Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக நிலங்களை 'சுருட்டும்' மலையாளிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நிலங்களை 'சுருட்டும்' மலையாளிகள்!

ஜனவரி 05, 2007

கன்னியாகுமரி: அரேபியாவில் ஈட்டும் பணத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் நிலங்களை மலையாளிகள் சுரண்டி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

முப்போகும் விளையும் நஞ்சை, புஞ்சை நிலத்தையும் அபகரித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றும் ஒரு பெரிய வியாதி தமிழகத்தில் பரவி வருகிறது. சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இந்த வியாதி முற்றிவிட்டது.

அதே வியாதி குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதாக கேள்விப்பட்டேன். முப்போகம் விளையும் நஞ்சை நிலங்கள் எப்போதும் பச்சை பசேலென்று காட்சி அளிக்கும் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களில் கல்லை அள்ளிப் போட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றி வருகிறார்கள்.

அரேபிய நாட்டுப் பணம் கேரளாவுக்கு அதிகம் வருகிறது. அவர்கள் தான் இங்கு வந்து விளை நிலங்களை நமது விவசாயிகளிடம் இருந்து சுரண்டி நம் மக்களிடமே ரியல் எஸ்டேட்டாக மாற்றி விற்று வருகின்றனர்.

பொன் முட்டையிடும் வாத்தை கொல்வது மாதிரி தான் இது. எனவே தமிழகத்தில் விளை நிலங்களை ரியல் எஸ்டேட்டாக்குவதை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அனை விவகாரத்தில் ஒரு உத்தரவைப் போட்டு அணையை கையில் எடுத்து நீர் தேக்க அளவை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

7 மாத காலத்தில் திமுக ஆட்சியில் மிகப் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. முதலமைச்சர் ஒரு சாதனை சிகரமாக விளங்குகிறார். அவருடைய சாதனைகள் தொடர வேண்டும்.

விரைவில் அதிமுக ஆட்சிக்கு வரும் என ஜெயலலிதா சொல்வது அவரது சொந்தக் கருத்து. இதில் கருத்து கூற நான் விரும்பவில்லை.

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். அதே சமயம் கல்வி, வேளாண்மைத்துறைகளை கண்காணிக்க ஒரு நிழல் அமைச்சரவையை அமைக்க விரும்புகிறோம் என்றார் ராமதாஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்துமீறும் மலையாளிகளின் அடாவடத்தனத்தை அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டின் தேவிகுளமும் பீர்மேடு போன்ற வனப்புமிகு பிரதேசங்கள் மலையாளிகள் வசம் வீழ்ந்து விட்டன.

1950 களின் தொடக்கத்தில் நாஞ்சில் நாட்டை (தற்போது கன்னியாகுமரி மாவட்டம்) மலையாளிகள அபகரித்தபோது மார்ஷல் நேசமணி தலைமையில் தமிழர்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி நாஞ்சில் நாட்டை அவர்களிடமிருந்து மீட்டு தாய்த் தமிழகத்துடன் இணைத்தார்கள். அந்த இனமானத் தமிழர் நேசமணி போல் தற்போது உள்ளவர்களும் போராடவேண்டும்.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய காலகட்டத்தில் மலையாளிகளே தமிழர்களுக்கு எதிரிகள்.இந்திய அரசின் உயர் பீடத்தில் இருப்பவர்கள் மலையாளிகள்.இவர்களில் பலர் படித்தவர்கள் அறிவாளிகள்.இவர்களுக்கு தமிழர்கள் மேல் எப்போதும் எரிச்சல் பொறாமை.இதற்கு காரணம் தமிழ் மொழி செம்மொழி ஆகும்.இந்த பாக்கியம் அவர்களுக்கு எட்டவில்லை.இதை வைத்து பலவழிகளில் தமிழர்களை மேலிடத்திலிருந்து பழி வாங்குகின்றார்கள்.இது ஈழத்தமிழர்களுக்கும் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.