Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம்

Featured Replies

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம்


புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு மே மாதம் 13ம் திகதி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதன் போது கடந்த ஒரு வருட காலமாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத மரபணு பரிசோதனை அறிக்கை சமர்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி கொலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இரண்டு தவணையில் நடைபெற்று வருகின்றது. முன்னதாக கைது செய்யப்பட்ட பத்து பேருக்கும் ஒரு திகதியில் வழக்கு விசாரணையும் அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை வேறு ஒரு திகதியிலும், நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த 4ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது 'மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாக காரணம் தமக்கு உரிய பணம் செலுத்தப்படாமையே, பணம் செலுத்தப்பட்டதும் அடுத்த தவணையில் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க முடியும்' என ஜின்டேக் நிறுவனம் நீதிமன்றுக்கு அறிவித்து இருந்தது.

இந்நிலையிலையே இன்றையதினம் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது மரபணு பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சுவிஸ் குமார் தப்பியது எவ்வாறு இன்று தெரிய வரலாம்.

இதேவேளை பத்து சந்தேக நபர்களின் வழக்கு கடந்த 9ம் திகதி நடைபெற்றது. அந்த வழக்கு விசாரணையில்  புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவு இட்டு இருந்தார்.

அந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

சட்டத்தரணிகள் முன்னிலை ஆகலாம்.

அத்துடன் சந்தேக நபர்கள் சார்பில் யாழில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலை ஆவதில்லை என சட்டத்தரணிகள் தீர்மானித்து இருந்தனர்.

சட்டத்தரணிகளின் இந்த தீர்மானத்தால் நீதி நியாயத்தை நிலை நாட்டுவது கடினம் எனவும் இதனால் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலை ஆவது தொடர்பில் சட்டத்தரணிகள் தமது முடிவினை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் ஆகியோர் சட்டத்தரணிகளிடம் கோரி இருந்தனர்.


http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132279/language/ta-IN/article.aspx

எனவே இன்றைய தினம் சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரேயினும் முன்னிலை ஆக கூடிய சாத்தியங்கள் உண்டு.

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு

 

(மயூரன் )

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தனர்.

viththija_26102015_2.jpg

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டார். 

 

இந்நிலையில் கடந்த ஒருவருடத்தின் பின் குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இதேவேளை, பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிச்சென்றமை உட்பட ஏனைய விசாரணை அறிக்கைகளை அடுத்த வழக்கு விசாரணைகளில் சமர்ப்பிப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

 

கடந்த காலங்களில் மாணவி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைகள் 2 தடவைகளாக இடம்பெற்று வந்தன.

 

அதாவது முதலில் கைதுசெய்யப்பட்ட 10 சந்தேக நபர்களுக்கான விசாரணை ஒரு திகதியிலும் பின்னர் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை பிறிதொரு திகதியிலும் இடம்பெற்று வந்தநிலையில் எதிர்வரும் காலத்தில் இரு வழக்கு விசாரணைகளும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/6565

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.