கியமையால் செலவிடப்பட்ட தொகை தொடர்பாகவும் அதை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) மீளச்செலுத்த வேண்டுமா என்பது தொடர்பாகவும் தொடர்ந்தும் குழப்பம் நிலவுகிறது.

பல மாதங்கள் நீடித்த குசால் பெரேராவின் ஊக்கமருந்து தொடர்பான விவகாரத்தில், அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு, 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஊக்க மருந்துக்கெதிரான சர்வதேச முகவராண்மையால் அங்கிகரிக்கப்பட்ட கட்டாரிலுள்ள ஆய்வுகூடமொன்றில் ஏற்பட்ட தவறின் காரணமாக, இந்தக் குழப்பம் ஏற்பட்டிருந்தது. எனவே, இதற்கான செலவை, சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்க வேண்டுமென்ற கருத்து, இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரத்தில் காணப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த அச்சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, இவ்விடயத்தில் நட்டஈட்டை வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை, வாய்மூலமாகச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சபையின் தலைவர் திலங்க சுமதிபால, சர்வதேச கிரிக்கெட் சபையுடன் நேரடியான தொடர்பில் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், இவ்விடயம் தொடர்பான செய்தி வெளியாகிச் சிறிது நேரத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, இவ்விடயத்தில் நட்டஈடு வேண்டுமென்ற கோரிக்கையை, இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்தோ அல்லது குசால் பெரேராவிடமிருந்தோ பெற்றிருக்கவில்லை எனவும், அவ்வாறு நட்டஈட்டை வழங்குவதற்கு, வாய்மூலமாகவோ அல்லது எழுத்துமூலமாகவோ சம்மதித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இவ்விடயத்தில் கட்டார் ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட தவறுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபை பொறுப்பானது என்பதையும் அச்சபை ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எனவே இந்த விடயத்தில், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் குசால் பெரேராவுக்கும் ஏற்பட்ட செலவுகள், மீள வழங்கப்படுமா என்பது குறித்தும், இதுகுறித்து மேலதிக நடவடிக்கைகள், இலங்கையிலிருந்து எடுக்கப்படுமா என்பது குறித்தும், குழப்பமான ஒரு நிலையே நீடிக்கிறது.

- See more at: http://www.tamilmirror.lk/172486/%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%90-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%9F-#sthash.iJPP4da3.dpuf
  • தொடங்கியவர்

குசலுக்காக செலவு செய்த பணத்தை ஐ.சி.சி. செலுத்தாது!

 

குசல் ஜனித் பெரே­ராவை ஊக்­க­ம­ருந்து குற்­றச்­சாட்­டி­­லி­ருந்து விடு­விக்க இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் செல­வி­டப்­பட்ட தொகையை ஐ.சி.சி. செலுத்­தாது என்று அறி­வித்­துள்­ளது.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரரும், விக்கெட் காப்­பா­ள­ரு­மான குசல் ஜனித் பெரேரா ஊக்­க­ம­ருந்து உட்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்டில் கடந்த நவம்பர் மாதம் அவ­ருக்கு ஐ.சி.சி. இடைக்­காலத் தடையை விதித்­தது.

இந்தத் தடையை எதிர்த்து நடந்த சட்­ட­மூல நட­வ­டிக்­கையில் ஊக்­க­ம­ருந்து உட்­கொண்டார் என்ற அறிக்கை தவ­றா­னது என்றும், இதனால் குசல் மீது விதிக்­கப்­பட்ட தடையை உட­ன­டி­யாக நீக்­கி­வி­டு­வ­தா­கவும் ஐ.சி.சி. அறி­வித்­தது.

aeJDIX97240083945_main_kusal.jpg

இதை நிரூ­பிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் சுமார் 15 மில்­லியன் ரூபா செல­விட்­டுள்­ளது. இதை ஐ.சி.சி.யிடம் கோர­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­தது.

இந்­நி­லையிலேயே ஊக்­க­ம­ருந்து குற்­றச்­சாட்­டி­லி­ருந்து குசலை விடு­விக்க இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் செய்த செல­வு­களை மீண்டும் செலுத்த உடன்­பாடு இல்லை என்று ஐ.சி.சி. தெரி­வித்­துள்­ளது.

அதா­வது ஊக்­க­ம­ருந்து பாவனை தொடர்­பாக வாடா நிறு­வனம் சான்­றிதழ் அளித்­த­கட்டார் ஆய்வின் முடி­வுகள் தொடர்பாக தமக்கு பொறுப்பு கூற முடி­யாது என்று ஐ.சி.சி. தெரி­வித்­துள்­ளது.

எனினும் இந்த செலவுகளுக்கு பொறுப்பு கூறவேண்டியது யார் என விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/6552

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.